திருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் இரண்டாவது தொட க்கம். அது ஆரோக்கியமாக அமைந்தால்தான், அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுமையாகவும் திருப் தியாகவும் தொடரும். திருமணத்து க்குத் தயாராகிற அல்லது திருமண மாகி, குழந்தைக்காகத் திட்ட மிடும் பெண்கள், முன்கூட்டியே தங்கள் உடல், மன ஆரோக்கியங்க ளைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை வலியுறுத்து கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
‘கல்லூரிப் பெண்கள்ல 30 சதவிகிதம் பேர் ரத்தசோகையால பாதிக் கப்பட்டிருக்காங்க. ஒல்லியாகணுங்கிற நினைப் புல கன்னாபின்னா ன்னு டயட் பண்றதும், ஜங்க் ஃபுட் சாப்பிடறதுமா இரு க்கிறதால, தேவையான சத்து உடம்புல சேராம, ரத்த சோகை வருது. இது அவங் களுக்குக் கல்யாணமாகி, கருத்தரிக்கிற போது பிரச்னைகளைத் தரும். ரத்த சோகை இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கான சரியான சிகிச்சையை எடுத்து க்கிறது பல பயங்கர பாதிப்புகளைத் தவிர் க்கும்.
அடுத்து ஃபோலிக் அமிலக் குறைபாடு. கல்யாண மானதும் மருத்துவரோட உதவியோட இந்தக் குறைபாட்டுக்கான மருந்துகளை எடுத்துக் கிட்டா, மூளை மற்றும் முதுகுத் தண்டுவடப் பிரச் னைகள் இல்லாத , ஆரோ க்கியமான குழந்தை பிறக்கும்.
தட்டம்மைக்கான தடுப்பூசி மிக முக்கியம்.
கர்ப்பமானதும் தட்டம்மை வந்தால், உறுப்புக் கோளாறுகளுடைய குழந்தை பிறக்கலாம். இந்தத் தடுப்பூசி போட்டுக்கிட்டு, 6மாதங்கள் கழிச்சுதா ன் கருத்தரிக்கணும். மாதவிலக்கு சுழற் சி முறை தவறியிருந்தா, அதுக்கும் சரி யான மருத்துவ ஆலோசனை அவசியம்.
சில பெண்களுக்கு பிறவியிலிருந்து பிரச்னைகள் இருக்கும். இதய நோய், வலிப்பு, சிறுநீரகப் பிரச்னை, நீரிழிவு… இதெல்லாம் உள்ள பெண்கள், கருத்தரிக்கிறதுக்கு முன்னாடி மருத் துவ ஆலோசனை யை அவசியம் எடுத்தாகணும். சில வகை இதய நோய் உள்ளவங்க, கருத்தரிக்கக் கூடாது.
குடும்பநல மருத்துவரைப் பார்க்கிறதுக்குப் பதில், அந்தந்த நோய்க் கான சிறப்பு மருத்துவரைப் பார்க்கறது நல் லது. ஏற்கனவே எடுத்து க்கிட்டிருக்கிற மருந் துகளை மாத்தி, கருவை பாதிக்காத அளவுக்கு பாதுகாப்பான மருந்துகளைக் கொடுக்க இது வசதியா இருக்கும். அடுத்து மார்பகக் கட்டி, கர்ப்பப்பை கட்டிகள் ஏதாவது இருக்காங்கிற சோதனையும் அவசியம்.
உடல் ரீதியான ஆலோசனை எவ்வளவு முக்கி யமோ, அதைவிட மனசுக்கான ஆலோசனையும் முக்கியம். கணவன் – மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து கல்யாணத்துக்கு முன் னாடியோ, கருத்தரிக்கிறது க்கு முன்னாடியோ ஒரு கவுன்சலிங் எடுத்துக்கலாம்.
கடைசியா குழந்தைக்கான திட்ட மிடல். உடனடியா குழந் தை வேணாம்னு நினைக்கிற வங்க, மருத்துவரோட ஆலோச னைப்படி, அவங்க உடல் பரிசோ தனைக்குப் பிறகு சரியான கருத் தடை முறையைத் தேர்ந்தெடுக் கலாம். சரியான திட்டமிடல் இல்லாம கருத்தரிச்சு, பிறகு அது வேணாம்னு கலைக்கிறவங்களுக்கு, கருக்குழாய் அடை ப்பு ஏற்பட்டு, பிற்காலத்தில் குழந்தையே இல்லாமப் போகலாம்.’’
நன்றி => சுலாஸி