மனைப் பத்திரம்:
உங்களோட மனையை, சார் பதிவாளர் அலுவலகத்துல பதிவு செய்து வாங்குன பத்திரம்.
தாய்ப் பத்திரம்:
இப்போ இருக்குறதுக்கும் முந்தைய மனை பத்திரம்.
வில்லங்கச் சான்றிதழ்:
இன்னைய நிலைமையில மனை உங்களு க்குதான் சொந்தம்ங்குற தை உறுதிப்படுத் துற சான்றிதழ் இது. சார் பதிவாளர் அலுவலகத்துல விண்ணப்பிச்சு வாங்கணும். குறைஞ்சது 13 வருஷத்துக்கும், அதிகபட்சம் 20 வருஷ த்துக்கும் இந்த வில்லங்கச் சான்றிதழை வாங்கி வைச்சுக்குறது நல்லது.
சட்டக் கருத்து (லீகல் ஒப்பீனியன்):
இது வக்கீல்கிட்ட வாங்கவேண்டிய சான்றிதழ். இதை வாங்குறது க்கு, மனை பத்திரம், ஒரிஜினல் வில்லங்க ச் சான்றிதழ், தாய்பத்திரத்தோட ஜெரா க்ஸ், அப்ரூவ்டு மனையா இருந்தா அதுக்கான லே- அவுட் வரைபடம்.. எல்லாத் தையும் கொடுக்கணும்.
மனை விலை மதிப்பீடு அறிக்கை:
நீங்க வீடு கட்டப்போற மனையோட சந்தை மதிப்பு என்ன, அரசு வழிகாட்டி மதிப்பு எவ் வளவு, இந்த ரெண்டின் சராசரி என்ன.. இதையெல்லாம் கணக்குப் பண்ணி, அங்கீகாரம் பெற்ற இன்ஜினீ யர் ஒருத்தர் கொடுக்குற ரிப்போர்ட் இது.
அங்கீகரிக்கப்பட்ட பிளான்:
மாநகராட்சி/ நகராட்சி மாதிரியான உள்ளாட்சி அமைப்புகிட்ட வாங்க வேண்டிய கட்டட பிளான். கடன் வாங்கி வீடு கட்டுறதா இருந்தா முதல் லயே பிளான் போட்டு, உள்ளாட்சி அமை ப்புகிட்ட அப்ரூவலுக்கு விண்ணப்பிச் சா… சீக்கிரம் வீட்டு வேலையை ஆரம்பி ச்சிடலாம்.
கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு:
புதுசா வீடு கட்டுறதா இருந்தா அதுக்கான செலவு விவரங்கள்பத்தி விவரமா இன்ஜினீயர் தர்ற அறிக்கை. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுன்னா, அதை மதிப்பிட்டு இன்ஜினீயர் தரும் ரிப்போர்ட்.
வயதுக்கான ஆதாரம்:
கடனைத்திருப்பிச் செலுத்துற காலத்தை முடிவு செய்யறதுக்கு வயசு ரொம்ப முக்கிய ம். 10 அல்லது 12-ம் வகுப்பு மார்க் லிஸ்ட் அல் லது டி.சி-யே போதுமானதுதான். பொதுவா 21 வயசு முடிஞ்சிருந்தாதான் வீட்டுக் கடன் தரு வாங்க. சில வங்கிகள் இதை 25 வயசுன்னு நிர்ணயிச் சிருக்கு. வீட்டுக்கடன் வாங்குறதுக் கான அதிகபட்ச வயசு 55.
வருமானச் சான்றிதழ்:
நீங்க வேலை பார்க்கிற அலுவலகத் தோட லெட்டர் பேடுல, உங்க ளோட சம்பள விவரங்களை தெளிவா குறிப் பிட்டு வழங்கப்படுற சான்றிதழ். பொ துவா, ஒரு நிறுவனத்துல மூணு வரு ஷத்துக்கு மேல நிரந்தரப் பணியில இருக்குறவங்க ளுக்குத்தான் வீட்டுக் கடன் கிடை க்கும்.
வங்கி பாஸ்புக்:
கடந்த ஆறு மாச காலத்துக்கான வங்கி பாஸ்புக்கின் நகல்.
வருமான வரி செலுத்திய விவரம்:
வருமான வரித் துறை வழங்குற நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையின் நகல், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செஞ்ச படிவத் தோட நகலையும் கொடுக்கணும். சுயதொழில் செய்யற வங்க இதை அவசியம் கொடுக்கணும்.
இருப்பிட முகவரிக்கான ஆதாரம்:
குடும்ப அட்டை/ வாக்காளர் அடை யாள அட்டை.. இதுல ஏதாவது ஒண்ணோட ஜெராக்ஸ்.
புகைப்படம்:
மார்பளவு புகைப்படங்கள் 3- தேவைப்படும்.
இதையெல்லாம் தவிர, தேவைப்பட்டா கடனுக் கு ஜாமீன் குடுக்க யாரைச்சும் கேரன்டி கையெ ழுத்து போடச்சொல்லிக் கேட்க வாய்ப்பிருக்கு. வருமான வரி கட்டுற யாரும் இந்த கேரன்டி கை யெழுத்துப் போடலாம். தேசிய சேமிப்பு பத்திரம், ஆயுள்காப்பீடு பத்திரம் இதையும் ஜாமீன் தொகைக்கு இணையா கொடுக்கலாம்.
aurmaiyan message