மைக்ரோவேவ் அடுப்பு’ (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத் தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா?’ – இந்தச் சந் தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை? எது புனைவு?
மைக்ரோவேவ் அடுப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
சாதாரணமாக மைக்ரோவேவ் அடுப்பில் காய்கறிகளைச்சமைத் து முடித்ததும் ஸ்விட்சை அணை த்துவிட, அதன் இயக்கம் முழுவ தும் நின்றுவிடும். ஸ்விட்ச் அணைக் கப்பட்ட நொடியில் மின் அலை கள் மறைந்து போவதால் அடுப்புக் குள் கதிர்வீச்சு எதுவும் இருக்காது. சமைத்த உணவிலும் எவ்விதக் கதிர்வீச்சின் தாக்க மும் இருக்காது. ஆனால், இதுவே அடுப்பில் கசிவு இருந்து அது தெரியாமல் சமைத்தால் நிச்சயம் பிரச்னை ஏற்படும். எனவே தர மான நிறுவனங்கள் தயாரிக்கும் அடுப்புகளையே பயன்படுத்த வேண் டும்.
மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கும்போது அதன் கதவை நன் றாக மூடி லாக்கான பிற கே சமைக்க வேண்டும். சரியாக மூடா விட்டால் கசிவு ஏற்பட்டுத் தீக்காயம் ஏற்படும். அடுப்பில் எதா வது பிரச்னை என்றால், உடனடியாகப் சர்வீஸுக்கு கொடுக்க வேண் டும்.
மைக்ரோவேவ் அடுப்பை வாங்கும்போது தரப்பட்ட கையேட்டை நன்றாகப் படித்த பின்னரே அதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். மைக்ரோவேவ் அடுப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை நாமே பழுது பார்க்க முயற்சி செய் யக் கூடாது.
‘மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் புற்றுநோய் ஏற்படும்’ என்று ஒரு பிரிவி னருக்கு அச்சம் இருந்தா லும் இது குறித்து எந்த ஆராய்ச்சி முடிவும் இது வரை வெளிவரவில்லை.
மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:
மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.
குறுகிய வாயுள்ள பாத்திரத் தைப் பயன்படுத்தக் கூடாது
முட்டையை ஓட்டுடன் வைக்க க்கூடாது.
வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்ப டிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய் விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் மற்றும் காகிதப்பொருட்களைப் பயன்படுத்தக்கூடா து. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்
தண்ணீரைச்சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெ னில் இதன் நுண் கதிர்களா ல் தண்ணீரின் மூலக்கூறு கள் அசைக்கப்பட்டுத் தான் தண்ணீர் சூடாகும். அதனா ல் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக் காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல