Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உண்மையான காதல், இயல்பான காதல் எது தெரியுமா?

காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளை யாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோ ஜன், அட்ரினலின் போன்ற சுரப்பி களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்கின்றனர் அறிஞர் கள். அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறு ப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை. இயல் பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும்.
அதன்பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகித த்தில் கலந்திருப்பதே உண்மை யான காதலாகும்.. காதல் என்பது பாலியல் ரீதியானதாக வே இருக்கவேண்டும் என்பதில்லை. பெற்றோர்கள், குழந் தை கள், உறவி னர்களுடன் நீங்கள் மன ரீதியாக சாதகமான தொடர்பு களைக் கொண்டிருக்கும் போது, மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள். இத்தகைய மதிப்பு வாய்ந்த காதலா ல் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப் பட்டு ள்ளது.
மன விரக்தி:
காதல் சூழலில் வாழ்பவர்களுக்கு மன விரக்தி மற்றும் உள ரீதி யான துன்பங்கள் வருவது குறைவு என்கி ன்றன ஆய்வுகள். மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியு றுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையா வதும் அதிகம். அதே போல தனிமை ப்பட்டவர்கள் மன விரக்திக்கு ஆளா வது அதிகம் என்பதை பல ஆய்வு கள் தெளிவாகச் சொல்லியிருக்கி ன்றன.
மனப்பதற்றம்:
புதிதாக காதல் வயப்பட்டவர் களைவிட நீண்டகாலமாக நேசமான உறவில் இருப்பவ ர்களுக்கு மனப் பதற்றம் ஏற்படுவது குறைவு என கண் டறியப்பட்டுள்ளது. MRI பரிசோ தனைகள்மூலம் மூளையின் பகுதிகளை பரி சோதித்ததில் இது தெரிய வந் துள்ளது.
வலிகளைத் தாங்கும் தன்மை:
மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு உடல்வலி, தலை வலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளை யின் பகுதி அதிகமாகச் செயற் பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்ப தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள் ளனர்.
ரத்த அழுத்தம்:
மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்க ளைவிடக் குறைவாக இருக்கிறது. தனியாக இருப்பவ ர்களுக்க சற்று அதிகமாகவும் உள்ளது. மண முடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ் வதே முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
காய்ச்சல் அதிகம் வராது:
காதல்வயப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். இதனா ல் காய்ச்சல்போன்ற தொல்லை கள் அடிக் கடி ஏற்படாது. சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீண்ட ஆயுள்:
தனித்து இருப்பவர்களைவிட திரு மணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். திருமண உறவால், பரஸ்பர ஆதரவும், பிள்ளைகளின் உதவியும், நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்குமேலாக தாம் காதலிக்கப்படு கிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல் நலத் தையும் நீடித்த வாழ்வையும் கொடு க்கிறது.
காதலின் மிகப்பெரிய கொடை:
குடும்ப வருமானத்தையும் வாழ்க் கை வசதிகளையும்விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மன மொத்த காதலும் முக்கியமானது. அது ஆரோக்கியத்துடனும் தொடர் புடையது. இவை வெற்று வார்த் தைகள் அல்ல விஞ்ஞான பூர்வமா கவும் நிறுவப்பட்டுள் ளது என்பதைப் புரிந்து கொள் ளுங்கள். 
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: