ஐயப்பனின் வாழ்க்கைச் சரித்திரத்தில், வாபர் என்கிற ஓர் இஸ்லாமியர் இடம்பெற்றிருக்கிறார். முதலில் ஐயப்பனின் வரலாற்று அறிவோம். பின் வாபரை பற்றி அறிவோம். (ஏனென்றால், ஐயப்பனின் வரலாறு தெரிந்தால்தான், வாபரின் பங்கு பற்றி தெளிவாக அறியமுடியும்)
ஐயப்பனின் வரலாறு:
.

தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித் தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜ சேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அக்குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந் தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.
எல்லா லட்சணங்களுடனும்கூடிய பாலகனும் பிறந்தான். அவனு க்கு ராஜராஜன் என்று பெயர் சூட்டினர். மணிகண்டனின் வருகை யால்தான் தனக்கு எல்லா நலன் களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டா பிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய் தார். இதை உணர்ந்த மந்திரி, மணி கண்டன் ராஜாவானால் தனக்கு ள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்வி டும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக் கப்பார்க்கி றான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது சூழ்ச்சியால் புலிப் பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக்
கொண்டுச் சொல் லச் செய்கிறான். இது சூழ்ச்சி என்று தெரிந்த போதிலும், மணி கண்டன், புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜைசெய்து மகிஷியினால் படும் துயரத்தைக் கூறினர். மணி கண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.
ஐயன் அவள்மேல் நர்த்தன மாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித் தாள். ஆனால் தான் பிரம்மச் சர்ய நிஷ்டையுள்ளவனானதா ல் அது சாத்தியமா காது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப் பக்கத்தில் மாளிகைப் புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கி வர ஐயன் அருள் செய்தார்.
மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணி கண்டனை பலவிதமாக துதித்து பூஜித் தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறை வேற்றுவத ற்காகப் பந்தளம் சென்றனர். புலிக் கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதி யடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெரு மையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனி டம் மன்னிப்பு கேட்டனர்.
மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலை கள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே! தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக் கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங் கள் என்றான். மணி கண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழு கிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழுந் தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக் கும் கோயில் கட்டும் படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.
மணிகண்டன் கட்டளைப்படி, அகத் திய முனிவரின் ஆலோசனை யுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலை யில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.
ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரி மலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப் பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள் பாலிக் கிறார்.
ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு

ஒருமுறை ஐயப்பன், வாபரை காணச்சென்றார். குழந்தையாக இரு ந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னை க்காணவரும் பக்தர்களை துன்பு றுத்தினால் உன்னை அழித்து விடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந் தைபோல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என் னை நீ துன்புறுத்தாதே! போய் விடு! என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாப ரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்று விட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட் டார்? உடனே ஐயப்பன் அவர் களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக் கிறேன் என்றார்.
இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணா தவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தர விட்டார்.
ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்று வரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படு கிறது. இப்பள்ளிவாசலில் பக்தர் களுக்கு இப்போதும் திருநீறு தருகி றார்கள். அங்கு விபூதி பூசியபிறகு தான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
so many versions of the story!