Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் அழகாக இருக்க‍ தேவை மனத் தெளிவும், அமைதியுமான உள்ளமும்தான்!

பெண்களைக் அழகை குறிவைத்து எண்ண ற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடை அல ங்காரத்திற்காகவும், முகஅழகுக்காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பரப் படுத் தப்படுபவை ஏராளம்.

ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவ தால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில் லை. உள ரீதியாக தன்னம்பிக்கை அதிகரித் தால் பெண்களின் அழகு கூடும் என்கின்ற னர் உளவியல் வல்லுநர்கள்.

தன்னம்பிக்கை

அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டு மல்ல அது உள்ளம் தொடர்புடையது. என்கின்றனர் வல்லுநர்கள். எங் கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ அங்கே அழகு மிளிரும் என்பது அவர்களின் கூற்று. உள்ளத்தில் தன்ன ம்பிக்கை ஒளி உண்டானால் முகத்தில் பொலிவு கூடும் என்பது வல்லுநர்களி ன் கருத்து.

அழகாய் இருக்க வேண்டும். அழகான தோற்றம் பெற வேண்டும் என எந் தப் பெண்ணும் விரும்புவது சகஜம். நாம் நேசிக்கும் ஒருவர். அல்லது ஒரு பொ ருள், அல்லது வேறு ஏதாவதாக இருக் கலாம். அது நம்மை விட்டு போகும் போது, அல்லது இல்லாமல் போகும்போது, நாம் அதற்காக ஏங்கும் நிலை ஏற்படலாம். ஆனால் நாம் எதை இழந்தாலும் அழகு எப்போதும் நம்மை விட்டு அகல்வதேயில்லை. அது எப்போ தும் நம் மிடவே உள் ளது. ஆனால், நமக்குத்தான் வயதாகிவிட்டதே என எண்ணி அழகை, நாம் பேணாத காரணத்தால் தான் அழகிழந்தவர்களாக நாம் நம்மை கருதுகிறோம்.

நம்மை நாமே பாராட்டுவோம்

இழந்த அழகை பெற நாம் முதலில் நம்மீது நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம் மைப் பற்றி உயர்வாக எண்ண வேண்டும். நாம் அழகானவர், இனிமையானவர் என எண்ணிக் கொள்வது அழகின் முதல் படியாகும். இதுபோன்ற மெல்லிய உணர்வுக ள் கூட நமது முகத்தை அழகுபடுத்தும்.

ஆரோக்கியமான உடல்நிலை

உணர்வுகள் மட்டுமல்ல, நல்ல ஆரோக்கிய மான வாழ்க்கை முறை கூட அழகாய் இருப் பதற்கு தேவைப்படுகிறது. அழகான மென் உணர்வுகளைப் பெற நல்ல தேக ஆரோக்கி யம் மிக அவசியமாகும். நல்ல ஆரோக்கிய ம் என்பது திடகாத்திரமாக சுறுசுறுப்பானவ ர்களாக இயங்குவதேயாகும். இது சுறுசுறு ப்பு நல்ல சத்தான உணவை உட்கொள்வதன் மூலமே பெற முடியும். நல்ல ஆரோக்கியத் தைப்பெற முதலில் மன அமைதியைத் தேடி க்கொள்ளுங்கள்.

நிதானம் ஏற்படும்

அமைதியில்லாத உள்ளத்தில் அழகான மென்மையான எண்ணங்களுக் கிடமில்லை. எந்தப் பிரச்சினையையும் என்னால் எதிர்த்துப் போராட முடியும்” என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அச்சம் வில கும் அந்த மனத்தைரியத்தில் ஒரு அமைதி மனதில் ஏற்படுவதை உங்க ளால் அறிந்துகொள்ள முடியும்.

மன அமைதி ஏற்படும் போது மிகுந்த நிதானத்துடன் அன்றாட வேலைக ளை திருப்தியுடன் செய்து முடிக்க முடியும். அமைதியாக உறங்கவும் சாப்பிடவும், நண்பர்கள் உறவினர்களுடன் இனிமை யாக பழகவும் முடி யும்.

தினமும் கவனியுங்கள்

திருமணத்திற்கோ, திருவிழாவிற்கோ செல்லும் போது மட்டுமே சில பெண்கள் அழகுபடுத்திக் கொள்ள முற்படுவார்கள். பிற நாட்களில் ஏனோ தானோவென நாட்களை கழித்து விடுவார்கள். இது தவறான முறையாகும். துடைக்கத் துடைக்கத்தான் கண்ணாடி பளப்பளப்பாகு ம். அதேபோல் பெண்கள் தங்களின் முகத்தை கை கால்களை அடிக்கடி நல்ல முறையில் பேணி வந்தால் நாளடைவில் சகல உறுப்புகளும் பொலிவு பெறும்.

