நான்கு வேதங்களைத் தொகுத்த வேத வியாசரால் தொகுக்கப் பட்ட 18 புராணங்கள் – வரலாற்றுத் தகவல்
வேதங்கள், உபநிஷத்து கள், இதிகாசங்கள் ஆகி யவற்றிற்கு அடுத்த இடத் தில் இருப்பவை புராண ங்கள்.
நான்கு வேதங்களும் அ நாதி காலந்தொட்டு ‘ஸ்ருதி’களாக இருந்து வருபவை.
‘உபநிஷத்துகள்’ ஒவ்வொரு வேதத்தின் ‘ஆரண்யகம்’ பகுதியில் பல இடங்களில் விரவியிருக்கின்றன. சில நேரங்களில்
‘உப நிஷத்துகளும்’, ‘ஆரண்யகம்’ என்றும் ‘வேதாந்தம்’ என்றும் அழை க்கப்படும்.
வால்மீகி இராமாயணம், வியாச மகாபாரதம் இரண்டு மட்டுமே இதி காசங்கள் என்றழைக்கப்படுகின் றன. இதிகாசம் என்றால் இப்படித் தான் நடந்தது என்று பொருள்படு ம். அதாவது அவை உண்மை வர லாறுகள். அவற்றில் கற்பனைக்கு அதிக இடமில் லை.
அடுத்து வருபவை புராணங்கள். வேதங்கள், இதிகாசங்கள் ஆகி யவற்றில் உள்ள உட்பொருளை சற்றுக் கற்பனையும் கலந்து யா வரும் எளிதில் புரிந்து கொள் ளக்கூடிய கதை வடிவில் உள்ளவை புராணங்கள். ‘புரா ண’ என்ற சொல்லுக்கு மிகப் பழைமையானது என்ற பொருள் உண்டு. வேதங்களி ன் அங்கங்களாக உள்ள பி ராம் மணங்களில் கூட புரா ணங்களைப் பற்றிய குறிப்பு கள் காணப்ப டுகின்றன.
நான்கு வேதங்களையும் தொ குத்த வேதவியாசரே புராணங்க ளையும் தொகுத்துக் கொடுத்து ள்ளார்.
திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகிய மூவரும் உருவாகக் காரணமாக இருந்த வேதவியாசரே அவர்களின் உண்மை வரலா ற்றை உடனிருந்து மகாபாரதம் என்ற இதிகாசமாக இயற்றியது டன் ஸ்ரீமத் பாகவத புராணம் என்பதையும் இயற்றியுள்ளார்.
புராணங்களில் 18 பெரிய புராணங்க ளும் 18 சிறிய உபபுராணங்க ளும் இ ருக்கின்றன. பதினெட்டுப் பெரிய புரா ணங்களைப் பற்றிய விவரங்களை இனி பார்ப்போம்.
விஷ்ணுவையும் அவரது அவதாரங் களையும் அடிப்படையாகக் கொண்ட வை:
1.விஷ்ணு புராணம்.
2.மத்ஸ்ய புராணம்.
3.கூர்ம புராணம்.
4.வராஹ புராணம்.
5.வாமன புராணம்.
6.கருட புராணம்.
7.ஸ்ரீமத் பாகவத புராணம்.
சிவபெருமானைக் குறித்த புராணம்: லிங்க புராணம்.
பிரம்மனுடன் தொடர்புடைய புராணங்கள்:
1.பிரம்ம புராணம்.
2.பத்ம புராணம்.
3.பிரம்ம வைவர்த்த புராண ம்.
4. பிரம்மாண்ட புராணம்.
மற்ற புராணங்கள்:
1.அக்னி புராணம்.
2.வாயு புராணம்.
3.பவிஷ்ய புராணம்.
4.நாரதீய புராணம்.
5.ஸ்காந்தம் (கந்த புராணம்).
6.மார்க்கண்டேய புராணம்.
