Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆத்தீகரை பாதுகாத்த‍ நாத்தீகர்!

பல வருஷங்களுக்கு முன்னால் பெரியவா மெட்ராஸில் லஸ் சர்ச் ரோடில் பக்தர்கள் குழாமோடு நடந்து வந்து கொண்டிருந்தார். அதே மயம் அதே இடத்தில் பூர்ண கும்ப மரியாதை களோடு பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு  அழைக்க பெரியவாளை தாக்க திராவிட இயக்கத்தினர் கம்பு, கட் டைகளோடு தயாராக இருந்தனர் .இந்த செய்தி பெரியவாளுடைய பக்தர்களுக்குஎட்டியதும், அதிர்ந்து போனார்க ள்!

உடனேயே பெரியவாளிடம் சென்று “பெரியவா …  DKக்காரா அந்தப் பக்கம் கம்பு கழியோட நின்னுண்டு இருக்காளா ம்.. பெரிய எதாவுது அவமான ம்னா எங்களால தாங்க முடியாது. பேசாம வேற பக்கமா போய்டுவோம்.” என்று கெஞ்சினார்கள். கூட வே போலீஸ் நடந்து வந்தாலும் அதையும் மீறி பெரியவாளை தாக்கி விட்டால்?

பெரியவா சிரித்துக்கொண்டே “அவாளால என்னை ஒண்ணும் பண்ண முடியாது” அழுத்தந் திருத்தமாக கூறி விட்டு அருகில் இருந்த அம்பாள் கோவிலில் ஒரு நிமிஷம் கண்ணைமூடி ப்ரார்த்தனை பண்ணிவிட்டு மேலே நடக்க ஆரம்பித்தார். “திக், திக்” உள்ளத்தோடு TTK சதா ஸிவம் முதலான பக்தர்கள் பெரியவாளை அரவணைத்தாற்போல் நடந்து வந்தனர். இதோ! கம்பு கட்டை பிடித்தபடி நிற்கும் கூட்டத்தை “லோக க்ஷேமத்துக்காக” தண்டம் ஏந்திய மஹா பெரியோன் நெருங்கிவிட்டார்!

“எல்லாரும் கட்டையை எல்லாம் கீழ போட்டுட்டு,ஒதுங்கி நில்லுங் 
க! பெரியவங்க வராங்க! பெரி யவங்களை வழி மறிக்கறது, தாக்கறது அதெல்லாம் கூடாது! ஆமா, சொல்லிட்டே ன்! அவுங்க எங்க போகணு மோ அங்க பத்திரமா கூட்டிட்டு போயி விடவேண்டியது ஒங்க பொறுப்பு!” என்ற “கணீர்” குரலுக்கு உரிய ஈ வே ரா. பெரி யார் அங்கு வந்து கட்டளையிட்டார்.“நான்தான் சொன்னேனே! பாத்தேளா!” என்பதுபோல் ஒரு புன்ன கை பொதிந்த பார்வையை தன்னை சுற்றி நின்றுகொண்டிருந்த அடியவ ர்கள்மேல் வீசினார்பெரியவா. த்ராவிட கழகதொண்டர்கள், “தோடுடைய செவியன்” என்று பாடிய த்ரவிட சிசுவுக்கு ஞானப்பால் ஊட்டிய அம்பாளை தன்னுள் அடக்கிய பெரியவாளை பாதுகாப்பாக கொண்டுபோய் விட்டனர்.

– thanks to Muktha Ravi Sir on Facebook

One Comment

  • பெரியாரைப்பற்றி இன்னொரு விடயத்தையும் கேள்விப்பட்டேன் உண்மையா என்று தெரியவில்லை…பெரியாரின் காலில் ஒருவர் விழ அவனை எழுப்பி அடித்துவிட்டு நானே சுயமரியாதை என்று போதிக்கிறேன் நீ காலில் விழுகின்றாயா என கேட்டாரம்.சம்பவம் எனக்குப்பிடித்திருந்தது…அத்துடன் பெரியார் படமும் பார்த்திருக்கின்றேன்…நன்றாக இருந்தது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: