பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள்தான். கண்களை மட் டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவ ம் கொண்ட பெண்கள் முகம் எப்போ தும் பளிச்சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமை யான டிப்ஸ் இதோ .
புருவங்களின் முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிகவும் முக்கி யம். அதனுடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல் லது அரோமா எண்ணெய் கலந் து மசாஜ் செய்யலாம். இது புருவ ங்களில் உள்ள ரோம வளர்ச்சிக்கு உதவுவதுடன் அப்பகுதியில் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்குமுன் இரண்டு, மூன்று முறை கிள்ளி விடுவது போல் அழுத்தம் கொடுக்கவேண்டும். மசாஜ் செய் வதால் முடி அடர்த்தியாகவும், கரு மையாகவும் வளர உதவி செய்கி ற து.
தினசரி குளிக்க செல்லும் முன்பு புருவங்கள் மேல் எண்ணெய் தட வி ஊறிய பின்பு குளிக்கலாம். இது புருவங்களை அழகு படுத்துகிறது. புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது . சில பெண்கள் வாக்சிங் முறையில் புருவங்களில் உள்ள முடிகளை அகற்றுகின்றனர் இது தவறானது. இவ்வாறு செய்வதால் தசைகள் சுருங்கி தொய்ந்து போகிறது.
பிளேடு பயன்படுத்தி சிலர் புருவ முடிகளை சேப் செய்கின்றனர். இ து மிகவும் ஆபத்தானது. அவ்வாறு அகற்றுபவர்களுக்கு புருவங்களி ல் முடி விரைவாக வளரும். அது தவிர வளரும் முடிகள் மிகவும் திக் கா கவும், தாறுமாறாகவும் முறைய ற்றும் வளரும்.
புருவங்களில் நரைமுடி இருப்பின் மஸ்காரா பயன்படுத்தி கருமை யாக்கலாம். மஸ்காரா பிரஷ் சை காயவைத்து லேசாக நரை முடிக ளில் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் பயன்படுத்துவதை கா ட்டிலும் இதுபோன்று செய்வது அழகாவும், இயற்கையாகவும் இருக்கும்.
கண்களுக்கு அடிக்கடி ஐ பேட் உபயோகிக்கலாம் இதன்மூலம் கண் கள் குளிர்ச்சி அடைவதுட ன் புருவங்களும் நன்கு வளரும்.
– thanks to dinakaran