Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பகிரங்கமாக மேடையிலேயே முத்த‍ம் கொடுத்த‍ எம்.ஜி.ஆர்.

1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரு ம், பி.யு.சின்னப்பாவும் சினிமாத் துறை யை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர் களுக்கு பிறகு, மக்கள் திலக மும், நடிகர் திலகமும் இந்த இரு திலக மும் சேர்ந்து 1954ல் “கூண்டு கிளி” என்ற படத்தில் நடி த்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்க ளுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவி ல்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில் லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர் கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவு டைய அன் பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களது அன்புக்கு உரியவர்க ளாக இருந்தார்கள். சினிமாவில் இந்த இருவருக்கும் பெரும் அளவி ல் மதிப்பு இருந்தது. ரசிகர் களும் மிக அதிக அளவில் உருவானார்கள். தமிழ் நாடு மட்டும் இன்றி இந்தியா, மலே சியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை இப்படி உலக நாடு களிலும் ரசிகர் மன்றங்கள் ஏற்பட்டது.

இதேபோல் அரசியலில் உயர் ந்து நின்றார்கள். இருவருமே தனது இல்லங்களுக்கு தாய் பெயரை சூட்டினார்கள். இவர்கள் இருவரு க்கும் ராசியில் சற்று வேறுபாடு இருந்தது. ஆனால், ரசிகர்கள் ஒற்றுமை இல்லாமல் வளர்ந்து வந்தா ர்கள். சினிமாவில் இந்த ஒரு திலக ங்களுக்கும் திரைக்கதைபடி முடிவி ல் இறக்கும்படி எம்.ஜி.ஆர். “மதுரை வீரன் ” படத்தில் மாறுகால் மாறுகை வெட்ட ப்பட்டது. கட்ட பொம்மன் படத்தில் சிவா ஜிக்கு தூக்கு மேடை அமைந்து இருந்த து. இதை எப்படி ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று வினவும் போது, படத்தின் கதை அம்சம் இவர்க ளுடைய நடிப்பு இதுதான் ரசிகர்களு க்கு முக்கிய ம். கடைசி காட்சியில் தியேட்டருக்குள் இருப்பது இல்லை. எப்படி யோ அந்த இரு படமும் மிக அதிக நாள் ஓடி மிக மிக அதிகமான வசூலை கொடுத்தது. இப்படி இவர்கள் இரு வரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்து வந்தார்கள். இவர் களுடைய வாழ்க்கையில் இடை இடையே சிறு சிறு சறுக்ககல்கள் ஏற்பட்டா லும், புகழ்கள் உயர்ந்து கொண்டே வந்தது.

சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப் படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்… என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை…’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார்.

எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடு க்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்…’’ என்று அடம் பிடி த்து எம்.ஜி.ஆர் முன்னால் கன் னத்தை நீட்டுகிறார், நம்பியா ர். ‘நோ’ சொல்லி மறுத்து விடு கிறார், எம்.ஜி.ஆர்.

உலகம் அறிந்த இவர்கள் அண் ணன் முந்தியும், தம்பி பிந்தி யும் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டார்கள். அவர்க ளின் புகழ்கள் மட்டும் மறையவில்லை இவர்கள் இருவரும் திரை உலகுக்கு இரண்டு தூண்களாக இருந்தார்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍

 

One Comment

  • Ganeshkrishnan

    very nice article about two great actors, but no body can beat MGR at any time, still he live in our heart
    Ganeshkrishnan

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: