திருமணமான புதிதில், சில பெண்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறி கள் இவ்வாறு புதுமணப் பெண் களுக்கு தோன்றக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற் படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள் ளும் போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறு ப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகி விடுகின்றான். பெண்ணி
ன் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலே தான், அவள் தன் சிறுநீரை வெளியாக் கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்தா வின் துவாரம் அமைந்துள்ளது என்பத னை நாம் இங்கு நினைவு கூற வேண் டும்.
இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிரு மித்தொற்றினை தேனிலவு சிறு நீர்க் கிருமித்தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங் கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனில வு செல்வர். அப்படி தேனிலவு செல்லும் காலத்தில் தானே இத்தகு கிருமித்தொற் று ஏற்படுகின்றது? ஆகவே இந்தப் பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ள ன?