கண் கலங்கிய விவேகானந்தர்!- நெஞ்சை உருக்கும் உண்மைச் சம்பவம்
கண் கலங்கிய வீரத்துறவி விவேகானந்தர்!- நெஞ்சை உருக்கும் உண்மைச் சம்பவம்
“வீரன் ஒருநாள் தான் சாகிறான், கோழை தினமும் சாகிறான்…’ என்று வீரமொழி பேசிய விவேகானந்தரே ஒருசமயம்
கண் கலங்கியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானே இருக்கிறது. எதற்காக அவரது கண்களில் நீர் முட்டியது?
ஜன.12,1863ல்மக்கள், மகரசாந்தி பண்டிகையைக் கொண்டாடிய நன்னாளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உதித்தார் சுவாமி விவேகானந்தர். உலகில் எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பதை விட, என்ன சாதிக்கிறோம் என்பதே மிக முக்கியம். விவேகானந்தர் 39 ஆண்டுகள்தான் இந்த பூமியில் வாழ்ந்தார். ஜூலை 4, 1902ல் இயற்கை அவரை தன்னோடு அணைத்துக் கொண்டது; ஆனால், இந்த குறுகிய காலத்தில் அவர் செய்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்ததேசம் வறுமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கிக்கிடக்க காரண ம் என்ன என்பது பற்றி அவர் ஆராய்ந்தார். அதற்கு விடை, அவருக்கு கன்னியாகுமரியில் கிடைத்தது. 1892ல் குமரி முனைக்கு வந்து, பகவதி அம்மனை தரிசித்தார்.
“அம்மா மகாசக்தி! நீ இமயத்தில்பார்வதியாய்இருக்கிறாய் ; இங்கே பகவதியாய் வீற்றிருக்கிறாய். கன்னியாக இருந் தாலும் நீ உலகத்தின் தாயல்லவா! இங்கு அந்நியர்களின் அரசாட்சி நடக்கிறது. மக்கள் தங்கள் நிலையை மறந்து, அந்நியர்களின் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனரே! இது அவர்களைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறதே! இதற்கு தீர்வு என்ன?’ என்று முறையி ட்டார்.
தன் கேள்விக்கு விடை வேண்டு மானால் தனிமை வேண்டுமெனக்கருதி கடலில் குதித்து, நீச்சலடித்து ஒரு பாறையை அடைந்தார். அங்கே தியானத்தில் ஆழ்ந்தார். அவரது உள்ளுணர்வில் பல எண்ணங்கள் ஓடின; அவை, காட்சிகளாக மலர்ந்தன. பாரதம் அவர து கண்களின் முன் பரந்து விரிந்தது. இங்கே மொழிக ளும், மக்களின் பழக்க வழக்கங்களும் மாறுபட்டிருந் தாலும், இவர்களையெல்லாம் இணைக்கும் பாலமாக வேதங்களும், ஆகமங்களும், புராணங்களும், சித்தாத்தங்களும்இருப்ப து தெரிந்தது.
ஒவ்வொரு இந்தியனும், ஏதோ வாழ்ந்தோம், மடிந்தோம் என்பதற்காக பிறக்கவில்லை; இந்த ஆன்மிக அமுதத்தை ருசிக்கவே அவன் பிறந்திருக் கிறான். இந்த மக்களை ஆன் மிகத்தின் மூலமாக மட்டுமே இணைக்க முடியும். ஆன்மிக மே இந்தியாவை இணைக்கும் பாலம் என்பது புலப்பட்டது.
அதேநேரம், வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்தியனிடம் ஆன்மிகத்தைப் பற்றி போதித்தால் எடுபடாதே! அவனது பசியைப் போக் கிவிட்டு, ஆன்மிகத்தைப்போதித்தால், அவனிடம் ஒழுக்கக்கேட்டை உரு வாக்கும் அந்நிய கலாசார பழக்கங்களை போக்குவது குறி த்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். ஆனால், அவனது பசி யைப்போக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரும் பணம்வேண்டுமே! அப்போதுதான் அவரது கண்கள் கலங்கின.
அந்த கலங்கிய கண்கள் கடலை நோக்கிச் சென்றன. அந்த ப்பார்வை அமெரிக்காவைக் காட்டியது. சனாதன தர்மம் எனப் படும் இந்து மத கொள்கைகள் அந்த தேசத்தில் ஒலிக்குமானால், அது உலகையே எட்டும். அங்கே நடக்கப்போகும் சர்வமத மகாசபை கூட்டத்தில் நமதுகருத்துக்களை ஏற்கும்வகையில் பேச வேண்டும். அதற்காக தரப்படும் பொருளைக் கொண்டு நமது தேசத்தில் மடங்களை நிறுவவே ண்டும். அதற்கு நம் குருநாதர் ராமகிருஷ்ணரின்
பெயரை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
குமரியில் பிறந்த இந்த சிந்தனை பெரும் சிரமத்தின்பேரில் வெற்றியும் பெற்றது; நமது தேசத்தின் மாண்பு காப்பாற்றப் பட்டது. இன்று ராமகிருஷ்ண மடங்கள் பாரதமெங்கும் விரிந்து கிடக்கின்றன.