Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காட்டுக்குள்ளே ஓர் அதிசய சிவாலயம்! – அங்கே யானை உருவில் ஆலமரம்! – அரிய ஒளிப்படங்களுடன் அபூர்வத் தகவல்

காட்டுக்குள்ளே ஓர் அதிசய சிவாலயம்! – அங்கே யானை உருவில் ஆல மரம்! – அரிய ஒளிப்படங்களுடன் அபூர்வத் தகவல்

காட்டுக்குள்ளே ஓர் அதிசய சிவாலயம்! – அங்கே யானை உருவில் ஆல மரம்! – அரிய ஒளிப்படங்களுடன் அபூர்வத் தகவல்

அனைத்து மதங்களுக்கும் பொதுவானதோர் நகரமாக விளங்கும். இந்த நகரத்திலிருந்து பார்க்கும்போது

நாலாபக்கமும் தூரத்தே தெரியும் ஆரண்யகத்தின் வனப்பு மெய்சிலிர்க்க வைக்கும். இந்த அழகிய நகரம் இலங்கையின் இரத்தின மாநகரம் என்ற ழைக்கப்படும்  இரத்தின புரியிலிருந்து 53கி,மீ, தொலைவில் இருக்கிறது இந்த இறக்குவானை எனும் அழகிய நகரம், சிங்கராஜ வனத்தை எல்லை ப் பகுதியாகக் கொண் ட நகரம், .
இந்த காட்டுக்குள் ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகவும் அது அதிசக்தி வாய்ந்த ஆலயம் என்றும் அப்பகுதி மக்கள் அடிக்கடி பேசிக் கொள்வதுண் டு. அதனை கண்டறிவதற்காக முத்துமணியின் பயணம் ஆரம்பமானது.

‘ஆமாங்க பழைய காலத்துக்கோயில் ஒன்னுஇருக்குது. கங்கொடை என் கிறஇடத்த தாண்டி காட்டுவழியாபோகனும். யானைஉருவத்தில ஓர் ஆல மரம் இருக்கும். அதான் அடையாளம்’ என்றார் ஊர் பெரியவர் ஒருவர். யானை உருக்கொண்ட ஆலமரம் என்றதும் எதிர்பார்ப்பு அதிகமானது.
நகரத்திலிருந்து 8 கிலோ மீற்றர் தூரப் பயணம். சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரை கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். காட்டுவழியே கால்நடையாகச் செல்லும்போது கவனமாக செல்லும்படியும் குரங்குகளி ன் அட்டகாசம் அதிகம் என்றும் கங்கொடையில் கொழுந்து பறித்துக் கொ ண்டிருந்த தொழிலாளாகள் கூறினார்கள். உயர்ந்த மலை. அதிகாலைப் பொழுதில் சில்லென்ற காற்றோடு பனி படர்ந்து உள்ளத்தையும் நனைக்கி றது. காட்டுக்குள் கரடு முரடான பாதையில் வெகுதூரம் நடந்த பின்னர் தெரிகிறது அந்த ஆலமரம்.
ஆம்! அப்பெரியவர் சொன்ன ஆலமரமாகத் தான் இருக்கும் என ஊகித்துக் கொண்டோம். ஆனாலும் அந்த இடத்திற்குச் செல்வதற்கு பாதை இருக்க வில்லை. பாதை எங்கே எனத் தேடியபோதுதான் மலைப்பாறைக்கு உச்சி யில் சிறியதாய் ஓர் ஆலமரம் இருப்பதும் ஓங்கியுயர்ந்த தென்னை மரத் தோடு கீழே கடவுள் சிலைகள் இருப்பதற்கான அடையாளம் இருப்பதையு ம் கண்டோம்.

