மூன்று நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவ ம் நடந்தது. கெல்லீஸில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டுவெளியே வந்தபோது வாசலை ஒட்டி நின்ற ஒரு பாட்டி என்னை நோக்கி கை யை நீட்டினார். இடுப்பில் இரண்டு வயது சிறுமி யை வைத்திருந்தார். பக்கத்தில் நான்கு வயது சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.
“பிச்சை போட மாட்டேன். வேணும்னா உங்களை ஏதாவது இல்லத்தில் சேர்த்துவிடுறேன். மூணு வேளை சாப்பாடு போடு வாங்க.. பசங்களை படிக்க வைப்பாங்க.. வர்றீங்களா என்று.. தன் முயற்சியில் சற்றும்
மனம் தளராத விக்ரமாதித்யனைப் போல் நானும் வழக்கமான என் உரையாடலை ஆரம்பித்தே ன்.
வழக்கமாக இப்படி நான் கேட்டதும் பிச்சைக்கேட்டவர்கள் முறைத்துப் பார்த்துவிட்டு முனுமுனுப்பாக திட்டிக்கொண்டே செல்வார்கள். சிலபேர் சமாளிக்கும் விதமாக “அப்புறம் வர் றேன் சார்..” என்று நகர்ந்து விடுவார்கள். பிச்சை எடுப்பது பழகி விட்டால் சுகமான தாக விடும்போல என்று தோன்றியது.
ஆனால் முதல்முறையாக அந்த பாட்டி நான் எதிர்பா ராத ஒரு பதிலை சொன்னா ர். “எய்யா சாமி.. புண்ணி யமாப் போவும்.. இந்த புள்ளைவோல சேர்த்துவுட்டுருப்பா.. வழி தெரியாமத்தான் பிச்சை எடுக்குறேன்ப்பா..” என்று சொல்லும்போதே கண் கலங்கினார்.
“சரி பாட்டி டோக்கன் வாங்கி தர்றேன்.. சாப்பிடுறீங்களா .. ” என்று கேட்டேன்.
“சாப்பாடு வேணாய்யா.. புள்ளைக்கு பால் மட்டும் வாங்கி கொடுப்பா.. இவங்க அப்பன்காரன் வுட்டுனு போய்ட்டான். இவங்க அம்மா அஸ்பிட்டல்லருக்கா.. ஆஸ்த்துமா நோய்.. அவள பாக்க தான் போய்கிணுக் கிறோம்.. பஸ்சுல போக காசு வே ணும்ப்பா..” என்றார்.
அந்த சிறுவனை பார்த்தேன்.. இள மாறனைப் போலவே இருந் தான். அந்த பாட்டி நிச்சயம் பொய் சொல் லவில்லை என்று உள்ளுணர்வு சொல்லியது. பக்கத்து கடையிலிருந்து வாங்கிய பால் பாக் கெட் பாட்டியிடமும் பிஸ்கெட் பாக்கெட்டை சிறு வனிடமும் கொடுத்தேன். அதை வாங்கியதும் அவன் முகத்தி ல் அவ்ளோ சந்தோசம்.
“ஸ்கூல்ல சேர்த்துவிடுறேன்.. படிக்கிறீயாடா..” என்று கன்ன த்தை தட்டி கேட்டேன்.
“ஓ..” என்று வேகமாக தலையாட்டினான்.
“உங்க பொண்ணுக்கிட்ட கேட்டுட்டு எனக்கு முடிவுசொல்லுங்க..” என்று பாட்டியிடம் என் போன் நம்பரை எழுதிக் கொடுத்து விட்டு, பஸ்ஸில் போக கொஞ்சம் பணமும் கொடுத் தேன்.
வாங்கி கொண்ட பாட்டி, இடுப்பில் இருந்த பேத்தியிடம் “ மாமாவுக்கு கிஸ் கொடு.. கிஸ் கொடு.. என்றா ர். அந்த குட்டி தேவதை கைகளை தன் வாயில் வைத்து எடுத்து என்னை நோக்கி நீட்டி ஃப்ளையிங் கிஸ் கொடுத்து கையை ஆட்டி சிரி த்தது. அவளின் கன்னத்தை பிடித்து இழுத்து முத்தம் கொடுத் துவிட்டு அலுவலகத்தை நோக்கி நகர்ந்தேன்.
மாலை வரை பாட்டியிடமிருந்து போன் வரவில்லை. “சரி.. இதுவும் வழக்கம் போல்தான்..” என்று நினைத்து மறந்து விட் டேன்.
ஆனால் இரவு புதிய எண் ஒன்றிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. பாட்டி தான் பேசி னார். பக்கத்து வீட்டுக்காரரின் போனிலி ருந்து பேசுவதாக சொன்னார்.
“என் பொண்ணுகிட்ட சொன்னேம்பா.. புள்ளைவோல ஸ்கூல்ல சேர்த்துர சொல்லிச்சுப்பா.. நல்லா ருப்ப சாமீ.. நீ சொன் ன எடத்துல சேர்த்துவுட்டுருப்பா.. இதுக ளையும் பாக்க முடியாம என் பொண்ணையும் பாக்க முடி யாம் சீரழிஞ்சுகினுகீரம்ப்பா.. ” என்று அழுதபடி சொன்னார்.
“சரி நான் ஏற்பாடு பண்றேன்.. கவலைப்படாதீங்க..”என்று பாட்டியிடம் சொல்லி விட்டு, குழந்தை தொழிலாளர்கள் மீட்பு துறையிலிருக்கும் நண்பர்களிடம் விபரம் சொன்னேன்.
மறுநாள் பாட்டியை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல் லி குழந்தை மீட்பு பணியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய் தேன். அவர்களும் பாட்டியிடமும் அவரின் மகளிடமும் விசா ரணை நடத்தியப்பின் தற்போது தங்கள் பாதுகாப்பில் அந்த இரு குழந்தைகளையும் எடுத்துக் கொண்டார்கள்.
அந்த இரு குழ்ந்தைகளும் பாதுகா ப்பு இல்லத்தில் நல்ல சாப்பிட்டு சந்தோசமாக இருப்பதாக சொன் னார் மீட்பு பணியில் ஈடு பட்ட தோழி.
கேட்கவே சந்தோசமாக இருந்தது..
அந்த குழந்தைகளுக்கும் வாழ்வு வசப்படட்டும்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா (முகநூல் – 16-11-2013)
Udhavikkaram Neettiyadharku Nanri.
HI BRO THIS SAJEED FROM DUBAI
THANKS BRO U SAVE THE CHILDRENS LIFE
EANUDIYA MANAMARNDHA VHALTHUZKAL
பாராட்டுக்கள் கார்டூனிஸ்ட் பாலா அவர்களே. உங்கள் கருணை நெகிழ வைத்தது. தொடரட்டும் உங்கள் சேவை.