தேவையான பொருட்கள்:
* கோழி இறைச்சி – கால் கிலோ
* தயிர் – கால் கப்
* இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
* ஏலக்காய் – 3
* மிளகுத்தூள்
* சீரகத்தூள்
* மிளகாய்த்தூள்
* மஞ்சள்தூள் – சிறிதளவு
* கடலைமாவு
* எலுமிச்சை சாறு – சிறிதளவு
* வெண்ணெய் – சிறிது
செய்முறை:
* கோழி இறைச்சியினை எலும்புகளை நீக்கி சுத்தம் செய்து பெரிய துண்டங்களாக
வெட்டிக் கொள்ளவும். ஏலக்காய், பொடியாக அரைத்து சிறிதளவு எடுத்து கொள்ளவும்.
* தயிரினை நன்கு அடித்துக் கொண் டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத் தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சைசாறு , தேவையான உப்பு, கடலை மாவு அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ள வும்.
* இந்த கலவையினை கோழித் துண் டுகள் மீது பூசி 4 மணி நேரம் நன்கு ஊற விடவும்.
* இந்த துண்டுகளை ஒரு கம்பியில் நுழைத்து 350 டிகிரி சூடே ற்றப்பட்ட ஓவனில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடு க்கவும் (தந்தூ ரி அடுப்பில் 8 நிமிட ங்கள் போதுமானது. 3நிமிடங்க ளுக்கு ஒரு முறை எடுத்து வெண்ணெய் தடவி மீண்டு ம் வேகவிடவு ம்.
* பின்னர் எடுத்து பரிமாறவு ம். தேவையானால் அதன்மீது கொத்தமல்லி, தக்காளி சாஸ், வெள்ளரிக்காய், கேரட் தூவிக் கொள்ளலாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!