உறவுகளுக்குள் சண்டைகள் வருவது சாதாரண விஷயம். அவ் வாறு வரும் சண்டைகள் தான் அந்த உறவை நீண்ட நாட்கள் நிலைக்க வைக்கும். சண்டை வராத உறவுகளைவிட, சண்டை வந்தால் தான் நல்லது என்று நிறைய பேர் சொல்வார்கள். எந்த ஒரு சண்டையும் ஒரு நாளுக்குள் முடிந்து விட வேண்டும். இவ் வாறு வரும் சண்டையில் ஈகோ இருக்கவே கூடாது.
* வாழ்க்கை துணையுடன் சண்டை போட்டு, ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருக்கலாம். ஆனால் இரவு வந்தால், அந்த சண்டை யை சரிசெய்துவிட வேண்டும். ஏனெனில் இந்த நேரம் தான் இரு
வரும் அமைதியாக மனம் விட்டு பேச முடியும்.
அதிலும் படுக்கும்போது, துணை கோப மாக இருந்தால், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து, மற்றவரின் அருகில் சென்று அவர்களை கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து, அவர்களது கோபத் தை அடக்க வேண்டும். இவ்வாறு செய் தால், யாராக இருந்தாலும் உருகிவிடு வார்கள். அதுமட்டுமின்றி, படுக்கும் போது அவர் தள்ளிப் படுத்தால், அவரை த் தெரியாமல் தொட்டது போன்று தொட்டு விட்டு, உடனே சாரி என்று சொல்லிப் பாருங்கள்.
* சில நேரங்களில் துணையின் கோபத்தை போக்க ஆச்சரியமான
செயல்கள் கூட உதவும். சொல்லப் போனால், ஆரோக் கியமான வாழ்க்கையில் எதிர் பாராதவாறு ஆச்சரியம் கொடுப்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவரிடம் நிச்சயம் ஏதாவது ஒன்றை எதிர்பார்ப்பார் கள். அந்த எதிர்பார்ப்புகளை அவர்கள் கோபமாக இருக்கும் போது செய்தால், அதுவும் சண்டையை மறக்கச் செய்து, காதலை
அதிகரிக்கும்.


*சண்டை ஏற்படும்போது இருவ ருள் ஒருவர் சண்டைபோடுவ தை தவிர்க்க, அவர்களது மனதை திசைத்திருப்ப ஏதாவது ஒரு வித்தி யாசமான மற்றும் அவர்களது ஆர்வத்தை தூண் டும் ஏதாவது ஒரு தலைப்பைப் பற்றி பேச ஆரம்பித்தால், சில சமயங்களில் கோபத்தை மறந்து விட்டு பேசிவிடுவார்கள். பிறகு என்ன ஒரே சந்தோஷம் தான்.
*தம்பதிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தவறு செய்தது யாராக இருந்தாலும் இறுதியில் மன்னிப்பு கேட்பதும் அவ்வாறு மன்னிப்பு கேட் பவரை மன்னித்து விடுவதான் உறவை வலுப்படுத்தும் ஆம் என்னதான் சண்டைகள் கணவன் மனைவி இடையே இருந்தா லும், இந்த மன்னிப்பு என்ற வார்த்தைதான் அவர்கள் இருவரை யும் இணைக்கும் இணைப்பு பாலம் என்பது மறுக்க முடியாத உண்மை!
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!