கல்விக் கடனைப் பெறுவதில் உள்ள பொதுவான பிரச்னைகளைப் பார்ப்போம்.
1. விண்ணப்பத்தைப் பெற அல்லது தர மறுப்பது !
ஒவ்வொரு வங்கியும், கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தைக்
கண்டிப்பாக தரவேண்டும். ஒரு மாண வருக்கு கல்விக் கடன் தரலாமா, வேண்டாமா என்பதை அந்த மாணவ ரிடமிருந்து விண்ணப்பம் பெற்ற பிற கே சொல்லவேண்டும். விண்ணப்பம் வாங்குவதற்கு முன்னதாகவே கடன் கிடையாது என சொல்லி, அவர்களை மரியாதைக் குறைவிற்கு ஆளாக்கு வது சரியாகாது. அதேபோல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கி கள் கட்டாயம் பெறவேண்டும். பெற்ற வுடன் விண்ணப்பதாரருக்கு பற்றுச் சீட்டு (Acknowledge) வழ ங்கவேண்டும் என்பதும் கட்டாயம்.
2. விண்ணப்பத்தைப் பரிசீலிக்க நீண்டகாலம் பிடிப்பது !
கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தைப் பெற்றதும் வங்கிகள் 15
நாட்களுக்குள் அதை பரிசீலித்து முடிவெ டுக்க வேண்டும். விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டால் தகுந்த காரணத்தோடு விண் ணப்பதார ருக்கு தெரியப்படுத்தவேண்டும். அப்படி தெரியப்படுத்தாதபட்சத்தில், வங்கி குறைதீர்க்கும் பிரிவில் மாணவ/ மாணவி யர் தெரியப்படுத்த லாம். வங்கி குறைதீர்க் கும் பிரிவிலிருந்து முறையான பதில் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என் றால், ஆர்.பி.ஐ. வங்கி குறை தீர்ப்பாளர் அலுவ லகத்தில் முறையிடலாம்.
3. மதிப்பெண்ணைக் காரணம் காட்டி கடன் தர மறுப்பது !
சில வங்கிகள் மதிப்பெண் குறைவாக இருக்கும் காரணத்தால் கல்
விக் கடன் தர மறுக்கின்றன. ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, குறைந்த பட்ச மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. வங்கியானது ஐ.பி.ஏ. நெறிமுறைக ளை அப்படியே அமல்படுத்தினால் மதி ப்பெண்ணைக் காரணம்காட்டி கடன் தர மறுக்கக்கூடாது.
ஆனால், ஒவ்வொரு வங்கிக்கும் இந்த நெறிமுறைகளில் சில மாற் றங்களைச் செய்ய அதிகாரம் இருக்கிறது. மேனேஜ்மென்ட் கோட் டாவில் (சுயஉதவிக் கல்லூரிகளில்) இடம் கிடைத்த மாணவர்களுக்கு குறைந் தபட்ச மதிப்பெண்ணைக் காரணம் காட்டி சில வங்கிகள் நிராகரிக்கலாம். அந்தக் கல்லூரிகளின் வளர்ச்சி, கல்லூரிகள் அமைத்துக்கொடுக்கும் வேலை வாய்ப்பு கள் போன்ற விஷயங்களில் குறைபாடு கள் இருப்பின் அதையும் காரணம் காட்ட லாம். ஆனால், மெரிட் தகுதியுள்ள மாண வர்கள் சுய உதவிக் கல்லூரியில் இடம் கிடைத்தால், ஐ.பி.ஏ. நெறிமுறைகளுக் கு உட்பட்டவர்களாவர்.
4. கடன் தர அடமானம் (Security) கேட்பது !
5. கடனில் அடங்கும் அங்கங்கள் !
சில வங்கிகள் கல்விக் கடனைக் கணக்கிடும்போது, வெறும் கல்
லூரிக் கட்டணத்தை மட்டும் எடுத் துக்கொள்ளும். ஐ.பி.ஏ. நெறிமுறை கள்படி, டியூஷன் ஃபீஸ் தவிர்த்து, தேர்வுக் கட்டணம், ஹாஸ்டல் கட் டணம், புத்தக கட்டணம் ஆகியவற் றையும் கணக்கில் எடுத்துக்கொண் டு, கடன் தொகையை மதிப்பிட வே ண்டும். இப்படி மதிப்பிடத் தவறினா ல் முன்னமே சொன்னதுபோல முத லில் புகார் தெரி விக்க வேண்டியது அந்த வங்கியினுடைய குறை தீர்க் கும் பிரிவில் தான்.
