Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு ஆண் எப்படியிருக்க வேண்டும்?

சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா ஆண்களுக்கும்  எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் அவனை விட அதிர்ஷடசாலி வேறு யாருமல்ல. ஒரு இளம் ஆணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம். ஏற்கனவே சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்? என்பதை பார்த்தோம் இப்போது, சாமுத்திரிகா லட்சணப்படி ஓர் ஆண் எப்ப‍டியிருக்க‍ வேண்டும் என்பதை பார்க்க‍விருக்கி றோம்.
.
தலை:
.
ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம். பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.
.
நெற்றி:
.
அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திரு ப்பின் ஞானமும் செல்வம்.  மிகச் சிறுத்திருப்பின் மூடன். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர் ஷடம். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடம்.
.
கண்:
.
ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச் சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.
.
மூக்கு:
.
உயரமாய், நீண்டு, கூரிய முனை யோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர் களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.
.
வாய்:
.
அழகான,சிறிய வாய் உடையவர்க ள் புத்தி, சக்தி, கருணை உடைய வர்களாக, அறிஞர்களாக, பெரும் பதவியில் இருப்பவர்களாக இருப் பர். அகன்றும், வெளியே பிதுங்கி யும் உள்ள வாய் அதிகமாகப் பேசு ம். பிறர் செயலில் குற்றம் காணும் .
.
உதடு:
.
உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந் திருக்கும்.
.
கழுத்து:
.
ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷ டம். மிக உயரமாகவோ, மிகக் குட்டை யாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமை.
.
தோள்:
.
தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பி ன் அறிவு உண்டு. தோள்கள் இரண்டி லும் மயிர் அதிகம் இருந்தால் நினைத் த காரியம் முடியாது.
.
நாக்கு:
.
நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சா ளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்தி ருப்பின் அதிர்ஷடம். கருத்தும், வெளு த்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரம்.
.
பல்:
.
மெல்லிய ஒடுக்கமான பற்களை உடை யவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரம்.
.
காது:
.
காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.
.
கைகள்:
.
நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங் கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப் பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.
.
மணிக்கட்டு:
.
மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இரு ந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரம்.
.
விரல்கள்:
.
கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந் தால் அற்ப ஆயுள். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரச னாவான்.
.
மார்பு:
.
ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாக வும், ஒன்றோ டொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுள். ஆணின் மார் பகங்களில் உரோமம் இல்லாதிருப்ப து ஆகாது. அதிகமான ரோமம் இருப் பின் இச்சை அதிகம் இருக்கும்.
.
வயிறு:
.
பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இரு க்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேர னாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.
.
முதுகு: 
.
சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப் பட்டால் தரித்திரம்.
.
கால்கள்:
.
கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலு க்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.
.
கால் பாதம்:
.
கால் விரல்கள் ஒன்றோடொன்று நெரு ங்கி இருப்பின் புகழ் பெறு வான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல் மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித் தனியே விலகி யிருந்தாலும் வறுமை வாட்டும்..
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: