இன்றளவும் என்னை கவர்ந்த பழம்பெரும் நடிகை தேவிகா! இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், பெண்மைக்கே உரிய அச்சம், மடம், நாணம் மற்றும் பயிற்பு போன்ற நான்கையும் ஒருங்கே பெற்றிப்பவர். இவர் நடிக்கும் போதும் சரி, பாடல்வரிகளுக்கு வாயசைத்து நடிக்கும்போதும் சரி, முதலில் நடிப்பை வெளிப்ப டுத்துவது இவரது கண்களே எனலாம். ஆம், தேவிகா அவர் கள் நடித்த படங்களை இன்றும் நான் பார்க்கும்போதெல்லாம், ஒரு வித ஈர்ப்புடன் அந்த படங் களை பார்க்கத் தூண்டும் எத்தனை முறைவேண்டுமானாலும் பார் த்து ரசித்தும் இருக்கிறேன்.
தேவிகாவின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் ஆகும். இவருக்கு இவர து பெற்றோர் வைத்த பெயர் பிரமீளா. தனது சொந்தப் பெயரிலேயே, இரண் டாவது கதாநாயகியாக நடித்து வெற் றி பெற்ற தெலுங்குப் படம், “நாட்டிய தாரா” என்ற பெயரில் தமிழிலும் வெ ளிவந்தது. அக் காலக்கட்டத்தில் தேவி காவையும் அவரது நடிப்பையும் பார்த் தவர் கள் “யார் இந்த அழகு தேவதை?” என்று கேட்டு வியந்தனர்.
தமிழ்ப்பட உலகில் நாட்டியப்பேரொளி, பத்மினியும், நடிகையர் தில கம் சாவித்திரியும் கொடி கட்டிப்பறந்த காலக்கட்டத்தில், இவர்களு க்கு அடுத்த இடத்தைப் பெற்று, தமிழிலும், தெலுங்கிலும் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங் களில் தேவிகா நடித்துள்ளார். இந்த சம யத்தில் நடிகை பானுமதி “மணமகன் தேவை” என்ற படத் தை தமிழில் தயாரித்தார். கதாநா யகன் சிவாஜிகணேசன். இப்படத் தில் இரண்டாவது கதாநாயகியா க பிரமீளா (தேவிகா) நடித்தார்.
தமிழ்த்திரைப்பட்டத்தின் மீதுள்ள காதலால் தமிழித்திரையிலும் புக ழ் பெறவேண்டும் என்ற ஆசை பிரமீளா (தேவிகா)வுக்கு ஏற்பட்டது. அதற்காக, நல்ல நடிப்பு பயிற்சிபெற விரும்பி, அக்காலக் கட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய எஸ். வி.சகஸ்ரநாமத்தின் “சேவா ஸ்டேஜ் ” நாடகக்குழுவில் சேர்ந் தார். இந்த சமயத்தில் சேவா ஸ்டேஜ் நாடகங்களில் நடிகர் முத்து ராமன் நடித்து வந்தார். பிரமீளா தன் பெயரை “தேவிகா” என்று மாற் றிக் கொண்டார். நாடகத்தில் நடித்ததன் மூலம் , தேவிகாவின் நடிப் பில் மெருகு ஏறியது. தமி ழை அழகாகவும், திருத்தமாகவும் பேசக் கற்று க் கொண்டார்.
1957-ல் எம்.ஏ.வேணு “முதலாளி” என்ற படத் தைத் தயாரித்தார். இதில் கதாநாயகன் எஸ். எஸ்.ராஜேந்திரன். கதாநாயகி தேவிகா. பல படங்களில் துணை டைரக்டராக இருந்த “முக்தா” சீனிவாசன் டைர க்டராக அறிமுகமா னார். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, 1957 தீபாவளிக்கு வெளி வந்த இப்படம், பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களையும், பெரிய பேனர் பட ங்க ளையும் தோற்கடித்து மகத்தான வெற்றி பெற்றது. “ஏரிக்கரை மேலே போறவளே பெண் மயிலே … ஆபோகி ராகத்தில் அமைந்த அந்த பாடலை எஸ் .எஸ். ராஜேந்திரன் (டி.எம். சவுந்தரராஜ ன் குரலில்) பாட தேவிகா வயல் வெளி யில் நடந் து செல்வார். பாட்டும், இந்தக் காட்சியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதன் விளை வாக தேவிகா நட்சத்திர அந்தஸ்தை எட்டி ப்பிடித்தார்.
