எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்க லாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய் தார் அவர். தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார்.
அவற்றைப்பார்த்து உங்கள் ஒவ் வொருவருக்கும் முப்பது ஆண் டு ஆயுள்தருகிறேன். இந்த வாழ் நாள்போதும் என்பவர்கள் இங் கிருந்து சென்றுவிடலாம் குறை உடையவர்கள் இங்கேயே இரு ங்கள். தீர விசாரித்து அவர்கள் குறையைத்தீர்த்து வைக்கிறேன், என்றார் அவர்
கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர். மற்ற எல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்ட னர்.
முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? என்று கேட்டார்.
கடவுளே! என் நிலையைப் பாருங்கள். நான் நாள் தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து துன்பப் படுகிறேன். ஓய்வோ தூக்கமோ எனக்குக் கிடைப்ப து இல்லை. எப்பொழுதும் பசியால் துன்பப்படுகிறே ன். முதுகில் சுமையுடன் வரும் நான், தெருவோரம் முளைத்து உள்ள புற்களில் வாயை வைத்து விடுவேன். என்னை அடித்துத் துன்புறுத்து வார் என் முதலாளி. மகிழ்ச்சி கொடுமைகளை இல்லை. என் வாழ்க்கையே நரகம். இக்கொடுமைகளை எல்லாம் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என்மீது கரு ணைகொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள், என்று கெஞ்சி யது.
சரி! பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ் நாள் பதினெ ட்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.
இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது.
அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள் உன்குறை என்ன? என்று கேட்டா ர்.
கடவுளே நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமை யுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசை யைக் கூடக்கேட்க வேண்டும். அப் பொழுதுதான் எனக்கு மதிப்பு. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோருமே என்னை வெறுக்கின்ற னர். எனக்கு உணவும் கிடைப்பதில் லை, என்றது நாய்.
உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்றுகருதுகிறாய். குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பன்னிரெண்டு ஆண் டுகள் தான், என்றார் கடவுள்.
மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டுப் புறப்பட்டது.
குரங்கு கடவுளின் முன் குதித்து வந்து நின்றது. உனக்கு என்ன குறை ? என்று கேட்டார், கடவுள்.
பல்லைக் காட்டியக் குரங்கு, கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலம் ஆயிற்றே. அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனி தர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்ன வோ செய்கிறோம். இருந்தாலும் எங்க ளுக்குக் கிடைப்பவை அழுகிப்போன பழங்கள்தான். முதுமை அடை ந்துவிட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவமுடியாது. அப்பொ ழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகிவிடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறையுங் கள், என்று வேண்டியது.
இனி உங்களுக்குப் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள், என்றார் கடவு ள்.
குரங்கும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது. கடைசியாக இருந்த மனித னை அழைத்தார் கடவுள்.
உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்கவேண்டும்? என்று கேட்டார்.
கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அப்பொழுது தான் நாங்க ள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்க ள் குடியிருப்பதற்காக ஒரு வீட்டை க்கட்டிமுடித்திருப்போம். எல்லாக் கடமைக ளையும் முடித்துவிட்டு மகிழ் ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கு ம் காலம் அது.
நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் பரு வம் அது. இந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகு ம். முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப்போதவே போ தாது. எங்க ளுக்கு அதிக ஆயுள் வேண்டும், என்று வேண்டினான் அவன்.
இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாது. கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்களிடம் பெற்ற இருபது ஆண்டுக ள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண் டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சி தானே, என்று கேட்டார் கடவுள்.
மகிழ்ச்சிதான் என்ற அவன் கடவுளை வணங்கி விட்டுப்புறப்பட்டான். எதிர்கா லத்தில் என்ன நடக்கப்போகிறது என் பதை அறிந்தார் கடவுள். கூடுதல் ஆயு ள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக் காக அவர் வருத்தப்பட்டார்.
கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான். முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச் சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பயனுள்ளவனாக வாழ்ந்தான். ஏனென்றால் கடவுள் அவ னுக்கே கொடுத்த ஆயுள் இ து. அடுத்த பன் னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள். அதனால் அவன் இக்காலத்தில் கழுதையை ப்போலப் பிறர் சுமைகளை த் தூக்கினான். சூழ்நிலை யால் அடிபட்டுப் பசியாலு ம் பட்டினியாலும் வாடினா ன். நாற்பத்து இரண்டிலிரு ந்து அறுபது வரை நாயின் ஆயுள் அவனுடையது. இக்காலத்தில் அவ ன், தான் சேர்த்த பொருள்களைக் காவல்
காக்கும் நாய் போல வாழ் ந்தான். பிறர் அதைக் கைப்பற்ற வந் தால் குரைத்து வாழ்க்கை நடத்தி னான். அறுபதிலிருந்து அவன் வாழ் க்கை குரங்கு வாழ்க்கை தான். தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக்காட்ட வேண்டிய தாயிற்று. கிளைக்குக்கிளைதாவும் குரங்குபோல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறிமாறிச்செல்ல வேண்டிய தாயிற்று. அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக்குரங்கைப் போலக் காட்சி அளித்துப் பிறகு இறந்தான்.
shared by

naan padichathu.. naan ezhuthinathu ila… tks for ur share
naan padichathu than naan ezhuthinathu ila
Story is very good