Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்திய கிரிக்கெட் எங்கே செல்கிறது ?

இந்திய கிரிக்கெட்டில் ஒரு பிரச்னை, முடிவுக்கு வந்திருக்கிறது. இல்லை, புதிதாக ஒரு பிரச்னை முளைத்திருக்கிறது. கிரிக்கெட் நிபு ணர்களின் பலத்த கண்டனங்கள், மீடியாவின் இடைவிடாத இடித் துரைத்தல்களுக்குப் பிறகு, விடாப் பிடி யாக இருந்த சீனிவாசன், இப்போது சில காலம் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஜக்மோகன் டால்மியாவு க்கு விட்டுக் கொடுத்திருக்கிறார். பி.சி.சி.ஐ. செயற் குழுவில் உள்ள சரத்பவார், சஷாங்க் மனோகரை பரிந்துரைத்துத் தோல்வி அடைந்திருக்கிறார். பி.சி.சி.ஐ.-யில் இன்னமும் சரத்பவார் டால்மியா மோதல் தொடர்வதும், சீனிவாசன் தொடர்பான சிக்கல்கள் நீடிப் பதும் எந்தவிதத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு உபயோகமாகும்? ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சென்னை சூப்பர் கிங்ஸைச் சேர்ந்த குருநாத் மெயப்பன் கைது செய்யப்பட்ட பிறகு எல்லா பாரங்களும் சீனிவாசன்மீது விழுந்து விட்டன. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சக்தாலேவும், பொரு ளாளர் அஜஷிர்கேவும், ஐ.பி.எல். சேர்மனாக இருந்த ராஜிவ் சுக்லாவும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து சீனிவாசன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கோடிட் டுக் காண்பித்தார்கள். 
 
ஆனாலும் சீனிவாசன் தன் நாற்காலியை இன்ன மும் தக்கவைத்துக் கொண்டிருப்பது, பி.சி.சி.ஐ.யில் நிலவும் போட்டி அரசியல்களை அப்பட்டமாகக் காட்டிவிட்டது. இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் காங்கிரஸ், பி.ஜே.பி. உறுப்பினர்கள் உயர் பதவிகளி ல் இருப்பதால் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நடப் பதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது. வசதி படைத்தவர்களும் அரசியல்வா திகளும் பி.சி.சி.ஐ.-யின் முக்கிய மான பதவிகளில் அமர்ந்து கொண்டு பதவி சுகத்தை அனுப விக்கும் சூழலில் நியாயத்துக்கு ம் மனசாட்சிக்கும் இடமில்லாமல் போய்விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சீனிவாசன் வாங்காமல் இருந்தி ருந்தால், குருநாத் மெய்யப்பனை அணியின் உரிமையாளராக்காமல் இருந்திருந்தால் இன்று அவர் தம் பதவியை ஜாம்ஜாம் என்று அனுபவித்துக் கொண் டு இருக்கலாம். பி.சி.சி.ஐ., சி. எஸ். கே. என்கிற இரட்டைக் குதிரைச் சவாரி, தனக்குப்பின்னால் மிகப்பெரி ய தலை வலியைக் கொடுக்கும் என்று அவர் எப்படி அறியாமல் இரு ந்தார்? இறுதியில், சீனிவாசனின் நிர் வாக நேர்மையின்மீது எல்லோருக்கும் நம்பிக்கை போய்விட்டது. சூதாட்டப்புகார் குறித்து தோனி நிறைய பேச வேண்டும் என்று மீடி யா எதிர்பார்க்கிறது. காரணம், சீனிவாசன் பாணியிலான புகார்கள் இப்போது தோனிமீதும். தோனியின் விளம்பரங்க ளைக் கவனிக்கும் ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தோனிக்கும் சில பங்குகள் உள்ள னவாம். தோனியின் நண்பர் அருண் பாண்டே, ரித்தி ஸ்போர்ட்ஸை நிர்வகிக்கிறார். ரித்தி ஸ்போர்ட்ஸ் , சி.எஸ். கே. வுடனும் கைகோத்தி ருக்கிறது. இதனால், ரித்தி ஸ்போ ர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத் தில் உள்ள கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணி யில் நுழைய தோனி ஏதாவது உத வி செய்திருக்கிறாரா அல்லது மற்ற விளம்பர நிறுவனங் களுடன் ஒப்பந்தத்திலுள்ள வீரர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்திய அணியின் கேப்டன், சி.எஸ்.கே.வின் கேப்டன் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸின் வைஸ் பிரசிடெண்ட் ஆகிய முக்கியமான பதவிக ளை தோனி சுமப்ப தால், இப்போது சீனிவாசனுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையை இனி தோ னியும் சந்திக்க நேரிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. இன்று பல ருடைய கோரிக்கையாக இருப்பது, இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான். ஆனால் கிரிக்கெட்டை அரசே ஏற்று நடத்தினால், இந்தியாவில் மற்ற விளையாட்டுகள் போல கிரிக்கெட்டும் வளர்ச்சியடை யாமல் போகலாம். பதிலாக, பி.சி.சி.ஐ. தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக ளில் பண பலம், அதிகாரம் படைத்தவ ர்களை அமரவைக்காமல் இருந்தாலே போதும். நூறுகோடி பேருள்ள தேசத் தில் சிற ந்த நிர்வாகிகளுக்கா பஞ்சம்! ரசிகர்கள் டி.வி.யில் செலுத்தும் ஒவ் வொரு மணித்துளியும் பி.சி.சி. ஐ.க்குக் கோடிகளாக மாறுவதால், பி.சி.சி.ஐ. யின் எல்லாக் கணக்கு வழ க்குகளும் மக்கள் பார்வைக்கு நேரடி யாக வைக்கப்பட வேண்டும். ஆஸ்திரேலிய கிரிக்கெட்போல நேரடி யான நிர்வாகம் கொண்டுவர ப்பட வேண்டும். அதுதான் கிரிகெட் ரசிகனின் எதிர்பார்ப்பு!
 
