மழைக்காலம் தொடங்கி, எந்நேரமும் மழை பெய்துகொண்டே இரு க்கிறது. இதனால் பலரும் சளி தொல்லையால் அவதிப்படுவர். சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் நடப்பவர்களுக்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உட லை எப்படிப் பராமரிப்பது என்ப தைப் பற்றி பார்ப்போம்.
மழை பெய்யும் காலங்களில் இர ண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீ ரில் குளித்தால் தோலின் நிறம் மாறாமல் இருக்கும். குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தேங்காய் எண்ணையை தடவிக் கொள்ள வும். அதேபோல் முழங்காலி ல் இருந்து கணுக்கால் வரை தேவையற்ற முடிகளை அகற் றும் பசை தடவி மசாஜ் செய் து கொண்டால் மழை நாட்க ளில் இந்த இடங்களில் (பங்க ஸ்) பூஞ்சை தாக்குதல் இருக் காது.
தினமும் இரவு படுக்கப்போகு ம் முன்பு, ஒரு சிறிது வெந்நீரை ஊற்றி, அதில் உங்கள் பாதங்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து கைவிரல் களால் மசாஜ் செய்யுங்கள்.
இப்படிச் செய்வதால் உடல் முழுவதும் உள்ள இறுக்கம் விடுபட்டது போல் இருக்கும். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது சு த்தமான தண்ணீரால் கால்களை நன்கு கழுவி, சுத்தமான துணியா ல் ஈரத்தை துடையுங்கள்.
குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அள வு வேப்பிலை போட்டு வைத்திருந் து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க லாம். பெண்கள் மழை நாட்களில் தவறாமல் மஞ்சள் தேய்த்துக் குளி க்க வேண்டும். ஏனெனில், கிருமி நாசினியான மஞ்சள் சருமத்தைப் பாதுகாக்கும்.
ஈரமான துணிகளை அணிந்து கொள்வதால் தோல் எரிச்சல், பூஞ் சை பாதிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, ஈரத்துணியைக் கழற் றியவுடன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணை தேய்த் து சிறிது நேரம் கழித்து கழு வி விடலாம்.
மழைக்காலத்தில் மருதாணி போட்டுக்கொள்வதை தவிர் ப்பது நல்லது. மருதாணி குளிர்ச்சி என்பதால் சளி பிடி த்துவிட வாய்ப்புண்டு.
Gd