Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சவால் எண்.25: – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!

அதீத பணிச்சுமை மற்றும் சிறிது உடல்நலக் குறைவால் இப் பகுதியில் பதிவிட இயலவில்லை. இதோ மீண்டும் உங்கள் சிந்தை யைத் தூண்டும் சவால்களை தொடர்கிறேன்.

இப்பகுதியில் கடந்த‌ (27-11-2013 அன்று), சவால் எண்.24-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 275 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை

சுட்டிக்காட்டியவர்களது பெயர்கள் கீழே பட்டிய லிடப்பட்டுள்ள‍து.

1) திரு. ஜோசம் அருளாளனந்தன்
2) திரு. வி.பாலகுமாரன்
3) திரு. எஸ். ரூபன்
4) திரு. தீனதயாளன் (ராஜு) ஐதராபாத்
5) திருமதி ரஸ்வினா தாஹிர் (ஸ்ரீலங்கா)
6) செல்வி தாமரைச்செல்வி மலேசியா
7) திரு. மணிவண்ண‍ன், வேதாரண்யம்

மேற்காணும் இந்த ஏழு பேரையும் விதை2விருட்சம் இணையம் சார்பாகவும், பலத்த‍ கரவொலி மற்றும் குரலொலிகளோடு பாராட் டுக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதோ இன்றைய வாக்கியங்கள்:

1.1) கானக வேட்டையிளே மானெண்று என்னி ஒரு பாலகனைக் கொன்றான். அதன் பள‌னாக அப்பாள‌க‌னது தந்தையால் சபிக்க‍ப்பட்ட‍ மன்ன‍னவன்

1.2) காண‌க வேட்டையிலே மானென்று எண்ணி ஒரு பாலகனைக் கொன்ரான். அதன் பலனாக அப்பாலக‌னது தந்தையால் சபிக்க‍ப்பட்ட‍ மன்ன‍னவன்

1.3) கானக வேட்டையிலே மானென்று எண்ணி ஒரு பாலகனைக் கொன்றான். அதன் பலனாக அப்பாலக‌னது தந்தையால் சபிக்க‍ப்பட்ட‍ மன்ன‍னவன்.

***

2.1) சாபத்தை பெற்ற‍ அவனோ, அகமகிழ்ந்து புத்திர சோகம்தனை மறந்தவனானான் அம்மன்ன‍வன். காரணம் தேவியர் மூவரை மணந்த மணாளன் அவனே ஆயினும் அவன் பெயர் சொல்ல‍ பிள்ளைகள் யாருமில்லை

2.2) சாபத்தைப் பெற்ற‍ அவனோ, அகமகிழ்ந்து புத்திர சோகம்தனை மறந்தவனானான் அம்மன்ன‍வன். காரணம் தேவியர் மூவரை மணந்த மணாளன் அவனே ஆயினும் அவன் பெயர் சொல்ல‍ப் பிள்ளைகள் யாருமில்லை.

2.3) சாபத்தைப் பெர்ர‌ அவனோ, அகமகிழ்ந்து, புத்திர சோகம்தனை மர‌ந்தவனானான் அம்மன்ன‍வன். காரணம் தேவியர் மூவரை மன‌ந்த மனாளன் அவனே ஆயினும் அவன் பெயர் சொல்ல‍ப் பிள்ளைகள் யாருமில்லை

***

3.1) தன்நாடு திரும்பிய சிற்சில ஆண்டுகளில் அவனது தேவியர் மூவரும், நால்வருக்கு அன்னைகளாயினர். அவ்வ‍ன்னையர்களின் துணைவன் இம்ம‍ன்னவனோ தந்தையானான்.

3.2) தந்நாடு திரும்பிய சிற்சில ஆண்டுகளில் அவனது தேவியர் மூவறும், நாள்வருக்கு அன்னைகளாயினர். அவ்வ‍ன்னையற்களின் துணைவன் இம்ம‍ன்னவனோ தந்தையானான்.

3.3) தன்நாடு திறும்பிய சிற்சில ஆண்டுகலில் அவனது தேவியர் மூவரும், நால்வருக்கு அன்னைகளாயினர். அவ்வ‍ன்னையர்களின் துணைவன் இம்ம‍ன்னவனோ தந்தையாணான்.

***

4.1) முன்னொரு காலத்தில் இம்மன்ன‍வன் வ‌ரமிரண்டு கொடுத்தும் பெறாத தேவியர்களில் இரண்டாமவள், மூத்த‍வன் மணிமுடி சூடும் வேளையில் அவ்வ‍ரமிண்டை கேட்டுப் பெற்றாள்.

4.2) முண்ணொரு காலத்தில் இம்மன்ன‍வன் வறமிற‌ண்டு கொடுத்தும் பெறாத தேவியர்களில் இரண்டாமவள், மூத்த‍வன் மணிமுடி சூடும் வேலையில் அவ்வ‍ரமிண்டை கேட்டுப் பெற்றால்

4.3) முன்னொரு காலத்தில் இம்மன்ன‍வன் வ‌ரமிரண்டு கொடுத்தும் பெறாத தேவியர்களிள் இரண்டாமவள், மூத்த‍வன் மணிமுடி சூடும் வேளையிள் அவ்வ‍ரமிண்டை கேட்டு பெற்றால்

***

5.1) சாபம் பெற்ற‍ அத்தருணத்தில் அக‌மகிழ்ந்த அம்மன்ன‍வன், தன் பிள்ளைகள் பிரிந்த சோகத்தில் திளைத்தே மாண்டுபோனான்.

5.2) சாபம் பெற்ற‍ அத்தறுணத்தில் அக‌மகிழ்ந்த அம்மன்ன‍வன், தன் பிள்ளைகள் பிறிந்த சோகத்தில் திளைத்தே மாண்டுபோனான்

5.3) சாபம் பெற்ற‍ அத்தருணத்தில் அக‌மகிழ்ந்த அம்மன்ன‍வன், தன் பிள்ளைகள் பிரிந்த சோகத்தில் திலைத்தே மாண்டுபோனான்.

***

கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ள‍து என்பதை சுட்டிக்காட்ட‍வும்.

6.1) துண்ணியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

6.2) துன்னியார் குர்ர‌மும் தூர்ரும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

6.3) துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

கீழ்க்காணும் பாடல் வரிகளில் எந்த பாடல்வரி சரியானது?

7.1) கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே!

7.2) கன்னே கலைமானே கண்ணி மயிலென கண்டேன் உணை நானே!

7.3) கண்ணே களைமானே கன்னி மயிளென கண்டேன் உனை நானே!

9 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: