தமிழ்த் திரையுலகில் புரட்சி செய்தவர் .புராண கதைகளை படமாக்கி மூடத்தனத்தில் இருந்த திரை யுலகில் அப்புராண படங்களிலும் மக்க ளுக்கான புதுமை கருத்துக்களை புகுத் தியவர்.பகுத்தறிவை தனது நகைச் சுவை மூலம் பரப்பியவர். நல்ல கணீர் குரல் வளம்மிக்கவர் .
பாடல்களில் அவர் கையாண்ட புதுமை கள்,கருத்துக்கள் இன்றைய அளவும் எற்றுக்கொள்ளக்கூடியவை.
இன்று ஆபாச வார்த்தைகளை நகைச்சுவை என்ற பெயரில் உளறிக்கொட்டுபவர்கள் கலைவாணர் படங்களை ஒருமுறை பார்ப்பது நல்லது.அதிலும் சின்ன கலைவாணர் என்ற பட்டத் தை
தனக்கு தானே வழங்கிக்கொண்டு சிலர் திரிவதுதான் மகா கொடுமை.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்ததினம் (நவ.29-1908)
பிறப்பு: நவம்பர் 29, 1908
பிறப்பிடம்: நாகர்கோயில், தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் எழுத்தாளர்
இறப்பு: ஆகஸ்ட் 30, 1957
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
அவர், 1908 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “ நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்’ மகனாக ஒரு ஏழ்மை யான குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்ப து அவருக்கு எட்டாக் கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொ ட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடக ங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிது காலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு
நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்க ள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.
சினிமா பயணம்
தன்னுடைய நாடக குழுமூலம் பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வந்த அவர், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’. இருந் தாலும், திரைக்கு முதலில் வந்த படம் ‘மேனகா’ என்ற திரைப் படம் ஆகும். பெரும்பாலும், சொந்த மாக நகைச்சுவை வசனங்களை எழு தி, அதையே நாடகத்திலும், திரைப் படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுவந்த அவர், தொடர் ந்து பல படங்களில் நடித்து வந்தார். குறுகிய காலத்திற்குள் சுமா ர் 150 –க்கும்மேற்பட்ட திரைப்படங்க ளில் நடித்த அவர், நகைச்சுவையி ல் புதிய மறுமலர்ச்சியையை ஏற்படுத் திவிட்டார். மேலும், இவருடைய மனைவி மதுரம் அவர்கள், ஒரு பிரபலமான நடிகை என்பதால், இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்
சுவையை, சினிமா காட்சிக ளாக மட்டுமின்றி, பாடல்களா க வும் அமைக்க முடியும் என நிரூபித்தார். சொந்தக் குரலில் கருத்தாழமிக்க பல பாடல்க ளைப் பாடியுள்ள இவர் ‘பணம் ’, ‘மணமகள்’ போன்ற திரைப்ப டங்களையும் இயக்கியுள்ளார் .
சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்
இவருடைய நகைச்சுவைக் காட்சிக ள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளி லேயே புரிய வைக்கு ம் ஆற்றலை உண்டாக்கியவையாகு ம். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத் தினார். அறிவியல் கருத்துக்களையு ம், தன்னுடைய நகைச்சுவை வாயி லாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்தி ருத்த கருத்துக்களை திரைப் படங்க ளில் துணிவோடு எடுத்துக் கூறியவ ர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னு
டைய சிரிப்பால் அனைத்து மக்க ளையும் சிந்திக்க வைத்தவர். இதனால் தான் இவருக்கு “கலை வாணர்” என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கே ணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப் பட்டு கெளரவிக்கப் பட்டார்.
அவர் நடித்த சில திரைப்படங்கள்
‘சதிலீலாவதி’, ‘அம்பிகாபதி’, ‘சந் திரகாந்தா’, ‘மதுரை வீரன்’, ‘காளமேகம்’, ‘சிரிக்காதே’, ‘உத்த ம புத்திரன்’, ‘சகுந்தலை’, ‘ஆர்யமாலா’, ‘கதம்பம்’, ‘மங்கம்மா சபதம்’,‘ஹரிச்சந்திரா’,‘ஹரிதாஸ் ’, ‘பர்மா ராணி’, ‘பவளக்கொடி’, ‘பைத்தியக்காரன்’, ‘சந்திர லேகா’, ‘நல்லத்தம்பி’, ‘மங்கையர்க்கரசி’, ‘தம்பிதுரை’, ‘பவளக்கொடி’, ‘ரத்ன குமார்’, ‘மங்கம்மாள்’, ‘வனசுந்தரி ’, ‘பணம்’, ‘அமரக்கவி’, ‘கா வேரி’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘முதல் தேதி’, ‘ரங்கோன் ராதா’, ‘பைத்தியக்கார ன்’, ‘ஆர்ய மாலா’, ‘மங்கையர்க்க ரசி’, ‘ராஜா ராணி’, ‘பவளக்கொடி’, ‘சகுந்தலை’, ‘மணமகள்’, ‘நல்ல காலம்’, ‘ராஜா தேசிங்கு’.
