நீங்கள் நாய்ப் பிரியரா…, பூனை என்றால் உங்களுக்கு உயிரா? முதல் சமாச்சாரம் இன்னும் ஆராய்ச்சி அளவில்தான் இருக்கிறது. ஆனால், பூனை பற்றிய அபாய எச்சரிக்கை கள் இப்போது வெளியே வந்து விட் டது. மூளையை கட்டுப்படுத்தும் தம்மாத் தூண்டு ஒட்டுண்ணி ஒன்று இருக்கிறது. அது 99.9 சதவீதம், பூனையில் இருந்து தான் மனிதர்க ளுக்கு தொற்றுகிறது; அப்படி தொற் றும் ஒட்டுண்ணி தான் மூளையை முழுமையாக கட்டுப்படுத்தி, ஏகப்பட்ட மூளை கோளாறுகளுக்கு காரணமாகிறது என்ற உண்மையை
விஞ்ஞானிகள் இப்போது பகிரங்கப் படுத்தியு ள்ளனர்.
சரி, இனி கொஞ்சம் ஆழ்ந்து போய்ப் பார் ப்போம்… பூனையிடம் அவ்வளவு சுலப மாக, பொறி வைக்காமலேயே சிக்கிக் கொள்கிறதே எலி…எப்படி ? அதில் தான் இந்த ஒட்டுண்ணி பிறப்பு ஆரம்பிக்கிற து. எலி பிறக்கும் மூன்று மாதத்துக்கு உள்ளேயே ஒரு பாரசைட்…ஆம், ஒட்டுண்ணி அதன் மூளையில் உரு வாகி விடுகிறது. இந்த ஒட்டுண்ணி, மூளையை அப்போதில் இருந்தே ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்த ஒட்டுண்ணி பெயர் டெக் சோபிளா ஸ்மா கோண்டீ.
எதை செய்ய வேண்டும். எதை செய்யக் கூடாது, எங்கே போகலாம், போகக் கூடா து என்பது முதல் பைத்தியமான காரிய ங்களை செய்வது வரை அவ்வளவை யும் இந்த ஒட்டுண்ணி தான் கமாண்ட் செய்கிறது. எலிக்கு அதென்னவோ பூனை, பூனையின் சிறுநீர் என்றால் பிடிக்கும். அப்படி என்ன டேஸ்ட்டோ என்று எண்ண வேண்டாம். உண் மையில் இந்த ஒட்டுண்ணி வேலை தான் அது. எலிக்கு பிடிக்காம லேயே இந்த பழக்கத்தை ஏற்படுத்தியது ஒட்டு ண்ணி.
அதனால் தான் தெரிந்தே, பூனையிடம் மாட்டி இரையாகிறது எலி. சரி, எலியை கடித்து சாப்பிட்ட பூனை, ஏப்…என்று ஒரு ஏப்பம் விட்டுவிட்டு படுத்து விடும் .
இந்த பூனை வீட்டுப்பூனையாக இருக்க லாம். திரியும் பூனையாக இருக் கலாம். எலியை பிடிப்பதில் பாகுபாடு இல்லை. எலியை சாப்பிடுவதிலும் வேறுபாடு இல்லை. அப்படியே தூங்கி எழுந்தபின் டூ பாத்ரூம் போவதிலும் அவ்வளவு ஒற்றுமை.
அங்குதான் பிரச்னையே. ஏற்கனவே, எலியை தின்றதால் அதன் மூளையில் உள்ள ஒட்டுண்ணி, பூனை மூளைக்கு போய்விடுகிறது. அது போகும் டூ பாத்ரூம் மூலம் ஒட்டுண் ணி, மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு அதி கம். வீட்டுப் பூனையாக இருந் தாலும், வெளிப்பூனையாக இருந்தாலும், இப்படி டூ பாத்ரூம் மூலம் மற்ற பூனைகளுக்கு மட்டு மல்ல, மனிதர்களுக்கும் பரவி விடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக நிபுணர் வெண்டி இங்க்ராம் தலை மையிலான குழு இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகளை செய்து பல திடுக்கிடும் தகவல்க ளை சேகரித்துள்ளது.
ஆராய்ச்சி முடிவுகளின் படி தெரியவந்த தகவல்கள்:
* டெக்சோபிளாஸ்மா கோண்டீ என்ற பாரசைட் தான் மனித மற்றும் உயிரின ங்களின் மூளையை எல்லா வகையி லும் கட்டுப்படுத்துகிறது.
* இது ஒரு வகை ஒட்டுண்ணி. பிறக்கு ம் போதோ, மனிதன் மற்றும் சில உயி ரினங்களுக்கு தொற்றுவதன் மூலமோ மூளையை அடைகிறது.
* பூனை, எலி போன்ற உயிரினங்களுக் கு அதன் பழக்க வழக்கங்கள், அணுகுமுறை போன்றவற்றில் மாற்றங்க ளை இந்த ஒட்டுண்ணி செய்கிறது.
* எந்த சமயத்தில் இந்த ஒட்டுண்ணி செயல்படும் என்று கூறுவது இய லாத காரியம். மூளையை கட்டுப்படுத்து வதில் வல்லமை படைத்தது.
* மனிதர்களை பொறுத்தவரை, மூளை யை சீர்படுத்துவதை தவிர, மற்ற அபாய மாற்றங்களை செய்வது இந்த ஒட்டுண் ணி தான்.
