எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் எந்த வகையான பலன்கள் கிடைக்கும்
1. நேய்யில் தீபம் ஏற்றினால் . . .
நெய்தீபம் ஏற்றுவது சிறந்தது. நெய் தீபம் ஏற்றி, பரம்பொருளைத் துதித்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைப்பதோடு, இல்லத்தில் நன்மை கள் பெருகும்.
2. விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் . . .
விளக்கெண்ணெய் தீபம் தேக நலம் தரும். புகழ் ஓங்கும். நல்ல நட்பு வாய்க்கப் பெறும். ஆரோக்கிய உணவு கிடைக்கச் செய்யும். சுகங்கள் பெருகும். சுற்றத் தாரும் சுகம் அடைவர். இல்லற இன் பம் கிட்டும். எக்காரணத்தை முன்னிட்டும் கடலை எண்ணெயில் தீபம் ஏற்றக்கூடாது.
3.வேப்ப எண்ணெய்யில் தீபம் ஏற்றினால் . . .
வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண் ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றி னால் சகல சுகங்களும் சித்திக்கும். நன்மைகள் வந்து சேரும்.
4. ஐவகை எண்ணெய்களையும் கலந்து தீபம் ஏற்றினால். . .
நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் போன்ற ஐந்து எண்ணெய்களையும் கலந்து தீப மிட்டு ஒரு மண்டலம் பூஜை செய்தால் அம்பி கையின் அருள் தட்டாமல் கிட்டும். சகல நலன்களும் பெறலாம்.
எந்த திசையில் எந்த நேரத்தில் தீபம் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள்
பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் விடியற்காலை நேரம் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபமேற்றி வழிபடுதல் சிறப்பான தாகும். கிழக்கு திசை நோக்கி தீப மேற்றினால் வாழ்வின் அனைத் துத் துன்பங்களும் தீரும். மேற்கு திசை நோக்கி தீபமேற்றினால் கடன் தொல்லை தீரும், சனிபீடை தொலையும், வீட்டில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அகலும், குடும்ப ஒற்றுமை கூடும். வடக்கு திசை நோக்கி தீபமேற்றினால் செல்வம் பெருகும், திரு மணத் தடைகள் அகலும், மங்கள காரியங்கள் நடைபெறும். தெற் கு திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது.
தீபம் ஏற்ற எந்தவகையான திரிகளை பயன்படுத்தலாம்.
பஞ்சுதிரி போட்டு தீபமேற்ற மிக மிக உத்தமம். முன்வினைப் பயன்கள் தொலைய, செல்வவளம் பெருக தாமரைத் தண்டு நாரில் தீபம் ஏற்ற லாம். மழலை வரம் வேண்டுவோர் வாழை நாரில் தீபம் ஏற்றலாம்.
எத்தனை முகங்களில் தீபம் ஏற்றினால் எந்தமாதரியான பலன் கள்
ஒருமுகம் கொண்ட தீபம் ஏற்றினால், வாழ்வில் மத்திம மான பலன் ஏற்படும்; இரண்டு முக தீபத்தால், குடும்ப ஒற்றுமை ஓங்கும்; மும்முக தீபம், புத்திர சுகம் தரும்; நான்கு முக தீபம் பசு, பூமியால் லாபம் கிட்டும்; ஐந்து முக தீபம் செல்வவளம் மலை யெனப் பெருகும். புண்ணியங்கள் பெருகும்.
எந்த கடவுளுக்கு எந்தமாதிரியான எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்.
மகாலட்சுமியை நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும். நாராயண னுக்கு நல்லெண்ணெயையும் இலுப்ப எண் ணெயையும் கலந்து தீபம் ஏற்றி வழி படவேண்டும். விநாயக ரை தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். அம்பிகையை நெய், நல் லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண் ணெய், இலுப்பை எண்ணெய் கலந்து தீப மேற்றி வழி பட வேண்டும். அனைத்து தெய்வ ங்களையும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
நன்றி – தினகரன்