அவர் பாடிய சில பாடல்கள்
‘ஜெயிலுக்குப் போய் வந்த’, ‘பணக்காரர் தேடுகின்ற’, ‘ஆசையாக பேசிப்பேசி’ (பைத்தியக்காரன்), ‘ஒண்ணுலேயி ருந்து’, ‘இடுக்கண் வருங்கால்’ ( முதல் தேதி), ‘சங்கரியே காளிய ம்மன்’ (ரங்கோன் ராதா), ‘காட்டு க்குள்ளே’, ‘ஒரு ஏகாலியைப்’, ‘ஆரவல்லியே’ (ஆர்யா மாலா), ‘கண்ணா கமலக் கண்ணா’, ‘ கண்னேந்தன்’ (கண்ணகி), ‘இரு க்கிறது பார் கீழே’ (மங்கையர்க் கரசி), ‘கண்ணே உன்னால்’, ‘சந்திர சூரியன்’ (அம்பிகாபதி), ‘தீனா ..மூனா.. கானா…’ (பணம்), ‘உன்னருளால்’, ‘என் சாண் உடம்பில்’ (ரத்னமாலா), ‘சிரிப்பு இதன் சிறப்பை’ (ராஜா ராணி
), ‘வாதம் வம்பு பண்ண’, ‘காசி க்குப் போனா கருவுண்டாகு மென்ற’ (டாக்டர் சாவித்திரி), ‘நித்தமும் ஆனந்தமே’, ‘விஜய காண்டிபா வீரா’, ‘அன்னம் வாங்கலையோ’, ‘இவனாலே ஓயாத தொல்லை’ (பவளக் கொடி), ‘இன்னுக்கு காலையி ல’, ‘வெகு தூரக்கடல் தாண்டி’ (சகுந்தலை), ‘நல்ல பெண்மணி’, ‘ஆயிரத்திதொள்ளாயிரத்தி ’, ‘சுதந்திரம் வந்ததுண்ணு’ (மணமகள்), ‘சும்மா இருக்காதுங் க’ (நல்லகாலம்).
தேசபக்தி
பாரதத்தின் தந்தை என போற் றப்படும், மகாத்மா காந்தியி ன் தீவிர பற்றாளராக விளங் கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரு டைய நினை வைப் போற்றும் வகையில், அப்பொழுதே ஐம் பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தினை செலவிட்டு, தன்னு டைய ஊரில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.
கலைவாணரின் சிந்தனையில் உதிர்ந்த ஒரு துளி
1957 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாவின் சார்பாக பிரச் சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில், அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் போட்டியிட்டார். அப்பொழு து காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், அவர், பேசுகையில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த மருத்துவரை பற்றி யே புகழ்ந்து பேசிவந்தார். இறுதியில், ‘இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு வைத்தியம்
பார்ப்பது யார்? அதனால் டாக்ட ரை உங்கள் ஊரிலேயே வைத்து க்கொள்ளுங்கள், சிறந்த பேச்சாள ரும், எழுத்தாளருமான அறிஞர் அண்ணாவை சட்டசபைக்கு அனு ப்புங்கள்’ என முடி த்தார்.
இல்லற வாழ்க்கை
1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திரு மணம் செய்துகொண்டார். அதன் பிறகு, ஒரு முறை “வசந்த சேனா” படப்பிடிப்பிற்காக புனேவிற் கு சென்றபோது, டி. எம். மதுரம் என் ற நடிகையுடன் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய் துக்கொண்டனர். இவர் திருச்சியிலு ள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆவா ர். பின்னர், டி. எம். மதுரத்தின் தங் கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாக ம்மைக்கு கோலப்பன் என்னும் மக னும், டி.எம். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.
கொலைக் குற்றச்சாட்டு
இந்துநேசன் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் அப்பொழுது பிரபல கதாநா யகனாக இருந்த தியாகராஜ பாகவதரு டன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய ப்பட்டார். சுமார் 30 மாதங்கள் சிறை வாசத்திற்குப் பிறகு விடுதலை செய்ய ப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்க ள், மீண்டும் படங்களில் நடிக்கத் துவங் கினார். இந்நிகழ்வு, இவரின் கலை ப்பயணத்திற்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினி மாவில் “கலைவாணர்” எனப் புகழப் பட்டார்.
மறைவு
நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நா ற்பத்தொன்பதாவது வயதி ல் கால மானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவா ணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.
தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், எ ன்எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத் தக்கருத்துக்களைத் திரைப்படங் களில் துணிவோடு எடுத்துக்கூறி யவர் எவரும் இல்லை. கருத்துக் களை வழங்குவதில்மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர் ளுக்குப் பணத் தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை
சொல்லப்போனால், என்.எஸ்கிருஷ்ணன் அவர்களை நகைச் சுவை நடிகர் என்ற வட்டத் துக்குள் அடை த்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிக ளைத் தூவிய மாபெரும் சிந்தனை யாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என்.எஸ். கலை வாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலை யுலகில் சாகா சரித்திர நாயகனாக இன் னமும் வாழ்ந்து வருகிறார். வாழ்ந்து வருகிறார்.
– சுகுமாரன்
THANKYOU