பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலம்.. நினைத்தாலே முக்தி தரும் சிற ப்புடையது திருவண்ணாமலை. சம்பந்தர், அப்பர், மாணிக்க வாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத் தலம். அடி, முடி காணமுடியாத மகா விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக் கும் ஆதி அந்தம் இல்லா த ஜோதிப் பிழம்பாக பிரமாண்ட அக்னி மலை யாக சிவபெருமான் ஓங்கி நின்று காட்சியளித்த திருத்தலம் இது. சிவ மும், சக்தியும் ஒன் றே என்பதை உணர்த்த அர்த்தநாரீஸ்வரராக வடி வம் எடுத்ததும் இந்த தலமே. சிவ பெருமான் அடி முடி காண முடியாத வன் என்று உணர்ந்த பிரம்மா மற் றும் விஷ்ணுவின் விருப்பத்தின்படி ஜோதி வடிவிலேயே சிவ பெரு மான் மலையாக விளங்கி நின்றார். அத்துடன் மலைக்கு கீழ்திசையி ல் அண்ணா மலையாராக லிங்கவடிவிலும் எழுந்தரு ளினார்.
சிவனின் இத்திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் கார் த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தன்று மலைஉச்சியில் ஜோதி தரிசனம் தந்தருள வேண்டு ம் என இருவரும் வேண்டினர். அந் த திருநாள்தான் கார்த்திகை தீபத் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டு ம் திருவண்ணாமலையில் கொண் டாடப்படுகிறது. கிருதா யுகத்தில் அக்னி மலையாக, திரேதா யுகத் தில் ரத்தின மலையாக, துவாபர யுகத்தில் தாமிர மலையாக காட்சி யளித்த சிவபெருமான் இந்த கலி யுகத்தில் கல்மலையாக, வானுயர்ந்து நிற்கும் அண்ணா மலையாக காட்சி தருகிறார். அண்ணாமலையின் 2,668 அடி உயர உச்சியில் சிவபெருமான் ஜோதி வடிவாய் காட்சியளிப்பதை தரிசித்தால் பிற விப்பயன் பெறுவதாக ஐதீகம்.
உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானி ன் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப் பிரபஞ்சமே இருண்டது. அனைத் து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற் பட்ட பாவத்தை போக்க பூவுலகி ல் காஞ்சிபுரம் கம்பை நதிக் கரையில் அன்னை காமாட்சியா க தவம் இருந்தாள். ஒருநாள் கம் பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாம ல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இத னால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனி
யில் எனக்கு இடபாகம் தந்த ருள வேண்டும் என சக்தி வேண் டினார். அதற்கு சிவ பெருமா ன், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தர விட் டார்.
அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத் தில் பவுர்ண மியும், கிருத்திகையும்சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடது புறமாக சுற்றி வா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட் கொண்ட சிவபெருமான் அர்த்த நாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவு கூர்ந்தே அண்ணா மலையில் மகாதீபம் ஏற்றப் படுகிறது.
ஊர் முழுக்க கோயில்கள்
திருவண்ணாமலை கிரிவல பாதையில் எண்ணற்ற கோயில்கள், ஆசிரமங்கள் உள்ளன. பழமைவாய்ந்த திருநேர் அண்ணா மலை யார் கோயில், கிரிவல பாதையில் அக்னி குளத்தையொட்டி உள்ள அக்னிலிங்கம், எமலிங் கம், சோணதீர்த்தம் அருகே உள்ள நிருதி லிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், சுயம்புவாக தோன்றிய குபே ரலிங்கம், கிரிவல பாதை யின் கடைசி லிங்கமான ஈசான்ய லிங்கம், கிரிவல பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளை யார் கோயில் ஆகியவை விசேஷ மா னவை. அண்ணாமலையை சுற்றி சுமார் 300 குளங்கள் உள்ளன. சிவனே மலையாக காட்சிதரும் அண்ணாமலை யின் மீது எவ்வித உருவ வழிபாடும், சன்னதியும் இல்லை.
ஆனால் மலையடிவாரங்களிலும், மலை உச்சிக்கு செல்லும் வழியி லும் மகான்கள் தங்கியிருந்த இட ங்கள் தற்போது கோயில்களாக உருமாறி இருக்கின்றன. குகை நம ச்சிவாயர் கோயில், பச்சையம் மன் கோயில், பவளக்குன்று கோயில் , பாண்டவர் கோயில், கன்னி மார்கோயில், வேடியப்பன் கோயில், தண்ட பாணி கோயில், பாவம் தீர்த்தகோயில், பெரியாண்டவர் கோயில், கண்ணப்பர்கோயில், அரவான்கோயில், அம்மன்கோயி ல் உள்ளிட்டவை அமைந்துள்ளன. மகான்கள் தவமிருந்த வண்ணாத் தி குகை, பவளக்குன்று குகை, அருட்பால் குகை, மாமரத்துகுகை, விருப்பாட்சிகுகை ஆகியவை வழி பாட்டுக்குரியவை.
பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திரு அண்ணா மலை யார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயி லுக்கு உள்ளே பேகோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணா மலை யார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிச னம் காணவேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தி ன் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணா மலை யார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணா மலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரி சனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.
பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்ட ராமர், சக்திதேவியின் திருவடிவ ங்க ள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணா மலை யாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச் சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண் ணாமலையை தரிசித்து தவமிருந்துபேறு பெற்ற சித்தர்கள், மகான்க ள், அருளாளர்கள் ஏராளம்.
அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞான தேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமண மகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமி கள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபா ணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவா மி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கிய மானவர்கள்.
கார்த்திகை ஜோதி மகத்துவம்
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியி ன் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன் றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத் தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொ ழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார் த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்த னைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிர ம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமி டத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயி ல்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்து ள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப் பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்று வதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவ ற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறு வோம்.
தொகுப்பு: தி.மலை நயினார்
விளக்கு ஏற்றுவது யாகத்துக்கு சமம்
கார்த்திகை மாதம் முழுவதும் தின மும் மாலையில் வீடுகளிலும் ஆல யங்களிலும் விளக்கேற்றி வழிபடு வது, அக்னியின் வாயிலாக ஆண்ட வனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தின ங்களிலாவது கண்டிப்பாக தீபம் ஏற்றவேண்டும். கார்த்திகை மாத த்தி ன் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வந்தால், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவ து மரபு.
நன்றி=> தினகரன்