குடும்பத்தலைவர், தன்னுடைய மகன்க ள், மகள்கள், அப்பா, அம்மா, மாமனார், மாமியார், மருமகள், பேரக் குழந்தைகளுக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க முடியும். ஆனால், அவரது சகோதரர்,
சகோதரிக்கு மருத்து வக் காப்பீடு எடுக்க முடியாது. அதே போல, ஒரு மாமனார் நினைத்தால் மருத்துவக் காப்பீட்டில், மருமகனைச் சேர்த்துக்கொள்ள முடியாது. ஆனால் , மருமகன் தன்னுடைய மாமனாரை பாலிசியில் சேர்த்துக்கொள்ள முடியு ம்.
இந்த பாலிசியில் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தனித்தனியாகக் கு
றிப்பிட்டத் தொகைக்கு மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள முடியும். அதாவது, தாத்தாவு க்கு ரூ.4 லட்சத்துக்கும், 25 வயதில் இருக்கு ம் பேரனுக்கு ரூ.1 லட்சம் என்றும் தனித்தனி யாக எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. இல்லை எனில், அனைத்துக் குடும்ப உறுப் பினர்களுக்கும் மொத்தமாகச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட தொகையில் பாலிசி எடுத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் குறிப்பிட் ட தொகைக்குள் எவ்வளவு வேண்டுமானா லும் சிகிச்சை செய்து கொள்ளும் வசதியும் கூட இருக்கிறது.

இந்த பாலிசியில் பிரசவத்துக்கு க்ளைம் வாங்கிக்கொள்ள முடியும். ஒருவர் தன்னுடைய மகளைக் குறிப் பிட்ட ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலிசியில் சேர்த்திருந்தால்,
பிரசவத்தின்போது க்ளைம் வாங்கிக்கொள்ள முடியும். மேலும் புதிதாகப்பிறக்கிற குழந்தை க்கு, அடுத்த ப்ரீமியம் கட்டும் வரை க்ளைம் வாங்கிக்கொள்ள
முடியும். அடுத்த ப்ரீமியம் கட்டும் போது, அந்தக் குழந்தையை யும் பாலிசி யில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சில வீடுகளில், ஆண் வாரிசு இல்லாமல், பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள். இந்த நிலையில், பெண்கள் தங்கள் பாலிசியில் பெற் றோரையும் இணைத்துக்கொள்ளலாம். தேவை இருப்பவர்கள் இதையும் பரிசீலிக்கலாம்.