‘கற்றது தமிழ்’ படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக் குனராக அறிமு கமான ராம் சிறிது நீண்ட இடைவெளிக் குப் பிறகு இயக்கி, நடித்துள்ள ‘தங்கமீன்கள்’ திரைப்படம் தற்போது வெளியாகி, வெற்றிகரமாக திரை யரங்குகளில் ஓடி வசூலை வாரிக் குவித்துவருகிறது. இந்நிலையில், இந்த ராம் இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு தரமணி என பெயரிட்டுள்ளனர். இது குறித்த தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. இப்படத்தில் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவருடைய படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் யுவன் சங்கர்ராஜாவே
இத்திரைப் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். ஜே.எஸ்.கே. பிலி ம் கார்ப்பரேஷன் நிறு வனம் சார்பாக ஜே.சதீஷ்குமார் வழங்க, கட்டுமரம் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் ‘சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி சஞ்சரிக் கும் தவம் காதல்’ என்ற வாக்கியத்துடன் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது.
‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ படங்களில் அழுத்தமான கருத்துக்களை சொன்ன ராம் இந்த படத்திலும் நல்ல கருத்தை வலியுறுத்துவார் என்றே தெரிகி றது.