கோயிலுக்கு செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் பழைமை யை எடுத்துக்காட்டின. பாதையை அமைத்துக்கொண்டு செல்வோம் என உறுதி கொண்டு ஆலமரத்தை நோக்கி முத்துமணி, தன் பயணத்தை தொ டங்கினார்.  
என்ன அதிசய‌ம்? ஆலமரத்தின் ஒரு கிளை யானைத் தந்தத்தைப் போல வே காட்சியளிக்கிறது. மற்றொரு கிளையும் அவ்வாறுதான். யானையின் கண்களைப் போலவே இயற்கை படைப்பின் அடையாளங்கள் விளங்கி ன. பரந்த உலகில் எல்லைகளற்ற அதிசயங்களோடும் அழகோடும் மனித சக்திக்கு அப்பாற்பட்டிருக்கும் இயற்கையில் இப்படியும் ஒரு பரிமாணம் இருக்கிறதா என வியப்புச் சிந்தனை துளிர்ந்தது.
அங்கிருந்து சாதாரண தூரத்தில்தான் அக்கோயில் இருந்தது. எனினும் முட்செடிகளுக்குள்ளே நடக்கவேண்டிய கட்டாயம். சரி ஆகட்டும் என எண்ணிக்கொண்டு கோயிலைநோக்கிசென்றோம். முற்றுமுழுதாகபரந்த தொரு பாறையின் மீதிருக்கிறது கோயில். மிகமிக பழைமையான படிக்க ட்டுகள் உடைந்த நிலையில் எம்மை வரவேற்றன. பாதணிகளை அகற்றி க்கொண்டு நாம் மேலேசென்றபோது, தூரத்தே தெரிந்தமலைகள் அனைத் தும் மிக அருகில் தெரிவது போலிருந்தது.
மென்மையான காற்று அமைதி கலந்து வீசியது. அது ஆழ்மனதின் மைய ங்களை தொட்டுச்செல்வதாய் ஓர் உணர்வு. கவனிப்பாரன்றி பாழடைந்த நிலைமையில் மிகச்சிறிய இலிங்கச் சிலையோடு இன்னும் சில இந்துத் தெய்வச் சிலைகள் இருந்தன. யாரோ பற்றவைத்துவிட்டுப்போன ஊதுவ ர்த்தியும் சில காட்டுப்பூக்களும் வாசனை வழங்கிக்கொண்டிருந்தன. நா மும் கடவுளை வணங்கிவிட்டு இந்த ஆலயம் பற்றி மேலதிக தகவல் களை யாரிடம் பெறலாம் என எண்ணிக்கொண்டிருந்தவேளை தூரத்தே ஒரு பெரியவர், களைப்போடு நடந்துவந்துகொண்டிருந்தார்

‘என்னோட பெயர் தேவராஜ். வயசு 68ஆகிறது. நான் சின்னவயசில இருந் து இங்கதான் இருக்கேன். காட்டுப் பக்கத்தில தான் என்னோட வீடு இருக் குது. 1800 வருஷத்திலிருந்து இந்தக் கோயில் இருக்கிறதா எங்க தாத்தா சொல்லுவாரு.

நல்ல சக்தியுள்ள கோயிலுங்க. இப்போ யாருமே கவனிக்கிறதில்ல. கங் கொடையில உள்ள சின்னப் பிள்ளைங்க இங்க வந்து விளையாடுவாங்க. அந்த ஆல மரத்த பார்த்தீங்களா? அத பார்த்தாலே உங்களுக்கு இக்கோயி லோட அதிசயம் விளங்கியிருக்கும். காட்டுக்குள்ள ஆறு ஒன்னு இருக்கு து. அதுக்கு மூலிகை ஆறுனுபெயர். சிங்கராஜ காட்டுக்குள்ள மூலிகை கலந்து வருது. அதுதான் இக்கோயிலோட தீர்த்தம். இன்னும் 1 கி.மீ. நடந் திங்கன்னா அதையும் பார்த்து குளிச்சிட்டு வரலாம். நோய் தீர்க்கக் கூடிய ஆறு அது’ என்று சொல்லிக் கொண்டே நடந்து கொண்டிரு ந்தார்.
இது வேடுவர்களின் வழிபாட்டிடமாக இருந்திருக்கலாம் என நாம் பேசிக் கொண்டோம். உண்மை எதுவென்று நாம் சந்தித்த எவருக்கும் தெரிய வில்லை. ஆம்! உண்மையில் அந்த ஆறு அதிக சலசலப்பின்றி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நாம் குளித்துவிட்டு மீண்டும் கோயிலுக்கு வந் து சற்றுநேரம் அந்த இயற்கையை ரசித்துவிட்டு மீண்டும் இறக்குவானை யை நோக்கி நடக்கத் தொடங்கினோம். எழுத்தில் வராத ஆவணப்படுத்த ப் படாத தொன்மையின் சான்றாக விளங்கக்கூடிய எத்தனையோ ஆலய ங்கள் இவ்வாறு காட்டுப்பகுதியில் இருக்கலாம். அவை தொடர்பான தகவல்களை திரட்டிப் பெறவேண்டியது அவசியமாகும்.

=> முத்துமணி

 

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: