இப்படி செய்வதை ஒரு கிரிமினல் குற்றமாகவே கருத வேண்டும் என்று சொல்லி இருக்கிறது உச்ச நீதி மன்றம். காசோலையில் கை யெழுத்துப் போடுபவர்கள் யார் யார், தனித்துப் போடுவார்களா, கூட்டாகப் போடுவார்களா போன்ற நிபந்தனை களை வங்கி எழுதி வாங்கிக் கொள்கிறது. காசோலை தருபவர்கள் அதன்படியே தர வேண்டும். வேறு ஆட்கள் கையெ ழுத்துப் போடுவதோ, கூட்டாகக் கையெழுத்து போட வேண்டிய இடத்தில் தனியாகக் கையெழுத்து போடுவதோ கூடாது.காசோலை கொடுத்தபிறகு, கணக்கில் கை யெழுத்து போடுபவர்களை மாற்று வதால் காசோலையில் கண்ட கையெழு த்தும், ஏற்கெனவே வாங்கி
ய மாதிரிக் கையெழுத்தும் வேறு பட்டிருந்தால் காசோலை ரிட்டர் ன் ஆகிவிடும். இதையும் ஒரு கிரிமினல் குற்றமாகக் கருத வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவி த்துள்ளது.
இதுபோன்ற நிலைமைகளில் காசோ லை ரிட்டர்ன் ஆன 15 நாட்களு க்குள், காசோலை தந்தவருக்கு அந்த காசோலை ரிட்டர்ன் ஆகி விட் டதென்றும், எனவே,15 நாட்களுக்குள் பணத் தைச் திருப்பிச் செலுத்து மாறும் அறிவிப்பு தருவ து அவசியம். நல்லெண் ணம் கொண்டவர்கள் இந்த அறிவிப்பைக் கண் டதும் பணத்தைத் தந்துவிட்டாலும், அந்த தேதியில், உங்களது வங் கிக் கணக்கில் காசோலைக்கு ஈடாகப் பணம் இருந்தது என்பதும் நிரூபிக்கப் பட வேண்டும்.
நோக்கம் தவறாக இருந்தால் கையெழுத்து வேறுபாடு என்பதும் கிரி மினல் குற்றமே என்றுதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மழைக்காகிதத்தில் கிறுக்கப்பட்டது