பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கி றது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லை களுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு, இரவில் அதிகம் வியர்த்தல், தூக்கமின்மை, அடிக்கடி கோபம், சலிப்பு, மறதி, மனஉளைச்சல், உடல் வலி போன்ற பிரச்னைகள் தாக்கும்.
சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச் னை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடை தல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும். பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்னைக ளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத் தால் கருப்பையை எடுக்க நேரும்போது, சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக் கின்றனர். ஆனால் கருப்பை எடுத் த சில ஆண்டுக ளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மெ ன்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளை வுகளை ஏற்படு த்தும்.
ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல், மார்பக புற்றுநோய் போன்ற பிரச் னைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது. பாதுகாப்பு முறை: அதிகமாக உதிரம் போதல், வலி, சிறிய கட்டிகள், வெள்ளைப் படு தல் ஆகிய வற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண் டாம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இருத்தல், வளர்ந்து கொண்டே போதல், கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போத ல் போன்ற வழியில்லாத கார ணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம். பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பை யை அகற்றக் கூடாது.
நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றா மலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச் சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும். கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்னைகளும் இருக்கும். கருப் பை வாயில் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு ள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். 24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கரு ப்பை மற்றும் சினை முட்டைப் பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ரெசிபி
ஆட்டு ஈரல் சூப்:

பனீர் கேரட் குருமா:
நூடுல்ஸ் கட்லட்:
டயட்
அடிக்கடி அபார்ஷன், அதிக டெலிவரி, மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, சிறுநீரகத் தொற்று, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற உடல் நலக் குறை பாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம். பரம் பரை காரணங்களாலும் பெண்களுக்கு வரலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அள வை சோதித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியம். அதே போல் உயரத்துக்கு ஏற்ற எடை யை பராமரித்தல், தினமும் வாக்கிங், சத்தான உணவு என்று வாழ்க் கை முறையை மாற்றிக் கொண்டால் தான் கருப்பையை காப்பா ற்றிக் கொள்ள முடியும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். இரு ம்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவு ம். குளிர்பானங்கள், பதப்படுத்தப் பட்ட உணவுகள், இனிப்பு வகை கள், ஐஸ் கிரீம், மாவுச்சத்து அதி கம் உள்ள உணவுகள், கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும் . அரிசி உணவுகளையும் குறை க்க வேண்டும். உணவில் ஒரு கப் சாதத்துடன் இரண்டு கப் காய் கறி இருக்குமாறு பார்த்துக் கொ ள்ள வேண்டும். கட்டாயம் ஒரு கீரை இருக்கட்டும். முளைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகிய வற்றை வாரம் இரண்டு முறை யாவது சேர்க்க வேண்டும்.
கருப்பையை எடுத்தவர்கள் ஒரு நாளைக்கு 1200 கலோரி அளவு க்கான உணவு மட்டுமே எடுத்துக் கொள் ளலாம். ஏனெனில் கருப்பை எடுத்த உடன் பெண்களின் எடை அதிகரிக்கும். மேலும் சாதத் துக்கு பதிலாக பழங்கள், கீரைகள் அதிகம் சாப்பிடுவது அவசியம் . இத்துடன் பிறப்புறுப்பு, கருப்பை வாய் ப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படாத வாறு சுத்தத்தை கடை பிடிக்க வேண்டி யதும் அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் தீரும்.
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட் டால் உடல் சூடு தணியும்.
மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங்காயத் தாள், காயவைத்த கறுப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பி ட்டால் மாதவிலக்கு ஏற்படும்.
விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வெள் ளைப்படுதல் குணமாகும்.
வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர் த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குண மாகும்.
வல்லாரைக் கீரை சாற்றில் பெரு ஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பி ட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.
லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அள வுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப் போக்கு நிற்கும்.
முள் இலவம்பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து பொடிசெய்து தினமு ம் காலை, மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்னை குண மாகும்.
முருங்கை கீரையை அடிக்கடி உணவி ல் சேர்த்துக் கொண்டால் கருப்பை பலப்படும்.