தற்போது புழக்கத்தில் உள்ள வங்கி காசோலைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட இருக்கிறது. பல்வேறு பாதுபாப்பு அம்சங்க ளை கொண்ட புதிய அதி நவீன காசோலைகளை, வாடிக்கையா ளர்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு வங்கிகள் கேட்டு க் கொண்டு ள்ளன• பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஏராள மான தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இய ங்கி வருகின்றன.
இதன் பாதுகாப்பு சிறப்பம்சங்கள்
வங்கிகளில் சேமிப்பு, அல்லது நடப்பு கணக்குகளில் ஏதேனும் ஒன் றை அல்லது இரண்டையும் தொடங்கி, பல கோடி வாடிக்கையாள ர்கள் உள்ளனர். அந்த கோடி க்கணக்கான வாடிக்கையா ளர் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை, தங்கள் கணக்கி லிருந்து, தாங்கள் குறிப்பிடு ம் வேறொரு நபருக்கு கொ டுப்பதற்காக வங்கிகள் காசோலைகள் வழங்குகின் றன. தற்போது, ஒவ்வொரு வங்கியும், விருப்பத்திற்கேற் ற வகையில், வெவ்வேறு வண்ணத்தில் காசோலை அச்சிட்டு வழங்கி வருகின்றன.தற்போது நடைமுறையில் இருந்து வரும் காசோலைகளில் பல்வேறு முறைகேடு நடப்பதை தவிர்க்க வும், அதி நவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட, “சி.டி.எஸ். 2010′ தர காசோலையை அறிமுகப்படுத்த, ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள் ளது. இவ்வகை காசோலை ஒரே விதமாக, அனைத்து வங்கிகளிலு ம் பயன்படுத்தப்படும். இது, தற்போதைய காசோலையின் அளவிலே யே இருக்கும். இவை, புற ஊதாக்கதிர்களில் ஒளிராது.ரூபாய் நோட் டில் இருப்பதை போன்ற, நீர்க்குறி இடம் பெற்றிருக்கும். அதில் சி.டி. எஸ்.இந்தியா என பொறித்து, புற ஊதா மையில், வங்கியின் சின்னம் அச்சிடப் பட்டிருக்கும்.
நடைமுறை காசோலையில் எழுதியதை, ரசாயன பொருட்கள் மூல ம் திருத்தியிருந்தாலோ, வேறு வகையில் மாற்றம் செய்திருந்தா லோ எளிதில் கண்டறிய முடியும். வாடிக்கையாளர்களுக்கு இவ் வகை காசோலையை விரைந்து வழங்கி, உடனே நடை முறைப்படு த்துமாறு, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள் ளது. வரும் ஜனவரி மாதம் முதல், புதிய வகை காசோலை மட்டுமே செல்லத்த க்கது. எனவே, பாரத ஸ்டேட் வங்கி உட்பட பொதுத்துறை வங்கிகள், கரூர் வைஸ்யா பேங்க் உட்பட தனியார் வங்கிகள், இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. காலக்கெடு தற்போதைய காசோலைகள் டிசம்பர் 31ம் தேதி வரையே செல்லத் தக்கது என்பதால், வாடிக்கையாளர்கள் கைவசம் உள்ள காசோலை களை வங்கியில் அளித்து, புதிய காசோலைகளை பெற்றுக் கொள் ளுமா று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ok