6. கடன் தந்தவுடன் திரும்பக் கட்ட சொல்வது !
ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, படிப்பு முடிவடைந்து ஒரு வருடத்திற்கு
ள் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதத்திற்குள் (எது முதலி ல் அமைகிறதோ) கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் தொடங்கும். அதற்கு முன் கட னைத் திருப்பித்தர வங்கியானது மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. ஆனால், வேலை கிடை த்தவுடன் கல்விக் கடனை திரும்பக் கட்டுவது மாணவர்க ளின் கடமை.
7. எல்லைகள் இல்லை!
இந்த ஊர்க்காரர்கள் இந்த வங்கியில்தான் கல்விக் கடனை பெற
வேண்டும் என்று எந்தவொரு நிபந்தனையும் கிடையாது. உங்க ள் வீடு அல்லது அலுவலகம் என அருகாமையில் உள்ள வங்கி கிளைக்குச் செல்லுங்கள். ஓர் இடத்திற்கு ஒரு வங்கி என்பது கல்விக் கட னுக்குக் கிடையாது. ஆகையால், கல்விக் கடன் பெற எந்த வங்கியையும் வேண்டியவர் கள் அணுகலாம்.கல்விக் கடனுக் கான விண்ணப்பத்தை வங்கிக் கிளையிலோ அல்லது வங்கியின் வலைதளத் திலோ பெறலாம். முழுமையாகப் பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்ப த்தைத் தகுந்த ஆவணங்களோடு (கவுன்சலிங் கடிதத்துடன்) வங்கி யிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
8. யாருக்கு கடன்..?
மாணவர்களுக்கு மெரிட் கோட்டாவில் இடம் கிடைத்தால் வங்கி
யானது ஐ.பி.ஏ. (I.B.A. – Indian Banks Association) நெறிமுறை கள் அடிப்படையில் (சில மாற்ற ங்களோடு) கடன் வழங்க வேண் டும். சுய உதவிக் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களு க்கு வங்கியின் பரிசீலனைக்குட் பட்டு கடன் வழங்கலாம். விண் ணப்பத்திற்கு முன் அந்த வங்கி யின் வலைதளத் தில் கல்விக் கடனுக்கான நெறி முறைகள் (குறைந்தபட்ச மதிப்பெண், வட்டி விகிதம், பிணையம்) ஆகியவற் றைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியம். வட்டிவிகிதம்
ஒவ் வொரு வங்கிக்கும் மாறுபடும். அதனால் குறைவான வட்டி கொண்ட வங்கியை அணுகுவது நல்லது.
ஐ.பி.ஏ. நெறிமுறைகளில் வங்கிகள் சில மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதால், எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கும் படிப்பு களுக்கு கல்விக் கடனை கொடுக்க வங்கிகள் தயக்கம் காட்டலாம். வங்கி கள் தரும் கால அவகாசத்திற்கு முன் பே கடனை அடைக்க வாய்ப்பு அமையும்பட்சத்தில், காலம் கடத்தா மல் கல்விக் கடனை முடித்து விடுவது நல்லது. மாணவர்களின்
வருங் கால வருமான வரவைப் பொறுத்து கடன் வழங்க வங்கி க்கு ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி வழிவகை இருக்கிறது என்பதை மனதில் இருத் திக்கொள்வது அவசியம்.
கல்விக்கடனுக்கான வட்டி மானியம் இந்திய அரசால் வழங்கப்படு
கிறது. குடும்ப வருமானம் வருடத்திற்கு 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்கு மாயின் அந்த மாணவர் வட்டி மானியம் பெறத் தகுதி கொண்டவர் ஆகிறார். ஆனால், இந்த மானியம் சில படிப்பு களுக்கு மட்டு மே பொருந்தும்.
கல்விக் கடன் என்பது ஒரு மாணவரின் முதல் கடன் என்பதால், அந்தக் கடன் அளவுக்காவது காப்பீட்டுத் தொகை எடுப்பது நல்லது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!