மீண்டும் டால்மியா!
 
ஜக்மோகன் டால்மியா- 1979ல், பி.சி.சி.ஐ.க்குள் நுழைந்தவர். இவரு ம் ஐ.எஸ். பிந்த்ராவும் 1987 உலகக்கோப்பைப் போட்டி, இந்தியா வுக்குக் கிடைக்க முக்கியக் காரணகர்த்தா. 90களில் டால்மியாவி ன் முயற்சியால் தான் பணத்தில் புரள ஆரம்பித்தது பி.சி.சி.ஐ. 1997ல் ஐ.சி.சி. தலைவராகி கிரிக்கெட்டில் நீடித்து வந்த மேற்குலக ஆதிக்க த்தைத் தடுத்தார். ஒளிபரப்பு உரிமம், விளம்பரக் கட்டணம் மூலமாக எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்குப் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை பி.சி.சி. ஐ.க்கு மட்டுமல்ல, ஐ.சி.சி.க்கும் கற்றுத் தந்தவர் டால்மியா. 2001ல் பி.சி.சி.ஐ. தலைவர். 15 வருட ஆளுமை 2005ல் முடிவுக்கு வந்தது. சரத்பவார், பி.சி.சி.ஐ. தலைவரான பிறகு, வாரிய த்திலிருந்து தடை செய்யப்பட்டார் டால்மியா. 1996 உலகக் கோப்பையின் போது பண மோசடிசெய்த குற்றச்சாட்டால் அவர் மீது வழக்கு. ஆனால் பின்னா ளில், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆனார். மோசடி வழக்குகளிலிருந்து நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ‘நான் குற்ற மற்றவன் என்பதை நிரூபிக்க பி.சி. சி.ஐ. தலைவர் பதவி க்கு முயற்சி செய்வேன். என் எதிரிகளுக்குப் பதில்சொல்ல அது தான் பொருத்தமாக இருக்கும்’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டியளித்தார் டால் மியா. அது இந்த ரூபத்தில் வந்து பதிலளிக்கும் என்று டால்மி யாவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.  
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: