வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகா ப்பான வாழ்க்கையை வாழவிரும்புவார் கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறை யானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ண ம் ஏற்படாது. வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரு ம்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லா மல் இருப்பது என்று திருமணத்தை தள் ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். திரும ணம் ஆகாமல் தனியாக இரு ப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க் கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை. ஆனால் வாழ்க்கையில் மனை வி என்ற ஒரு
பெண் முக்கியத்துவம் பெறும் ஒரு வே ளை கண்டிப்பாக வரும். அந்த நிலைக்கு வந்துவிட்ட பின்னும், இன்னமும் கூட உங்களுக்கு தகுந்த பெண்ணை கண்டு பிடிக்க திணறினால், உங்களுக்குள் இரு க்கும் பிரச்ச னைகளை என்னெவென்று ஆராய வேண்டும். சரி, நீங்கள் திருமண ம் ஆகாமல் தனியாக இருப்பதற்கான முக்கியமான 10 காரண ங்களை இப்போது பார்க்கலாமா… ஆண்களுக்கு திருமணமாகாமல் இருப்பதற் கான 10 முக்கிய காரணங்கள்!
உங்களுக்கென்று ஒரு உலகம் என்று எப்போதும் ஒரு கோட்டிற்குள் ளேயே வாழ்கிறீர்களா? அந்த உலகத்தை விட்டு வெளிவரவும், உங்கள் மனம் இடம் தரவில்லையா? அப்படியானால் உங்க ளை சுற்றி உள்ளவர்களை, நீங்கள் அலுப்புத் தட்டி தூங்க வைத்து விடுவீர்கள். அவர்களி டம் பேச சில நினைவுகள் மட்டுமே உங்களிடம் இரு க்கும். சிறிது காலம் கழித்து சொன்ன கதையை யே திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக் கும். இதில் பெரிய கொடுமை என்னெவென்றால், அலுப்புத்தட்ட வைக்கும் குணாதிசயம் உடையவர் என்று உங்களுக்கு தெரிந்திருந்தும், அதனை
இரகசியமாக வைத்திருக்க மாட்டீர்கள். ஒரு பெண்ணை உங்களால் சிரிக்க வைக்க முடிந்தால், அவளை என்ன வேண்டுமானா லும் செய்ய வைக்கலாம் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
உங்களையே விரும்புகிறீர்களா? நீங்கள் உங்கள் மீதே அதிக காதல் கொண்டவராக உள்ளீர்களா? அதை தவிர வேறு எதுவும் உங்களை கவர வில்லையா? அப்படியானால் அதிக கவர்ச்சியுடன் அழகான பெண்ணை கண்டபோ திலும் கூட, உங்கள் மனதில் “அவளை விட நான் தான் அழகு” என்ற எண்ணம் தான் இருக் கும். மற்றவர்களின் மேல் குற்றம் கண்டு பிடி ப்பது சுலபம். ஆனால் கடினமானது, நம்மீது உள்ள குறைகளை நாம் உணர்வ து. நீங்கள் இந்த வகை ஆணாக இருந்தால், ஏன் இன்னு ம் திருமண பந்தத்தில் ஈடுபடவில்லை என்று இப்போது புரிந்திருப்பீர்கள்.
இந்த தலைமுறையை சேர்ந்த விளையாட்டு விரும்பிகள், கணிப்பொறி முன் அமர்ந்து விளையாடுவதில் அலாதி காதல் கொண்டுள்ளனர். அவர்களை பொறுத்த வரை ,விளையாட்டில் எதிரிகளை வீழ்த்தி, முதல் இடத்தை அடைந்து, உலக பதிவை உடைத் தெறிந்தால் தான் இடை வேளையே விடுவார்கள். ஆகவே இவ்வகை யை சேர்ந்தவராக இருந் தால், ஏன் உங்களுக்கு இன்னும் காதலி இல் லை என்பது தெளிவாக புரிந்திருக்கும். அப்படியே ஒரு பெண்ணை தேர்ந் தெடுத்தாலும், ஒன்று நீங்கள் மாற வேண்டும் அல்லது அவள் உங்களுக்காக மாற வேண்டும்.
சுதந்திரமாக இருப்பதை தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் வாழ் க்கையில் ஏன் பெண் ஒரு அங்கமாக இல்லை என்பது உங்களுக்கு சொ ல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. பொது வாக பெண்களுக்கு ஒரு உறவில் ஈடுபடுவது என்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும். அவ ர்களை விட்டுவிட்டு வேறு பெண்ணை நீங்கள் நாடலாம் என்ற பயம் உங்கள் மீது இருக்கலாம். ஆனால் இந்த புதிய உறவு என்ப து ஒவ்வொரு உறவுமுறையிலும் முக்கிய மான ஒன்று. இந்த உறவின் மீது மதிப்பு வை த்துள்ள ஒரு ஆணை தான் பெண்கள் விரும்புவார்கள். இதை தவிர மற்றவை மீது விருப்பம் காட்டும் ஆணை, எந்த பெண்ணுக்கும் பிடிக்
காது.
அனைத்து பெண்களுக்கும் அன்பளிப்பு மற்றும் பரிசு பொருட்களின் மேல் நாட்டம் இருப்பதில்லை. ஆனால் சிலசமயங்களில் வெளியே செல்ல வேண்டும் என்று கண்டி ப்பாக ஆசைப்படுவார்கள். வெளியே செல் வதென்றால், சாப்பிட ஏதாவது வாங்கி தரு வது, பயணச் செலவை ஏற்பது, பொழுதுபோக்கு அம்சங்களுக்கு செல வழிப்பது போன்றவைக ளாகும். ஆனால் வேலை போய்விட்டதென் றால், இந்த செலவை எல் லாம் உங்களால் செய்ய முடியாது. அதனால் கையில் பணம் இல்லாத போது, காதல் போன்றவற்றில் விழமாட்டீர் கள்.
அமைதியாக இருந்து, மற்றவர்களுக் கு உதவி புரிந்து அனுசரணையாக நடந்து கொள்பவரைதான் ஒரு பெண் விரும்புவாள் என்று நீங்கள் நினைத் தால், முதலில் உண்மையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வ கை நல்ல குணங்கள் உள்ள ஆண்கள், பெண்களிடம் சகஜமாக பழகுவ தற்கு அதிக காலம் எடுப்பார்கள். சில நேரம் மிகவும் அதிக நேரம் எடுப் பதால், அந்த பெண் அவன் வாழ்க்கையை விட் டே சென்றிருப்பாள். மேலும் பெண்ணி ன் கண்களுக்கு மிகவும் நல்லவனாக, அமைதியா னவனாக காட்சி அளித்தால், உங்களை இளக்காரமாக நினைத்து விடு வாள். சுருக்கமாக சொல்ல வேண்டுமா னால், நீங்கள் ஒரு கால்மிதியை போல் பயன்படுத்தப்படுவீர்கள். ஆகவே மற்ற ஆண்களிடம் பழகும் போது, நீங் கள் காட்டும் உங்கள் கடுமையான பக்கத்தை பெண்கள் காணச் செய்ய
வேண்டும். உங்களை இணங்கச் செ ய்வது கடினமாக இருந்தாலும், அதி ல் ஒரு இனிமையை அவர்கள் காண வேண்டும். மேலும் மற்றவர்களை தாக்கி, அவளை காப்பாற்றும் நிலை வரும் போது, நீங்கள் அப்படி செய் யவே அவள் விரும்புவாள்.
அடக்கம் என்ற குணத்தால் பெண்கள் ஈர்க்கப்படுவார்கள். ஆனால் அதற்கா க எப்போது பார்த்தாலும், அதிக அடக் கத்துடன் இருந்தால், அது கொஞ்சம் ஜாஸ்தி தான். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்கள் பேசும் போது, குறி க்கிட்டு கொண்டே இருப்பார்கள். சில கடுமையான கருத்துக் கள் மற்று ம் நாகரீகமற்ற நகைச்சுவையை சொன்னாலும் கூட, யாரு க்கும் சிரிக்க தோன்றாது. நீங்கள் இப்படிப்பட்டவரா க இருந்தால், ஒரு பெண்ணை பொறு த்தவரை அவள் நகத்தை துளையிடும் துன்பமாக நீங்கள் விளங்குவீர்கள். ஆகவே நீங்கள் ஒரு நல்ல நபராக மாறும் வரை, எந்த பெண்ணையும் தொந்தரவு செய்ய வேண்டாம்.
என்று சொல்வார்கள். அதே போல் பெண்களும் கூட, அவர்களின் சேர்க் கையை வைத்து தான் அவர்களை எடை போடுகிறார்கள். இவ்வாறு உங்களை சுற்றி நண்பர்கள் என்ற பெயரில் குரங்கு கூட்டம் ஒன்று எப்போதும் உங்களை விட்டு பிரியாமல் இருக்கிறதா? அப்படியானால் கண்டிப்பாக ஒரு பெண்ணும் கிடைக்கப்போவதில்லை. மேலும் பழகும் பெண்ணுட் சிடுசிடுப்பாக வே நடந்து கொள்வார்கள். எனவே நீங் களே முடிவு செய்து கொள்ளுங்கள், இதுவா, அதுவா என்று.
ஷேவ்விங் செய்யவோ அல்லது குளிக்கவோ பிடிப்பதில்லையா? நினைவு தெரிந்தநாள் முதல் தலைமுடியை வெட்டவில்லையா? துணி மணிகளை சரிவர துவைக்காமல், அவைகளை அழுக்குடன் அணிகிறீ ர்களா? மிச்சமான உணவு அறையெங் கும் சிந்தி கிடக்கிறதா? அறையில் உள்ள பர்னிச்சர்கள் எங்கே என்று தேட வேண் டியிருக்கிறதா? அப்படியானால் நிச்சயம் காதல் உங்களை தேடி வராது.