“பாவமன்னிப்பு”, “பந்த பாசம்”, “அன்னை இல்லம்”, “குலமகள் ராதை “, “ஆண்டவன் கட்டளை”, “கர்ணன்”, “முரடன் முத்து”, “சாந்தி”, “நீல வானம்”, “பழநி , பலே பாண்டியா போ ன்ற குறிப்பிடும் படியான நிறைய படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களு க்கு ஜோடியாக தேவிகா நடித்தார். . இவற்றில் நீல வானத்தில் தேவிகா நடிப்பு அற்புதம்.
“ஆண்டவன் கட்டளை” என்ற படத்தில் வரும் ஆழகே வா என்ற இந்த ப்பாடல், இக்கதையின் ஓட்டத்திற்கும், அந்த கதாபாத்ததி ரத்திற்கும் கட்டாயமாகத் தேவைதான் . அதை அளவோடு தந்திருப்பார்கள். அது வும் தேவிகா அவர்கள் பெரிதாக கவர்ச்சி ஏதும் காட்டாமல் தனது கண்களிலே யே உணர்ச்சிகளைக் காட்டி, சிவாஜி யை மட்டுமல்ல அந்த பாடலை பார்க் கும் நம்மையும் சுண்டி இழுப் பார்.
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் தேவிகா நடித்த “நெஞ்சில் ஓர் ஆலயம், “நெஞ்ச ம் மறப்பதில்லை” ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்கள் ஆகும்.
“நெஞ்சில் ஓர் ஆலயம், திரைப்படத்தில் சொன்னது நீதானா என்ற பாடல் வரிகளுக்கு வாயசைத்து நடித்ததோடு அல்லாமல் ஏதோ அவ ரே சிதார் இசைக்கருவியை இசைப்பது போலவே தனது விரல்க ளால் மீட்டுவதுபோல் நடித்திருப்பது அற்புதம்.
காதல் மன்னன் ஜெமினிகணேசனுடன் தேவிகா ஜோடியாக நடித்த “சுமைதாங்கி” மிகச்சிறந்த படம். இதை ஸ்ரீதர் டைரக்ட் செய்தார். எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் தேவிகா நடித்த “அன்பு எங்கே?”, ” வானம்பாடி”, “மறக்க முடியு மா?” ஆகிய படங்கள் குறிப்பிடத் தக்க வை. நாகேசுவரராவ், பாலாஜி, முத்து ராமன், ஜெய்சங்கர், ஆர்.எஸ். மனோகர், கல்யாணகுமார் ஆகியோருடன் இணை ந்து நடித்தவர் தேவிகா.
எம்.ஜி.ஆருடன் “ஆனந்தஜோதி” என்ற ஒரே ஒரு படத்தில் கதா நாயகியாக தேவிகா நடித்தார். பீம்சிங்கிடம் துணை டைரக்டராகப் பணியா ற்றிய தேவதாசுக்கும், தேவிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய ஒரே மகள் கனகா. “வெகுளிப்பெண்” என்ற படத் தை தேவிகா சொந்தமா கத் தயாரித் தார்.
இதை டைரக்ட் செய்தவர் தேவதாஸ். கதை- வசன ம் கலைஞானம். மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த தேவிகாவுக்கு ம், தேவதாசுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இருவரும் பிரிந்த னர். தமிழ், தெலு ங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளிலும் 150-க்கு மேற்பட்ட படங்களில் நடி த்த தேவிகா, பின்னர் பட உலகில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தார்.
அம்மா, அக்கா போன்ற வேடங்களி ல் நடிக்கவில்லை. குடும்பப்பாங்கா ன படங்களில் நடிக்கப் பொருத்தமா னவர் என்ற பெயரை தேவிகா பெற் றிருந்தார். சென்னை ராஜா அண் ணா மலைபுரத்தில் உள்ள தன் வீட்டி ல் தேவிகா வசித்து வந்தார். நெஞ்சு வலி காரணமாக, ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்ட தேவிகா 1-5-2002 அன்று மரணம் அடைந்தார். தேவிகாவின் மகள் கனகா பல சினிமா படங்களில் நடித்தார். நடிகர் ராமராஜனுடன் அவர் நடித்த “கரகாட்டக்கார ன்” 52 வாரங்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்.
தகவல் – மாலைமலர்
கூடுதல் தகவல்களுடன் மெருகேற்றியது – விதை2விருட்சம்