அழகுப் பெண்களுக்கு சில “ அபூர்வ” குணங்களும் இருக்கும். அவர்கள் மனதின் ஆழத்தை அவ்வளவு எளிதாக அளந்து சொல்லிவிட முடியாது. பெண்க ளின் குணநலன் பற்றி ஆராய்ந்த பெண் ஆராய்ச்சி யாளர் ஒருவர்,
“பெண்கள் பொய் சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள் என்று கண்டு பிடித்துள்ளார். இங்கிலா ந்து பெண் ஆய்வாளரான மேரி கோல்டு தனது ஆராய்ச்சி முடி வாக வெளியிட்ட சில பெண் ரகசியங்கள்…
பெண்கள், தன் கணவரிடம் தினமும்
குறைந்தபட்சம் 3 பொய் கள் சொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவ ர்கூட இல்லை என்பதுதான் ஆய் வில் கிடைத்த அதிர்ச் சியூட்டும் உண்மை!
ஆய்வின்படி பெண்கள் 3 விதமா க பொய் சொல்கிறார்களாம்.
சிறு விஷயங்களில் தவறு நடந்துவிட்டால்கூட உண்மையை ச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக பெண்க ளின் வாடிக்கை. இவர்கள் ஒரு வகை.
கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பி ன் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள்.
வஞ்சகமாகப் பொய் சொல்வது மூன்றா ம் வகையினர்.
பெண்கள், சாதாரணமாக சிராய்ப்புக் காயம் ஏற்பட்டால்கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்ல மாட்டார்கள்.
`செல்போன் பில் அதிகம் வருகிறது என்று கணவர் கண்டித் தால் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிடும் பெண்கள், அதற்கு ப் பிறகு சிடுசிடுப்பாகி சீப்பான பொய்க ளைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்க ளாம்.
அதாவது சிறிது நேரம் கழித்து கணவர் என்னுடைய மஞ்சள் சட்டை எங்கே இரு க்கிறது என்றுகேட்டால், அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது என்று மழு ப்பலான பதிலைச் சொல்கிறார்களாம்.
ஆனால் அந்தச் சட்டையை சலவைக்கு கொடுத்திருப்பார்கள் அல்லது அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள் என்பதுதா ன் உண்மையாக இருக்கும்.
இப்படி சின்னச்சின்ன விஷயங்க ளில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை ஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்று கிறோம் என்று கவலைப்படுவ தோ கிடையாதாம்.
ஆனாலும் பெண்களின் பல பொ ய்கள் கணவன்- மனைவி உறவை வலுப்படுத்து வதற்காகச் சொல்லப்படுபவையாகவே உள்ளன என்றும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
(கதிரவன் உதிர்த்த கதிர்! )