விஷ்ணு புராணம்
இது மிகவும் பழைமையானது. 6 காண்டங்களையும், ஒவ்வொரு காண்டத்திலும் ஐந்து பெரும் பிரி வுகளையும் கொண்டது. பராசர மகரிஷி, மைத்ரேயருக்கு உபதேசம் செய்ததே விஷ்ணு புராண மாகும்.
மத்ஸ்ய புராணம்
விஷ்ணுவின் முதலாவது அவதாரமான ‘மத்ஸ் யம்’ (மீன்) தன்னைக் குறித்து மனுவிடம் விவரிப்ப தாக உள்ளது இப்புராண ம். பதிமூன்றாயிரம் ஸ்லோகங்களை உள்ளடக்கிய இப்புராணம் பல மன்னர்களின் வரலாறுகளைக் கதைபோல விவரிக்கிறது.
கூர்ம புராணம்
விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமா ன கூர்மம் (ஆமை) இந்திரத்யும்னன் என்று மன்னனிடம் விவரிப்பது போல அமைந்து ள்ளது. இதில் எட்டாயிரம் ஸ் லோகங்கள் உள்ளன. இப்புராணத்தில் தான் முதன் முதலாக ஜம்புஸ்த்வபம் எ ன்பதாக நமது பரத க்கண்டத்தின் பூகோ ள அமைப்பு விவரிக்கப்படுகிறது.
வராஹ புராணம்
விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்தை பதினான்காயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புரா ணம்.
வாமன புராணம்
பத்தாயிரம் ஸ்லோகங்க ளைக் கொண்ட இப்புராணம் வாமன அவதார வரலாற்றை மட்டுமல்லாது பரமேஸ்வர ன் – பார்வதி ஆகி யோரின் திருமண வரலாற்றையும்கூட விரிவாக விவரிக்கிறது.
கருட புராணம்
மகாவிஷ்ணுவானவர், தமது வாகனமாகிய கருடனுக்கு எட்டா யிரம் ஸ்லோகங்களில் விவரிக்கும் செய்திகளே இப்புராணம். இதில் மருத்துவம், வா ன் ஆராய்ச்சி, மரணத்தி ற்குப் பின் மனிதர் கள் அடையும் நிலைகள் ஆ கியவையும் விளக்கப்ப டுகின்றன.
ஸ்ரீமத் பாகவத புராணம்
வியாசரே எழுதியது. மகாபாரதத்தில் முழுமையாக இடம் பெறா த ஸ்ரீகிருஷ்ணரின் முழு வரலாறும், விஷ்ணுவின் பிற அவதாரங் கள் குறித்த செய் திகளும், பன்னிரண்டு காண்டங்களாகப் பிரிக்க ப்பட்டு பதினெட் டாயிரம் ஸ்லோகங்களாக விவரிக்க ப்பட்டுள் ளன.
லிங்க புராணம்
சிவபெருமானைக் குறித்தும் அவரது 28 வடிவங்களைப் பற்றியும் பன்னிர ண்டாயிரம் ஸ்லோகங்களில் விவரி க்கிறது இப்புராணம். லிங்க வழி பாட்டின் தோற்றமும், காரணமும், சிவபெருமானின் அவதார லீலைகளு ம் இதில் இடம்பெற்றுள்ளன.
பிரம்ம புராணம்
பிரம்மன் தட்சப் பிரஜாபதிக்கு விவரிப்பதாக உள்ள இப்புராணத் தில் 25,000 ஸ்லோகங்கள் உள்ளன.
பத்ம புராணம்
ஆறு காண்டங்களில் 55,000 ஸ்லோகங்களைக் கொண்ட பெரி ய புராணம் இது. பிரம்மனின் பத்மாசனம் விவரிக்கப்படுவதால் இது பத்ம புராணம் என்று பெயர் பெற்றது.
