இளம்பெண் வினோதினிக்கு நடந்தது என்ன? – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் – வீடியோ. இளம்பெண் வினோதினி மீது ஆசிட் வீச்சு…. ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!!!!!
காதலிக்க மறுத்ததால், “ஆசிட்’ வீச்சு ஆளான, பெண் பொறியாளரின் பார்வை பறிபோனது.காரைக்காலை சேர்ந்த பெண் பொறியாளர் வினோதினி, 27. சென்னையில் பணிபுரிந்துக் கொண்டிரு ந்த இவர்,கடந்த மாதம், 10ம் தேதி, தீபாவளி பண்டிகையை கொண்டாட, சொந்த ஊரு க்கு சென்றிருந்தார்.
அப்போது, இவருக்கும், இவரை ஒருதலையாக காதலித்து வந்த சுரேஷிற்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்தி ரமடைந்த சுரேஷ், வினோதினியின் முகத்தில், “ஆசிட்’ வீசினார். ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக, சென்னை, கீழ்ப் பாக்க ம் அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள், இர ண்டு வாரங்களாக முயன்றும், வினோதினியின் பார்வையை காப் பாற்ற முடியவில்லை. இதுகுறித்து, இம்மருத்துவமனையின், தீக் காய சிகிச்சை நிபுணர் ஜெயராமன் கூறியதாவது:உயிருக்கு ஆபத் தான நிலையை, வினோதினி கடந்துவிட்டார். ஆனால், “ஆசிட்’ வீச்சில், அவரது, இரு கண்களின் கரு விழிகளும் கருகியதுடன், பார் வை நரம்புகளும் பாதிக்கப்பட்டதால், வினோதினியின் பார்வை பறி போய்விட்டது. அதுபற்றிய ஓர் அலசல் இந்த அலசலில் நக்கீரன் கோபால், டாக்டர் ஷாலினி, பேராசிரியர். அருள் காமராஜ் அவர்கள் பங்கு பெற்று தத்தமது ஆதங்கங்களையும், கருத்துக்களையும் தெரிவித்தனர்