Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்

இன்றையமாடர்ன் உலகில் ஸ்மார்ட்போன் வாங்கவேண்டும் என்கிற ஆசை பலருக்கு ம் வந்துவிட்டது.  மாதம் பத்தாயிரம் ரூபாய் சம் பளம் வாங்குபவர்கள் கூட இ எம் ஐ-யில் 20 ஆ யிரம் ரூபாய்க்கு போன் வாங்குகிறார்கள்.இப்படி அதிகவிலை தந்து வாங் கும்போன் தொலைந்து போனாலோ அல்லது சேதம்அடைந்தாலோ அதனா ல்

நமக்கு  ஏற்படும் பாதிப்புகள் நிறைய. இந்தப் பாதிப்பிலிரு ந்து தப்பிக்க இன்ஷூரன்ஸ்  நமக்குக்கை தரும் என்றாலு ம், எந்தச்சூழ்நிலையில் நம க்கு கிளைம் கிடைக்கும், செ ல்போன் இன்ஷூரன்ஸ் பிரீ மியம் எவ்வளவு, கிளைம் செய்யத்தே வைப்படும் ஆவ ணங்கள் என்னென்ன என்ப து பற்றி பார்போம்.

புதிதாக வாங்கும் செல்போன்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க லாம். ஒருசெல்போனுக்கு  அதி கபட்சம் 3வருடங்கள்வரை இன் ஷூரன்ஸ் கிடைக்கும். அதற்கு மேல் இன்ஷூரன்ஸை புதுப்பி க்கும்போது இன்ஷூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் வரும். செ ல்போனின் மதிப்பில் 2-லிருந்து 3 சதவிகிதம்தான் பிரீமியம் இருக்கும்.  ஆனால், இன்ஷூர ன்ஸ் எடுக்கும்போது சில விஷ யங்களை பாலிசிதாரர்கள் கட் டாயம்  கவனிக்க வேண்டும்.செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பாலிசியின் நிபந்தனைகளைத்தெளிவாகப்  படித்துப்பார்ப்பது அவசியம். ஏனெனில், இந்த இன்ஷூரன் ஸில் நிபந்தனைகள்  நிறுவ னத்துக்கு நிறுவனம் மாறுபடு ம். சில நிறுவனங்களில் செல் போன் தண்ணீரில்  விழுந்தா ல் கிளைம் தரமாட்டோம் என் ற நிபந்தனை இருக்கும். இன் ஷூரன்ஸ் எடுத்த  ஒரு வருட த்தில் செல்போன் தொலைந் துபோனால் இத்தனை சதவி கிதம்தான் கிளைம்  கிடை க்கும் என்றும் நிபந்தனை வி தித் திருப்பார்கள். மேலும், செல்போன் தொலைந்துவிட்டது அல் லது திருடு போய்விட்டது என்ற  காரணங்களுக்காக கிளைம் கேட்டு விண்ணப்பிக்கும்போது காவல்துறையில் முதல் தக வல் அறிக்கை கட்டாயம்தே வை. சில இன்ஷூரன்ஸ் நிறு வனங்களில் செல்போன் கா ணாமல் போன சம்பவத்தைக் காவல்துறை முதல் தகவல் அ றிக்கை யாகப்பதிவு செய்ய வி ல்லைஎன்றாலும், காவல்து றையின் சமுதாயப் பதிவேட்டு ரசீதுஇருந்தால்போதும் எனக் கூறுகின்றன. எனவே, இன்ஷூரன்ஸ்  எடுப்பதற்கு முன்பே எ தற்கெல்லாம் கிளைம் கிடைக்கும், எதற்குக் கிடைக்காது  எ ன்பதை பாலிசியைப்படித்துப்பார்த்து தெரிந்துகொள்வது நல்லது.
பெரும்பாலான இன்ஷூரன் ஸ் நிறுவனங்கள் செல்போன் இன்ஷூரன்ஸ் வழங்குவதை யே  தவிர்த்து வருகின்றன. ஏ னெனில், இன்றையசூழ்நி லையில் வருடத்துக்கு ஒரு முறை  புதுசெல்போன் வாங் கும் பழக்கத்தைப்பலரும்வை த்துள்ளனர். எனவே,  வேண்டுமென்றே போனைதொலைத் திருக்கலாம் என இன்ஷூரன்ஸ் நிறுவனம்  சந்தேகப்படுவது தான் இதற்கு காரணம்.
மேலும், செல்போன் தொலைந் து போனால், காவல்துறையில் முதல்  தகவல் அறிக்கை பதிவு செய்வதும் கடினமான காரியம் . அதேபோல, முதல் வருடத்தி ல் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தா லும் அதில் அதிகபட்சம் மூன்று வருடம் வரை மட்டுமே  அந்த இன்ஷூரன்ஸைத்தொடர முடி யும்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, உங்கள் செல்போனு க்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
– ரூபாவதி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: