Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கரகரப்பாகவும் இருப்பது ஏன்?

ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கரகரப்பாகவும் இருப்பது ஏன்?

ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கரகரப்பாகவும் இருப்பது ஏன்?

நாம் எவ்வாறு பேசுகிறோம்?
ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்?

இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின்

குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சரியமான வி ஷயம்தானே நண்பர்களே. உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக் கொள்வோம் யாருடைய குரலாவது இன் னொருவரின் குரலோடு 100%பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல் லை என்றுதான்கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை.

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் பொதுவாக ஒரு குரலை கேட் டவுடன் அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆணா அல்லது பெண்ணா என்று நம் மால் இலகுவாக கூறிவிட முடிகிறது தானே, எப்படி நம்மால் கண்டறிந்து கொள்ளமுடிகிறது என்றால், ஆண்களி ன் குரல் பெண்களின் குரலைக்காட்டி லும் சற்று தடிம னாகவும் கொஞ்சம் கரகரப்பாகவும் இருப்பதா ல்தான். அதே வேளையில் பெண்களின் குரலை எடுத்துக்கொ ண்டோமானால் அவர்களின் குரல் மென் மையாகவும் (Soft) இனிமையாகவும் இரு க்கும் அந்த மென்மைதான் ஆண்களின் கு ரலிலிருந்து பெண்களின்குரலை முற்றி லும் வேறுபடுத்திக் காட்டுவதற்குறிய மு க்கிய காரணி ஆகும்.இதில் கவனிக்கப் ப டவேண்டிய முக்கியமான விஷயம் என்ன வென்றால் குழந்தைகள் வளர வளரத்தான் குரலில் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும், பிறந்து மூன்று நான்கு வயது வரையிலான குழந்தைகளிடம் இந்த குரல் வித்தியாசத்தை நம்மால் அதிகம்உணர்ந்து கொள்ளமுடியாது. இதற்க்குறிய காரணத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் நாம் எப்படி பேசுகிறோம் என்பதை பற்றி தெரிந்து கொ ள்வோம் வாருங்கள்.

நாம் எப்படி பேசுகிறோம் என்பது பற்றி விள க்கமாக கூறினால் இந்த பதிவு நாம் மேல் நிலைப்பள்ளியில் பயின்ற விலங்கியல் பாட பிரிவை நினைவு கூர்ந்துவிடும் அபாயம் இருப்பதால் என் னால் இயன்றவரை நாம் எப்படி பேசுகிறோம் என்பதை சுருக்க மாக இங்கே தருகிறேன். மனிதர்களின் தொண்டைப் பகுதியில் குறிப்பாக குரல் வளையில் கிடைமட்டமாக அமைந்து இ ருக்கும் ஒரு ஜோடி தசைமடிப்புகள்தான் மனிதன் பேசுவதில் முக்கிய பங்கு வகிக் கிறது என்று சொன்னால் மிகையில்லை. குரல்நாண்கள் (Vocal Cords)என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர் ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போ து வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் நரம் பைப் போல விறைப்பான (Temper) நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும்போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முய ற்சிக்கும்போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின்மீது குறிப்பிட்ட அழுத் தத்தில் மோதி குரல் நாண்களை அதிரச் செய்து சப்தத்தை உண்டாக்குகிறது.

வீணையில் இழுத்துக்கட்டப்பட்ட நரம்புகளை விரல்களால் மீட்டும்போது எப்படி சப்தம் உண்டாகிறதோ அதுபோலவே வி றைப்பாக நிற்கும் குரல் நாண்களி ன் மீது அழுத்தப்பட்ட காற்று வந்து மோதும்போதும் சப்தம் உண்டாகி றது. சாதாரணமாக குரல் நாண் வளர்ந்த ஆணில் 17.5mm முதல் 25mm வரை யிலும், வளர்ந்த பெண்ணில் 12.5 mm – 17.5mm வரை நீளமும் இருக்கும். இவை சப்தத்தை உண்டாக்க வளர்ந் த ஆண்களில் வினாடிக்கு 120 – 130முறையும் வளர்ந்த பெண் ணில் 200 முதல் 220 முறையும் குழந்தைக ளில் 300 முதல் 310முறையும் அதிர்கிறது.

நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நம் முடைய குரல்நாண் மிகச் சிறியதாகவும் விறைப்பாகவும் இருக்கும். நாம் வளர வளர நம்முடைய குரல்நாணும் வளர்ச்சியடையு ம். மூன்று அல்லது நான்கு வயது வரை ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் குரல்நாணின் வளர்ச்சி ஒரே அளவில்தான் இருக்கும் ஆகையால் நான்கு வயதுவரை யுள்ள குழந்தைகளின் குரலில் ஆண் மற்றும் பெண் என்ற வித்தியாசத்தை காண முடியாது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்களின் குரல்நாண்கள் பெண்களின் குரல் நாண்களை காட்டிலும் வேகமாக வளர ஆரம்பித்துவிடுகிறது. ஆண்க ளில் குரல்நாண் வளரவளர அதன் விறைப்புத்தன்மை குறைந்து விடுகி றது இதனால் குரலில் மென்மை குறைந்து ஒருவிதகரகரப்பு தொற்றிக்கொள்கிறது. ஆண்க ளோடு ஒப்பிடுகையில் பெண்களின் குரல் நாண்கள் அளவிலு ம் சரி வளர்ச்சியிலும் சரி குறைவாக இருப்பதால் பெ ண்ணில் குரல்நாண்கள் விறைப்படைந்து குர லில் மென்மை கூடுகிறது. இதனால் தான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரல் முற்றிலும் வித் தியாசப்படுகிறது ஆணாக இருந்தாலு ம் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவர் பனிரெண்டு வயதை எட்டும் போது அவருடைய குரல் நாண் அதன் முழுவளர்ச்சியை எட்டி விடும். இதன் காரணமாகத்தான் பனிரெண்டு வயதிற்குப்பிறகு ஆண், பெண் குரல்கள் முற்றிலும் வேறுபடத் துவங்குகிறது.

பெண்களுக்கு மென்மையான குரல் அவர்களுடைய 50-வயது வரை நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கும் குரல்நாண் நெகிழ் ச்சியடைய துவங்குவதால் ஐம்பது வ யதிற்கு பிறகு பெண்களில் சிலருக்கு ஆண்களை போலவே குரல் தடிமனா க மாறிவிடு கிறது, அறுபதுவயதிற்கு பிறகு ஆண் பெண் இருபாலரின் குரல் நாண்களும் ஒன்றுடன்ஒன்று உரசிக் கொள்ள ஆரம்பித்து விடுவதால் அவ ர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண் ணாக இருந் தாலும் சரி குரலில் தள ர்ச்சியும் நடுக்கமும் உண்டாகிறது. இதன் காரணமாகத்தான் அறுபது வயதிற்கு மேற்பட்ட சிலருக்கு வார்த்தைகளை தெளி வாக உச்சரிக்க முடியாமல் போகிறது.

நாம் நமது தொண்டையிலுள்ள குரல்நாண்களை தளர்வடை யாமல் பார்த்துக்கொண்டோமானால் நம்முடைய குரல் எந்த வயதிலும் மாறாமல் இனிமையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். இதற்க்காக நாம் சிலவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மது அருந்துதல் கூடாது, மது அருந்தும் போது தொண்டையிலுள்ள அனைத்து தசைகளும் பாதிப்படை வதால், மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் புகை பிடித்தலையும் மாசு நிறைந்த காற்றுகளை சுவா சிப்பதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டு ம், முக்கியமாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் தொண்டையை வற்றச் செய்யாமல் எப் போதும் ஈர மாக வைத்திருந்தால் எந்த வயதி லும் நம்முடைய குரலில் இளமை யை கட்டிவைத்திருக்க முடி யும்.

குரல்நாண்கள் சப்தத்தைஉண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை பண்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகையால்தான் நம்மால் வார்த் தைகளை தெளிவாக உச்சரிக்க முடிகிறது. மனி தனை தவிர ஏனைய விலங்குகளில் இந்த குரல் நாண்கள் (Vocal Cords) அமைப்பு இல்லாததால் மற்ற விலங்குகளால் ஒலியை உருவாக்க முடி ந்தாலும் கூட அவற்றை பண்படுத்த முடியாமல் போவதால் அவற்றால் மனிதர்களைப்போல வார்த்தை களை தெளிவாக உச்சரிக்க இயலுவதில் லை.

=> சுல்தான்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: