சமையலில் சில செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டிய வையும்! மனித வாழ்க்கையில் உணவு எவ்வளவு முக்கியத் துவம் பெறுகிறதோ, அதே போல, சமை யல் கலையும் முக்கிய பங்கு வகி க்கிறது. அந்த வகையில், நாம் சாப்பிடும் சாப்பாடு, பசிக்கு மருந் தாகவும், வாய்க்கு ருசியாகவும் இருக்க வேண்டும். ஆனால், சமையலில் சில செய்யக்கூடா தவையு ம், செய்ய வேண்டியவையும் உள்ளன. அது என்ன
என்று பார்ப்போம்…
செய்யக் கூடாதவை!:
*ரசம் அதிகமாக கொதிக்ககூ டாது.
*மோர்க்குழம்பு ஆறும்வரை மூடக் கூடாது.
* தேங்காய்ப் பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாகக் கொதிக்க கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தை யும் ஒன்றாக வதக்கக் கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடி யாக நறுக்கக் கூடாது.
* கீரைகளை மூடிப் போட்டு சமைக் கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய்நன்றாக காய க் கூடாது.
*குழம்போ, பொரியலோ, அடுப் பில் இருக்கும்போது கொத்தமல் லி இலையை போடக் கூடாது.
* சூடாக இருக்கும்போது, எலுமிச் சம் பழம் பிழியக் கூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக் கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக் கூடாது.
* பிரிட்ஜில் வாழைப் பழமும், உரு ளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
செய்ய வேண்டியவை!:
*வற்றல் குழம்பை, தாளித்த எண் ணெய், மேலேவரும் வரை கொதி க்க விட வேண்டும்.
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேர மாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை, முதல்நாள் இர வே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்கவேண்டும்.
* போளிக்குமாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண் டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்புபோட்டு காய்ச்ச வேண்டு ம்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்கவேண்டும்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வே ண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நா ன்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
Reblogged this on Gr8fullsoul.