முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டு மடங்கோ 100 மடங்கோ, இல்லை ஆயிரம் மடங்கு சிறந்தவை ஆகும். முரு ங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகரா வை விட பன் மடங்கு பயனளிக் கிறது. உறவில் முருங்கையின் பங்களிப்பு மகத்தானது.
ஆண்மை அதிகரிக்க :
முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டையும் சம அளவில் சேர்த்து, சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர் க்கடலையை வறுத்துப்பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண் தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக் கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங் கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோ கிக்கலாம்.
விந்து விருத்தியாக :
முருங்கைப்பூ 10, சுத்தமான பசும் பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம் பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தி யாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தா மலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.
காமம் பெருக :
முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சை யாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினா லும், உண்டபின் உடலில் காமத் தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டு ம். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண் ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக் கடைந்து, சோற்றுடன் சாப்பிட லாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காமஉணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால்,
அணையில் நீர்த் தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலை மோதி நிற்கும். வயகரா உண்ட வருக்கு ஒருவித மின் சாரம் தாக் கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலி லுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக் களிப்பு ஏகாந்த நடனமிடும்.
உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :
முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளு க்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலு றவில் இன்புறல் நீடிக்கும். சிலருக் கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொ ண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகி விடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.
உறவில் பரவசம் பெருக:
முருங்கைக் கீரையைப் பொடி யாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசுநெய் விட்டு , பொரித்து, இறுதியில் முட்டை யை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன் மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.
நன்றி – தினகரன்
Good