திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற் றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதுதான் ஹை லைட்.
மாங்கல்ய தாரணம் என்று இதைக் குறிப்பிடுவர். இவ்வாறு திருமணத் தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள். தந்து என்றால் கயிறு. மஞ்சள்கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது.
மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம். வறுமையில் வா டும் பெண்கள்கூட தங்கத்தாலி யை அடகு வைத்துவிட்டு, மஞ்ச ள் கயிறில் மஞ்சள் கிழங்கை
கட்டி தாலியாக அணிந்து கொள் வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இரு க்க வேண்டும்.
கன்னாபின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உப யோகிக்கும் இக்காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜி ஏற் படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது இதென்ன கலாச் சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்து கிறது.
தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜி எல்லாம் வராது. இன்றும் கூட மிகப்பெரும் பணக் காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள்.
கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனிதான். இதைத்தான் இறைவனும் விரும் புவான். கணவருக்கும் ஆயு ள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.