கூந்தல் வளர்ச்சிக்கு உண்ணவேண்டிய உணவும்! சமைக்கும் முறையும்! (ஆண் பெண் -பொதுவானது)
கூந்தல் வளர்ச்சிக்கு உண்ணவேண்டிய உணவும்! சமைக்கும் முறையும்! (ஆண் பெண் -பொதுவானது)
அடர்த்தியான கூந்தல் என்றால் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், இதனை
பெறுவதற்கு பல இயற்கையான வெளிப்பூச்சு க்கள் இருந்தாலும், நாம் சாப்பிடும் உணவிலும் இதற்கான தீர்வு உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்புங்கள். கீழுள்ள உணவை
.
தேவையானவை:
.
பெரிய நெல்லிக்காய் – 10
கறிவேப்பிலை (உருவியது) – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 10
பெருங்காயம் – ஒரு கட்டி,
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிது
.
செய்முறை:
.
நெல்லிக்காய்களை கழுவித்துடைத்து, கொட்டைகளைநீக்கிவிட்டு நன்கு காயவைக்கவும் (இதுதான் ‘நெல்லி முள்ளி’). எண்ணெயைக் காய வைத்து, பெருங்காயத்தை ப் பொரியவிட்டு எடுக்கவும். பிறகு, அதே எண்ணெ யில் மிளகாயையும் வதக்கி, பின் அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலையை அந்த சூட் டிலேயே போட்டுப்புரட்டி எடுத்துக்கொள்ளவும். காய்ந்திருக்கும் நெல்லிமுள்ளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். பிறகு, மிளகாய், உப்பு, பெருங்காயத்தைப்போட்டு அரைத்து, கடை சியாக கறிவேப்பிலையையும் போட்டு அரைத்தெ டுக்கவும். அருமையான வாசனையோடு இருக்கு ம் இப்பொடியை, சூடான சாதத்தில் கலந்தோ அல்லது மோரில் கலக்கி யோ சாப்பிடலாம்.
.
பயன்:
.
கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான நெல்லிக்காயும் கறிவேப்பிலையும் இணைந்திருப்பதால், கருகரு கூந்தலுக்கு கட்டாயம் கேரன்டி. இளநரை யையும் போக்கும்.
.
குறிப்பு:
.
இது ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு பொருந் தக்கூடிய ஒன்று. ஏதேனும் நோய் பாதிப்பில் இருப்ப வர்கள், இதனை உட்கொள்ளும்முன் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் உட்கொள்ளவும்.
.
=>நஸ்ருல்லாஹ்