கரிநாள் கணக்கிடும் முறையும்! செய்யக்கூடாத செயல்களும்!
கரிநாள் கணக்கிடும் முறையும்! செய்யக்கூடாது செயல்களும்!
கரி நாளைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் திதி, நட்சத்திரம் தொடர்பா ன கணக்குபற்றி அறிந்து கொள்ளவேண்டும். சந்திரனை நெருங்கக்கூடிய
பாகையை திதி என்றும், அதற்கு எதிரே உள்ள பாகையை நட்சத்திரக் கணக்கு என்றும் கூறுவர். இதில்குறிப்பிட்ட திதி, நட்சத்திரமும் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அதனைத் கரி நாளாக கணக்கிடுகிறார்கள்.
மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்குள் பரணி, கிருத் திகை, ஆயில்யம், பூரட்டாதிபோன்ற சிலநட்சத்திரங் களும் (நட்சத்திர த்யாஜ்யம்), 15திதிகளுக்குள் அஷ்டமி,நவமி போன்ற சில திதிகளும் (திதி த்யாஜ்யம்), 7கிழமைகளுக்குள் செவ்வாய், சனிபோ ன்ற சிலகிழமைகளும் (வார த்யாஜ்யம்) திரு மணம் போன்ற சுபகாரியங்களுக்கும், நீண்ட தூர பிரயாணம் போன்றவற்றுக்கும் விலக்க ப்படவேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
அதைப்போலவே (மாச த்யாஜ்யம் எனப்படும்), ஒவ்வொரு (தமிழ்) மாதத் திலும் சில நாட்களிலும் திருமணம் போன்ற சுபகாரி யங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதையே கரிநாள் என்று கூறுகிறார்கள். வடமொழி நூல்களும் இந்தக் கரிநாளை ‘தக்த யோகம்’ என்று குறிப்பிடுகின்றன. இந்த கரி நாட்கள் என்பவை தமிழ்மாதத்தின் குறிப்பி ட்ட தேதிகளின் அடிப்படை யில் தீர்மானிக்கப்படுகின்றன. வருஷாதி நூல் என்னும் ஜோதிட புத்தகம், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் எந்தெந்த நாட்
கள் (தேதிகள்) கரிநாட்கள் என்று கூறுகின்றன.
சித்திரை மாதம், 6, 15ஆம் தேதிகள்: வைகாசி 7, 16, 17ஆம் தேதிகள்: ஆனி 1, 6ஆம் தேதிகள்; ஆடி 2,10, 20 ஆம்தேதிகள்: ஆவணி 2,9,28ஆம்தேதிகள்; புரட்டா சி 16, 29ஆம் தேதிகள், ஐப்பசி 6ஆம் தேதி, கார்த்தி கை மாதத்தின் முதல் திங்கட் கிழமை மற்றும் 1, 10, 17ஆம் தேதிகள், மார்கழி 6, 9, 11ஆம் தேதிகள்; தை 1, 2, 3,11,17ஆம் தேதிகள்; மாசி 15,16,17ஆம் தேதிகள்; பங்குனி 6,15,19ஆம்தேதிகள் என்பதாக வருஷத்தில் மொத்தம் 34நாட்கள் கரிநாட்கள் எனப்படும். அனைத்து வருஷங்களி லும் இக்குறிப்பிட்ட தேதிகள்தான் கரி நாட்கள். இதில் மாறுதலில்லை.
ஆகவே, இக்கரிநாட்களில்திருமணம், கிருஹ பிர வேசம், சீமந்தம், நீண்ட தூர பிரயாணம் போன்ற வற்றை செய்தாலோ அல்லது தொடங்கினாலோ , அவை கெடுதலில் முடியும். மேலும் அந்த கெடுதல் நமது வாழ்நாள் முழுவதும் நம்மை நிழல்போல தொடர வாய்ப்பு இருப்ப தால் இவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. ஆனால், பூஜைகள் ஹோமங்கள் பரிகாரங்கள் ஆகியவற்றை கரிநாட்களில் செய்யலாம். மேலும் விருத்தி க்கு வரக்கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை அன்று நடத்தலாம். உதாரண மாக கடனை அடைக்கும்பணியை மேற்கொ ள்ளலாம். ஏனென்றால் அன்றைக்கு கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது.
=> சுப்பையா பிள்ளை
மிக்க நன்றி! பயனுள்ள தகவல்!!