வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்த போது ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல பரிசுப் பொருள் வாங்கிக் கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். கணவர் வராததற்கு பொய் யான காரணம் ஒன்றை சொல்லி விட்டு, மண மக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள். பந்தி யில் உட்கார்ந்த வளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே. இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள். முறுக்கு கணவனுக்குப் பிடிக்கு
மே என்று அதையும் கைப் பைக்குள் வைத்துக் கொண் டாள். அவள் சாப்பிட்டதை விட, பிள்ளை களுக்கும் கண வனுக்கும் என பைக்குள் பதுக் கியதே அதிகம். ஒரு வழியாய் வீடு வந்து இறங்கி யவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்கு மாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளை பார்த்த தும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள் சொல் றதை கேட்கமாட்டேங்குது.. படின்னா படிக்கமாட்டேங்குது. சாப்பி டுன்னா சாப்பிட மாட்டேங்குது. அத்தனை பேரையும் அடிச்சு அ
ந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சி ருக்கே என்று பாய, அவளோ, அய்யய் யோ பிள்ளைகளை அடிச்சீங்களா.. என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..
உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள். விளக்கை போட்டவள் அதிர்ச் சியுடன், ‘ஏங்க இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது..
இல்லாள் என்றும் மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங் கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை . இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கை யை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது.
இந்த சூழ்நிலையில் ஒருகுடும்பம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண் டிருந்தால்தான். எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும். இதை உணர்ந்து வாழவேண்டும்.