பிரம்மவைவர்த்த புராணம்
பிரம்மகாண்டம், ப்ரக்ருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண ஜன்ம காண்டம் ஆகிய பிரிவுகளுடன் பதினெட்டாயிரம் ஸ்லோக ங்கள் கொண்டது. இதில் உள்ள கணேச காண்டம் என்ற பகுதி தான் விநாயக புராணம் என்ற உபபுராணமாக பின்னர் உருவான து. “கிருஷ்ண ஜன்ம காண் டம்” என்ற பகுதிகளில் உள்ள தகவல் களை ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் காணலாம்.
பிரம்மாண்ட புராணம்
பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களைக் கொ ண்ட இப்புராணம் ஒரு பொன்னிற முட்டையிலிருந்துதான் நமது பிரபஞ்சம் (பிரம் மாண்டம்- தோன்றி விரிவடைந்தது என்று விவ ரிக்கிறது. நவீன விஞ்ஞானம் தற்கால த்தில் நம்பும் பெருவெடிப்பு என்ற நிகழ் வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளு க்கு முன்பே தொகுக்கப்பட்ட இப்புரா ணத்தில் காண லாம்.
அக்னி புராணம்
அக்னிதேவன் வசிஷ்ட மகரிஷிக்கு விவரித்தது இப்புராணம். சிவ லிங்கம், துர்க்கை, இராமர், கிருஷ்ணர் ஆகி யோ ரைப் பற்றியும், நாடகம், சிற்பம், ஜோதிடம் போன்ற கலைகளைப் பற்றி யும் விவரிக்கிறது என்பது இப்புரா ணத்தின் சிறப்பாகும்.
வாயுபுராணம்
பதினான்காயிரம் ஸ்லோகங்களைக் கொண்டு இப்புராணத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஆண்ட குப்த வம்சத்து மன்னர்க ளைப் பற்றியும், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்டர் என்பவரைப் பற்றியும் கூட தகவல்களைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பவிஷ்ய புராணம்
வருங்காலத்தில் என்னென்ன நிகழ்வுகளெ ல்லாம் நடக்க இருக் கின்றன என்று சூரியன் முன் கூட்டியே மனுவுக்குத் தெரிவிப்பதாக அமைந்தது இப்புராணம். ஸ்தலங்களைப் பற்றியும் அங்கெல்லா ம் யாத்ரிகர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பற்றியும் கூட இப்புராணம் விவரிக்கி றது.
நாரதீய புராணம்
நாரத மகரிஷியானவர் சனத் குமாரருக்கு உபதேசித்தது இப்புரா ணம். 25,000 ஸ் லோகங்கள் இதில் உள்ளன.
ஸ்காந்தம்
முருகனின் வரலாற்றை விவரிப்பதுதான் இப்புராணம்
மார்க்கண்டேய புராணம்
மிகப்பழைமையான புராணம் இது. இதிலுள்ள தேவி மகாத்மியம் என்ற பகுதிதான், பின்னர் தனியான ஓர் உப புராணமாக உருவெ டுத்தது.
மேற்குறிப்பிட்ட பதினெட்டு பெரிய புராணங்களும் தேவபாஷை யாகிய சம்ஸ்கிருதத்தில்தான் உள்ளன என் றாலும் பிற்காலங்க ளில் பாரத நாட்டி ன் பல்வேறு பாஷைகளிலும் மொழி பெயர்க்க ப்பட்டுள்ளன. உதாரணமாக, ஸ்காந்தம் தமிழில் கச்சியப்ப சிவாச் சாரியரால் கந்தபுராணம் என்ற பெயரி ல் வழிநூலாக எழுதப்ப ட்டது. ஹாலா ஸ்ய மகாத்மியம் என்ற உப புராணம் தான் பின்னர் திருவிளையாடற் புரா ணம் என்ற பெயரில் தமிழில் உருவெ டுத் தது.
– அம்மன் தரிசன(ம்)த்தில் இருந்து . . .