கணினி பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரும்பாலும் தெரிந்
திருப்பது அதில் உள்ள அப்ளி கேஷன்களைப் பற்றிதான். உதாரணமாக போட்டோஷா ப், எம்.எஸ்.ஆபிஸ், கோரல் டிரா, மீடியா பிளேயர் என்பன போன் றமென்பொருள்களை மட்டுமே முக்கியமாக அறிந் து வைத்துள்ளார்கள்.அவைக ளை இயக்கச்செய்து, முறை மைப்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப்பற்றி பலருக்கு தெரிந்திருப்பதில்லை. அதை பற்றி எளிய
தமிழில் அறிந்துகொள்வோம்.
இதில் கணினியை இயங்க வைக்கிறது. அதில் உள்ள அப்ளிகேஷன்கள் செயல்படவும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
அதுபோல தான் இந்த இயங்குதளம் என்கிற Operating System.
ஆபரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது?
1. நினைவக மேலாணமை
2. பணி மேலாண்மை
3. கோப்பு மேலாண்மை
4. உள்ளீடு மற்றும் வெளியீடு மேலா ண்மை
ஆபரேட்டிங் சிஸ்டத்தின் புத்திசாலித்தனம்:
நீங்கள் பயன்படுத்தும் கணினியில் உள்ள நினைவகத்தின்
அளவை அறிந்துகொண்டு, அதற்கே ற்றார்போல அதைப் பயன்படுத்திக் கொள்ளும். குறிப்பாக ஆப்பரேட்டி ங் சிஸ்டம் நினைவகத்தில் தங்குவ தற்கான இடம், அப்ளிகேஷன் மென் பொருகள் இருப்பதற்கான இடம், தட்டச்சிடுகிற விவரங்கள் இருக்கும் இடம், Disk-ல் கோப்புகளைப்படிக்கு ம்போது அதனுடைய விபரங்களை வைக்க வேண்டிய இடம் ஆகியவற்றை இதுவே தீர்மானிக்கிறது.
மல்டி டாஸ்க் – Multi Task
தற்பொழுது உபயோகத்தில் உள்ள அனைத்து ஆபரேட்டிங்
சிஸ்டத்திலும் இந்த மல்டி டாஸ்க் அமைப்பு உள்ளது. மல்டி டாஸ்க் அமைப்பு என்ப து கணினியில் ஒரே நேரத்தி ல் பல்வேறு அப்ளிகேஷன்க ளைத் திறந்து பணிபுரிவதா கும். உதாரணமாக எம்எஸ் வேர்ட், போட்டோஷாப், எக்செல், இணைய உலவுவதல் போ ன்ற பல்வேறு புரோகிராம்களைத் திறந்து அதில் பணிபுரிவ தைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு பல்வேறு புரோகி ராம்கள் செயல்பாட்டில் இருக் கும் போது அவை ஒன்றுக்கு ஒன்று பிரச்னையில்லாமல், சீராக இயங்குவதற்கு வழி வகை செய்கிறது ஆபரேட்டிங் சிஸ்டம்.. அதாவது வாய்க்காலில் ஓடும் நீரை, நான்கைந்து வயல்களுக்கு செல்லும் வகையில் சரியான பாதைக்கு மடை
திருப்புவதைப்போல என்று கூறலா ம். வாய்க்கால் எங்கும் நீரை இடை யில் உடைப்பு எடுக்காமல் பார்த்து க் கொள்வதைப்போல. இந்த புரோ கிராம்கள் ஒன்றுக்கொன்று குழப்பி க் கொள்ளாமல் தன்னுடைய பாதையில் செயல்படும்படிச்செய்வ து இந்த ஆபரேட்டிங் சிஸ்டமே..!
கோப்பு நிர்வாகம் (File Manage- ment):
நீங்கள் உங்கள் கணினியில் உருவாக்கும் கோப்புகள், மற்றும்
நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷ ன்களுக்கான கோப்புகள், அவற்றி ற்கான கோப்புறைகள் போன்றவற் றையும் இயங்கு தளமே பராமரிக் கிறது. நீங்கள் கோப்புகளின் மீது செயல்படுத்தும் அனைத்து வே லைகளுமே ஆபரேட்டிங் சிஸ்டத் தால் நடத்தப்படுபவைதான்.
உதாரணமாக ஒரு கோப்பை அழிக்கிறீர்கள் என்றால் அதை சரியான அழிப்புச் செயலாக மாற்றுவது ஆபரேட்டிங் சிஸ்டம் தான்.
நீங்கள் கொடுக்கும் கட்டளைக ளைப் புரிந்துகொண்டு, Delete கொடுத்தால் தேர்ந்தெடுக்கப்ப ட்ட அந்தகோப்பை அளிக்க வே ண்டும் எனப்புரிந்துகொண்டு அந்த செயலைச் செய்கிறது.
அதுபோல நீங்கள் கோப்புகளை நகர்த்துதல், கோப்புகளை
ஓரு கோப்புறையிலிருந்து மற் றொரு கோப்புக்கு கொண்டு செல் லுதல், காப்பி செய்தல், அந்த கோ ப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்த ல் போன்ற செயல்களையும் செய் வதும் ஆப்ப ரேட்டிங் சிஸ்டமே.
ஒரு குறிப்பிட்ட பணியை இரண்டு பகுதிகளாப் பிரித்து இரு cpu க்களிடம் கொடுத்து அந்த வே லையை முடிக்கச் செய்யும் ஆற்றலையும் பெற்றுள்ளது operating system.
கோப்புகளை உருவாக்கி அதைச் சேமிக்கு ம்பொழுது அது சேமிக்கப்படும் நேரம், தேதி, கிழமை ஆகியவற்றை குறிப்பது ம், கோப்புகளை மறைக்க, கோப்புகளை படிக்க என்கிற Hidden, Read only பண்புக ளை கொடுக்கும்பொழுது அவற்றை மேற் கொள்வதும்,
ஒரு குறிப்பிட்ட கோப்பின் பெயரை அதே வகையான கோப்பி ற்கு பெயரை அதே பெயரைக் கொடுக்கும்பொழுது ஏற்றுக் கொள்ளமல் செய்வ தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் செய்யும் வேலைகள்தான்.
அதனால்தான் இதனை இயங்கு தளம் என்கிறோம். இதன் மீது தான் மற்ற அனைத்தை அப்ளிகேஷன்க ளும் இயங்குகின்றன. கணினிக்குத் தேவையான ஒரு அடிப்படை மென்பொருள், இயக்க மென்பொருள் ஆப்பரேட்டி ங் சிஸ்டம் என்றால் அது மிகையாது. அவனின்றி அணுவும் அசையாது என்பது போல, ஆபரேட்டிங் சிஸ்டம் இன்றி கணி னியும் அசையாது..
நன்றி. - தங்கம்பழனி
Nicely written in Thamizh. Nanri.