* சிஸ்ரோபெர்னியா, பைபோலார் கோ ளாறு, அப்சசிவ் கம்பல்சிவ் சிண்ட்ரோம் போன்ற மூளைகோளாறுக்கு காரணமே இந்த ஒட்டுண்ணி தான்.
* பார்ப்பதற்கு சாதாரண மனிதராக தான் வளர் வர்; ஆனால் போகப் போக பழக்க வழக்கம் மாறும். அதற்கு இந்த ஒட்டுண்ணியே காரண ம்.
* இந்த பழக்க வழக்கம் மாறுவது முதல் பல வகை மன, மூளை கோளாறு வருவது வரை இந்த ஒட்டுண்ணி வேலை தான்.
* பூனை மூலம் பரவும் இந்த ஒட்டுண்ணி, மீன், பறவைகளுக்கும் கூட பரவும் ஆபத்து உண்டு.
* கொக்கு வாயில் தெரிந்தே சிக்கும் மீன். அப்படி மீன் நடந்து கொள்ள முதன் மூளையை ஆட்டிப்படைப்பதும் இந்த ஒட்டுண்ணியே.
* மனிதர்களை பொறுத்தவரை குழ ந்தை பருவத்தில் தொற்றவே வாய் ப்பு அதிகம். எப்போது வேண்டுமா னாலும் அது செயல்பட ஆரம்பிக்கு ம்.
* பெண்களுக்கு அதிகளவில் குறிப் பாக கர்ப்பிணிகளுக்கு ஒட்டுண்ணி தொற்ற வாய்ப்பு அதிகம்.
*பூனை முதல் மனிதன் வரை மூளையில் தொற்றும் ஒட்டுண்ணி, முதலில் செய்வது மூளையை பல மிழக்க வைப்பதுதான்.
* அடுத்து, தன் வசப்படுத்தி, மூளையி ன் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது ம் இந்த ஒட்டுண்ணி வேலைதான். இவ் வாறு ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின் றன.
பூட்டை தொங்கும் பழக்கம்… சிரிப்பே இல் லாத உர்ர்…
* ஓ.சி.டி: மூளை கோளாறுகளில் ஒன்று தான் அப்சசிவ் கம்பல்சிவ் டிசா ர்டர். இது 99 சதவீதம் பேருக்கு பல வகையில் இருக்கும். ஆபத்தான பழக்க வழக்கங்கள் அதிமாகும் போ து தான் சிகிச்சை எண்ணமே வரு கிறது.
*வீட்டைபூட்டி விட்டோமா என் று பூட்டை பலமுறை தொங்கிப் பார்ப் பது, 108 முறை பிள் ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டு விட்டோ மா என்று சந் தேகப்படுவது, சிறிய சத்தம் கேட் டாலும் கண்டபடி குழப்பம் அடைவது, ஏதாவது வாசம் வந் தால் சிலிண்டர் கேஸ் தானா என்று சந்தேகிப்பது இந்த வகை தான்.
* அவர் சிரிக்கவில்லை… நாம் ஏன் சிரிக்க வேண்டும் என்று உர்ர்ர் என இருப்பது, இவன் ஏன் சிரித்தான் என்று குழம் புவது, இவன் நமக்கு குழி தோண்டுகிறான் என்று நண்பனை சந்தேகிப்பதும் இந்த ஒட்டு ண்ணி வேலை தான்.
* சிரிப்பு, அழுகை, பதற்றம், குழப்பம் எல்லா மே நார்மல் அளவை தாண்டிவிட்டால் உஷா ராக இருக்க வேண்டும்.
* சிஸ்ரோபெர்னியா: சம்பந்தமே இல்லாமல் பேசுவது, அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, தெரியாத விஷயங்களில் பயப்படுவது போன்றவை தான் இந்த கோளா று.
* பைபோலார் டிசார்டர்: இந்த கோளா று பெரும்பாலும் பெரிய திறமைசாலி களுக்குவர வாய்ப்பு அதிகம். சிறிய வயதில் பெரும் சாதனைகளை செய்தி ருப்பர்; குறிப்பிட்ட துறையில் சாதித்தி ருப்பவராக இருக்கலாம். ஆனால், எதி ர்காலம் பற்றியோ, வாழ்க்கை பற்றி யோ சிந்தனையே இரு க்காது.
* பெரிய முடிவுகளை சுலபமாக எடுத்து விட்டதாக நினைத்து, பிரச்னை குழியில் விழுந்து விடுவர். நம்பி மோசம் போவதும் இந்த ரகம் தான். இப்படி பிரச்னைகளில் தவிப் போருக்கு மூளை பாதிப்பு தான் இந்த கோளாறு.
கர்ப்பிணியா, விலகி நில்லுங்க
கர்ப்பிணியாக இருக்கும் பெண் கள், பூனையிடம் இருந்து வில கி இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வர். இதற்கு காரணம், இந்த ஒட்டுண்ணியே. காரணம், இந்த ஒட்டுண்ணி, பிறக்கும் குழந்தை கருவிலேயே பாதிக்க வாயப்பு அதிகம்.
பொதுவாக, மனித உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி பல வீனமாகும் போது இந்த ஒட்டுண்ணி வேலையை ஆரம்பிக்கும். எதிர்ப்பு சக்தியை பல வீனமாக்கி விட் டுகோளாறுகளை ஆரம்பிப்பதும் இதன்வேலை.