இராவணன் பெருவீரன். மாபெரும்இசைக்கலைஞன். அவன் கொடியே வீணைதான். சாம வேதம் பாடுவதிலும், காம் போதி இராகம் இசைப்பதிலு ம் வல்லவன் என்றும் ஹம் ஸத்வனி எனும் இராகத்தை வடிவமைத்தவன் என்றும் சொல்ல ப்படுகிறது. பெரும் ஆற்றலும் திறமையும் பெற் றிருந்தும், தம்மைவிரும்பாத ஒரு பெண்ணை அடைய விரும்பி, கவர்ந்து வந்து சிறை வைத்து, இறுதிவரை வெளிவிட
மறுத்ததால் வீழ்ந்துபட்டா ன்.
வாரணம் பொருத மார்பும்,வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப
நயம்பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும்,
சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தே போட்டு,
வெறும் கையோடு இலங்கை புக்கான்.
1) எட்டுத் திசை யானைகளோடு போரிட்ட மார்பையும்,
2) திருக்கயிலையையே பெயர்த்தெடுத்த தோள்களையும்,
3) நாரத முனிவர்க்குச் சரிக்குச் சரியாக இசை வாதம் செய்த நாவையும்,
4)மாலை அணிந்தகிரீடங்கள் பத்தை யும் ,
5) சிவன் உவந்தளித்த சந்திரஹாஸ ம் எனும் வாளையும்,
6) தன் வீரத்தையும்
போர்க்களத்திலேயே போட்டு விட்டு இராமனிடம் தோற்று வெறும் கையோடு இலங்கையில் நுழைந்தா ன் இராவணன் என்கிறான் கம்பன்.
– யுவபாரதி
Reblogged this on Gr8fullsoul.