ஒரு மனிதனுக்கு எந்தெந்த வயதில் உடல் எடை அதிகரித்து குண்டாகிறது ?
ஒரு மனிதனுக்கு எந்தெந்த வயதில் உடல் எடை அதிகரித்து குண்டாகின்றது?
ஒரு மனிதன் எந்தெந்த வயதில் அவனது உடல் எடை அதிகரித்து குண்டாகி விடுகிறது என்பதை
மருத்துவர்கள் மூன்று நிலைகளாக பிரித்துள்ளனர். அவை முறையே குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் ஆவர். இந்த மூன்று நிலைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
குழந்தைப் பருவத்தில் அளவுக்கதிகமாக நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதாலும், குழந்தைகளை ஓடியாடி விளையாட விடா மல், தடுப்பதாலும் இளம் பருவத்திலேயே உடல்பருமன் ஏற்படுகிறது.
பெண்களுக்கு, திருமணமாகும்வரை மட்டும், `உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தால்போதும்’ என்ற மனநிலைஉள்ளது. திருமணத்துக்குப் பின்னர், ஹார் மோன்கள் காரணமாக எடை கூடுவதைக்காட்டிலும், தவறான உணவு முறை மற்றும் வாழ்வியல் முறை காரணமாகவே அதிக எடை கூடுகிறது.
ஆண்கள், திருமணமாவதற்குமுன்புவரை, பெரும் பாலும் காலை உணவைத் தவிர்த்துவிடுகின்றனர். திருமணம் ஆன பின்னர், தினமும் மூன்று வேளையும் சாப்பிடுவதாலும், விளையாட்டுகள், உடற்பயிற்சி போன்றவற்றில் இருந்து, அறவே ஒதுங்குவதாலும் 30 வயதில் தொப்பை வர ஆரம்பித்துவிடுகிறது.