Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு நடைபெறாமல் இருப்பதற்கு . . .

 பெண்கள் கர்பமாக இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தான் கர்பிணிகள் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்நேரத்தில் கருச்சிதைவு எளிதில் ஏற்படும். மேலும் இன்றைய மன அழுத்தம் அதிகம் சூழ்ந்துள்ள மற்றும் ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறையினால், நிறைய கருச்சிதைவானது நடைபெறுகிறது. அது மட்டுமின்றி, கர்பிணிகள் வீட்டிலே யே அதிக நேரம் தங்குவதில்லை. ஏனெனில் வாழ்க்கையை நன்கு நடத்து வதற்கு, கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. 

எனவே இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் ஒருசில செயல்க ளை மற்றும் உணவுகளை, கர்பத்தின் முதல் மூன்று மாதங்களில் செய்வதை அறவே தவிர்க்கவேண்டும். இதனால் கருச் சிதைவு ஏற்படும் வாய்ப்புக்கள் குறையும். சரி, இப்போது அந்த மூன்று மாதங்களில் கருச் சிதைவு நடைபெறாமல் இருப்பதற்கு என்ன வெல்லாம் பின்பற்ற வேண்டுமெ ன்று பார்ப்போமா!!! 
 
* சீஸ் உணவுகள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சீஸ் அதிகம் சாப்பிட்டால், அவை உடலில் ஒருவித அழற்சியை உண்டாக்கி, இறுதியில் கருச்சிதைவிற்கு வழிவகுக் கும். 
 
* பொதுவாக கர்பத்தின்போது மிகவு ம் கவனமாக இருக்கவேண்டும். குறிப் பாக முதல் மூன்று மாதங்க ளில் நீண்ட தூர பயணம் மேற் கொள்வதை தவிர் க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத் தில் வயிற்றில் இருக்கும் சிசுவானது நன்குவலிமையோடு இருக் காது. ஆகவே அப்போது உடலில் அதிகப்படியாக அசைந்தாலோ அல்லது குலுங்கினாலோ, அவை கருச்சிதைவை ஏற்படுத்தி விடும்.
 
 * ஜங்க் உணவுகள் சாப்பிடக்கூடாது. அவையும் கருச்சிதைவை உண்டாக் கும். ஆகவே நல்ல பழங்கள் மற்றும் வீட்டில் சமைக் கும் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தால், உடலையும், வயிற்றில் இருக்கும் சிசுவையும் ஆரோக்கியத்துடன் பெற்றெடுக்கலாம். 
 
* சிலநேரங்களில் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் கர்ப மாக இருப்பது தெரியாது. ஆகவே கர்பமாவதற்கு முயற்சிக்கும் போது, காபி அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றா ல், காபியில் உள்ள காப்ஃபைன் கருச்சிதைவை உண்டாக்கும். எனவே குழந்தையை நன்கு பெற்றெடுக்க வேண்டுமெனில் காபி குடிப்பதை நிறுத்த வேண்டும். 
 
* கர்ப்பமாக இருக்கும் போது அதிகமாக கோபமோ அல்லது மன அழுத்தமோ அடையக் கூடாது. ஏனெனில் அவ்வாறு மன அழுத்த த்தை உண்டாக்கும் ஹார்மோன் கள் கருப்பையில் ஒரு வித இறு க்கத்தை ஒருவாக்கி, கருவிற்கு அழிவை ஏற்படுத்தும். எனவே எந்த அளவு மன அழுத்தத்தை தவிர்த்து சந்தோஷமாக இருக்க முடியுமோ, அந்தளவு சந்தோஷமாக இருக்க வேண்டும். இவையே கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்கும் எளிமையான இயற்கை வழிகள். வேறு ஏதாவது தெரிந் தால், அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: