முருகப்பெருமான், சூரபத்மனை கொல்லவில்லையே! அது ஏன்? எதற்காக? – ஆன்மீக அதிசயம்
‘சஷ்டி’என்றால் ஆறு என்றுபொருள். திதிகளி ல் ஆறாவது என்பதால் அதற்கு ‘சஷ்டி’ என்று ம் பெயர். ‘ஸ்கந்த சஷ்டி’ என்பது ஆறு முகப் பெருமான், சூரனை வதைத்த பெருமையைக் கொண்டாடும் விழாவாகும். ஐப்பசி மாதம், சுக்ல பட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் ஸ்கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாட் களையும் முருக பக்தர்கள் விரத
நாட்களாகக் கருதி வழிபடுகின்ற னர்.
கூர்கொண்ட வேலன், போர் பூண்ட காலன், ஆறிரு தடந்தோளன் ஆறுமுகனுக்கு ஆயிர மாயிரம் கோயில்கள் இருந்தாலும் திருச் செந்தூர் தனிச்சிறப்பு வாய்ந்தது. முருகனி ன் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் மட் டுமே கடற்கரைக் கோயில். ‘திருச்சீரலை வா’ என அழைக்கப்பட்ட திருச்செந்தூரில் அமைந்துள்ள இக்கோயில், சங்க இலக்கிய ங்களில் குறிப்பிடப்படும் சிறப்பு வாய்ந்தது. இங்கு கொண் டாடப்படும் ‘ஸ்கந்த சஷ்டி’ விழா உலகப் பிரசித்தி பெற்றது. பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் இங்கு முருகப்பெருமான் நிகழ்த்தும் சூர சம்ஹார வைபவத்தைக் காணக்கண் கோடி வேண்டும்.
மங்கலங்களையே விரும்புவது மனித மனம். மங்கலங்களை நமக்களிப்பது போதுமென்ற மனம். போதுமென்ற மனத் தை அடையத்தடையாக இருப்பதுஆசை. அதுபோன்றே, பரம்பொருளாம் இறை பதம் சென்றடைய ஆணவம், கன்மம், மா யை போன்றவை தடைகளாக உள்ளன. இம்மும்மலங்களின் மொத்தத் தோற்ற மே சூரபத்மன். அதர்மத்தின் வித்தான இ வனது கொடுமையால் விளைந்தது தே வர்களின் சிறைவாசம். தேவர்தம் குறைதீர்க்கும் பொருட்டு சிவபெ ருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோ ற்றமானான் கந்தப் பெருமான்.
ஆறுமுகன் தரிசனம் வேண்டி, தேவ குரு பிரகஸ்பதி செந்தூர் தலத் தில் தவமிருக்க, அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான் இங்கேயே தங்கினார். தேவகுருமூலம் சூர பத்மனின் கொடுங்கோல் பின்னணியையு ம் தெரிந்துகொண்டார். அவனைத் திருத்தி ஆட்கொள்ள சமாதானம் வேண்டி தமது படைத்தளபதி வீரவாகுவைத் தூதாக அனு ப்பினார்.
அசுர குணமல்லவா? ஆண்டவன் அருட் குணத்தைப் புரிந்து கொள்ள வில்லை. போருக்குக் கிளம்பி வந்த சூரபத்மனை வெற்றி கொண்டான் முருகப் பெருமா ன். இது, ‘ஆணவம்’ எவ்வகையில், எத் தனை முறை தலை யெடுத்தாலும் அது பூண்டோடு அழிக்கப்பட்டே தீரும் என்ப தை உணர்த்துவதாகும். இறுதியில் சூர பத்மனை வாஞ்சையோடு ஆட்கொள்ளவும் செய்தார் சிவனார் மைந்தன்.
எப்படி? முருகப்பெருமான் சூரபத்ம னை கொல்ல வில்லை. மாறாக, மாமரமாக உருமாறி எதிர்த்த சூர பத்மனை தமது வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். இருகூறா கப் பிளந்த மாமரம், சேவலாகவு ம், மயிலாகவும் மாறியது. அசுர சுபாவத்தால் எதிர்க்கவும் முனை
ந் தது. தம் அருட்பார்வையை அவற் றின்மீது செலுத்தி ஆட்கொண்டார் முருகப்பிரான். கொடியவனான சூர ன் சேவல் கொடியானான்; வேலவ னைத்தாங்கும் வாகனமும்ஆனான்.
தேவர்களைப் பொறுத்தவரை நடந் தது சம்ஹாரம் என்றாலும், சூர பத்ம னைப் பொறுத்தவரை அவனுக்கு நிகழ்ந்தது மங்கலமே. அனைவரையும் அலற வைத்தவன், அனைவ ராலும் வணங்கப்படுபவனாக ஆனது, எவ்வளவு பெரிய மாற்றம்?! ஆறுமுகனல்லவா இப்பேற்றை அவனுக் கு அருளினான்.
ஸ்கந்த சஷ்டியன்று, யானை முகன், சிம் ம முகன், சூரபத்மன் என மூன்று ரூபங்க ளில் வரும் அசுரர்களை வதைக்கிறார் முருகப் பெருமான். இம்மூன்று அசுரர்க ளும்முறையே மாயை, கன்மம், ஆணவம் போன்றவற்றை உணர்த்துகின்றன. மா யையை உணர்த்தும் யானை முகன் முத லில் வதைக்கப்படுகிறான். மாயை ஒழிந் தால் கன்மம் தானாகவே தொலையுமாத லால் அடுத்து, சிம்ம முகனை வதைக்கி றார். மூன்றாவதாக, ஆணவ மலமானவ ன் சூரபத்மன். ஆணவ மலம் ஒடுங்குமே தவிர, அழியாது. எனவே, சூரபத்மனை மயிலாக வும், சேவலாகவும் ஒடுக்கிப் பணிகொண்டார் முருகப் பெருமா ன். இதுவே ஸ்கந்த சஷ்டி நமக்கு உணர்த்தும் தத்துவப் பொருளாகும்.
மனிதத் தலைகளாய் அல்லது கடல் அலைக ளாய் என வியப்புறும் வண்ணம் லட்சோப லட்சம் மக்கள் பங்கு பெற்று களிப்புறும் திரு ச்செந்தூர் ஸ்கந்தசஷ்டி திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடை பெறுகிறது. முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொள்ளப்பட்டு, முடிவில் சூரசம்ஹார ம் நடைபெறுகிறது. பின்பு, ஏழாம்நாள் முருக ப்பெருமான் – தெய்வா னை திருக்கல்யாண வைபவம். அடுத்த ஐந்து நாட்கள் சுவாமி திரு க்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை சாதிக்கிறார். எதிர்த்து நின்ற வனையும் ஏற்று க் கொள்ளும் அம்பிகையின் அருமந்த புதல் வனின் அருட்திறத்தைத்தான், திருச்சீரலை வாயின் கடலலைகள் இன்றும் பாடிக் கொண் டிருக்கின்றன.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!