இதேபோல் மனதையும் கவனித்து அமைதி இழக்காது பாதுகாப்பது அதைவிடச் சிறந்த தாகும். ஏனெனில் அமைதியில்லாத மனதி ல் முக அழகு ஏற்படாது. சோகமோ சந்தோ ஷமோ முகமானது மன அழகை பளிச்சென எடுத்துக்காட்டும். இந்த சக்தி கண்களுக்கும் உண்டு. உங்க ளைப் பற்றிய நம்பிக்கை, உடல்களைப் பற்றி ஓர் உயர்ந்த அபிப்பி ராயம், நல்ல நினைவுகள் இல்லாமல் போ கும்பட்சத்தில் அழகாக இருக்கிறோம் என்ற நினைப்பிற்கே இடமில்லை.

வாய்விட்டு பாடுங்கள்

பிரச்சினைகள் மனதை பாதித்து விடுவது இயற்கையே. பிரச்சினைகள் சகலருக்கும் உண்டு. பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டு ம். அது அவசி யமானது. பிரச்சினைகளுடன் வாழ்வது அதைத் தீர்க்க நடவடிக்கைக ளை மேற்கொள்ளாதிருப்பது உடலை மிகவும் பாதித்து விடும்.

மன இறுக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் அதனையிட்டு நெருங்கிய நண்பர்களுடன், அல்லது உங்களுக்கு மிக வேண்டியவர்களுடன் அப்பிரச்சினையை யிட்டு மனம் திறந்து பேச வேண்டும். பிரச்சி னை இருக்கிறதே என்று விட்டு விடாமல் மனத்தெளிவுடன் ஏனைய வீட்டு வேலைகளை மேற்கொள்ளலாம்.

அல்லது ஏதவாது கீர்த்தனைகள், சுலோகங்கள் தெரிந்திருந்தால் அவைகளை கொஞ்சம் சப்தத் துடன் பாடலாம். இதனால் மனம் இலேசாகும். இதனால் பிரச்சினைகள் மறக்கப்பட்டு மனப்பார ம் குறைந்து சாந்தமடை கிறது. முயற்சி செய்து பாருங்கள்.

மனத் தெளிவு தரும் யோகா

யோகாசனம்கூட மன அமைதியைக் கொடுக்கும். எல்லா யோகாசனங்களை செய்ய முடியாவிட்டா லும் ஓரிடத்தில் அமர்ந்து மூச்சை உள்வாங்கி மெல்ல வெளியே விடுங்கள். அதைத் தொடர்ந்து 15, 20 நிமிடம் வரை செய்து வாருங்கள். மன அமைதி கிடைக்கு ம். அலைபாயும் நினைவுகள் கட்டுக்கடங்கி முகம் அமைதியை வெளிக் கொணரும். பதற்றம் தணியும். உள்ளழகு பளிச்சென வெளிவரும். முக மும் உடலும் புத்துயிர் பெறும்.

சுடர்விடும் குத்துவிளக்கு

அழகான தோற்றம் கொண்ட ஒருவர் பிறரையும் சந்தோஷப்படுத்துகி றார். தன்னம்பிக்கை கொண்டவராக புன்ன கையுடன் அவர் வலம் வரும் போது பார்ப்பவர்கள் பரவசம் கொள்கிறார்க ள். அவரது உள்மன அழகை தெளிவா ன புன்னகை எடுத்துக்காட்டுகிறது.

மனதில் அமைதியும் அடக்கமும் இரு ந்தால், முகமும் உடலும் அழகு பெறும் அப்படியான முகத்திற்கு அலங் காரமே தேவையில்லை. சாதாரண முக அலங் காரம் போதுமானது. குத்து விளக்கு போன்ற அழ கு என்கிறார்களே அது போல அமைதியான முக த்தெளிவினை காட்டும் அழகைத் தான் அப்படி வர்ணிக்கிறார்கள்.

மனத் தெளிவும், அமைதியான உள்ளமும் அழகி ன் முதல்படியாகும். திருப்தியான உள்ளம் அமை தியை ஏற்படுத்தும். எனவே மன அமைதி யைத் தேட முயற்சி செய்யுங்கள். உங்களைப் பற்றி அழ கான எண்ணங் களை உருவாக்கிக் கொள்ளுங்க ள். நல்ல மென் உணர்வுகளை கொண்டிருங்கள். அதுவே உங்கள் முகத்திலும் உடலிலும் மாற்றங்களை ஏற்படு த்தும்.

இது பெண்களுக்கு மட்டுமல்ல‍ ஆண்களுக்கும் சேர்த்துதான்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

  • Abdul Sajeed

    On Oct 15, 2013 12:10 PM, வி தை2வி ரு ட் ச ம் (அ-ஃ)- v i d h a i 2 v i r u
    t c h a m ( a – z) wrote:
    >
    > vidhai2virutcham posted: “பெண்களைக் அழகை குறிவைத்து எண்ண ற்ற அழகு சாதனப்
    பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடை அல ங்காரத்திற்காகவும்,
    முகஅழகுக்காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பரப் படுத் தப்படுபவை
    ஏராளம். ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவ தால் மட்டுமே அழகு அதிகரி”
    >

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: