Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுகமான காதல், திருமணத்திற்கு பின் சோகமாக மாறுவது ஏன்? – ஓர் அலசல்

சுகமான காதல், திருமணத்திற்கு பின் சோகமாக மாறுவது ஏன்? – ஓர் அலசல்

சுகமான காதல், திருமணத்திற்கு பின் சோகமாக மாறுவது ஏன்? – ஓர் அலசல்

காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால்

திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தப் பின்னர் அனைவரும் எளிதில் மாறி விடுவார்கள் என்று சொல்லமுடியாது. அதிலும் ஆண்க ள் காதலர்களாக இருந்துவிட்டு, திடீரென்று பொறுப்பு ள்ள கணவராக மாறுவது என்பது சுலபமான ஒன்றல்ல. அவ்வாறு மாறும்போது பல பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே திருமணத்திற்குபின் கணவர்களாக நடத்துவத ற்கு பதிலாக, காதலிக்கும்போதோ அல்லது நிச்சயதார் தத்திற்கு பின்னரோ பொறுப்புள்ள கணவராக பயிற்சிக் கவேண்டும்.பொதுவாக ஆண்களுக்கு பொறுப்புணர்வு பெண்களைவிட குறைவுதான்.  மேலும் சில ஆண்களு க்கு காதலி கிடைத்து விட்டால், ஒருவித அலட்சியம் வந்து விடும். பின் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்து, குடும்பத்தை நல்ல படியாக நடத்த வேண்டும் என்ற எண்ண மானது குறைந்துவிடும்.

ஆனால் உண்மையில் காதல் வந்தபின்தான் ஆண்கள் மிகவும் பொறுப்புள்ளவராக நடந்துகொள்ளவேண்டும். அதைவிட்டு, பொறுப்பின்றி நடந்தால், நல்ல விதமாக சென்ற காதலும், பிரிவில் முடியும். எனவே அவ்வாறு பொறுப்பில்லாமல் சுற்றும் காதல னை, ஆரம்பத்திலேயே கணவருக்கான பொறு ப்புகளுடன் பயிற்சித்தால், ஒரு நல்ல கணவ னாக எப்போதும் இருப்பார்கள்.

ஆகவே இப்போது எப்படி காதலனை ஒரு நல்ல கணவனாக பயிற்சிப்பதுஎன்று சில வழி களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரி ந்து கொண்டு, அவர்களின் மனதை புண்படுத் தாமல், அவர்களுக்கு தெரியாமலேயே கணவர் கள் எப்படி நடப்பார்களோ அப்படி மாற்றி பழக் கப்படுத்திவிடுங்கள். திருமணத்திற்குபின், உங் களின் ஏடிஎம் உங்கள் கணவர்தான். அவர்தான் அப்போது எந்த ஒருசெலவையும் செய்வார்கள் . எனவே காதலிக்கும்போதே, அத்தகைய செலவை செய்ய வையுங்கள்.  

மருத்துவரிடம் செல்லும்போது, அழைத்துச்செல்லுங்கள் . ஏனெனில் தற்போது பெரும்பாலான ஆண்கள் அதிக வேலை காரணமாக திருமணத்திற்குபின் சரியாக கண்டு கொள்வதில்லை. மேலும் திருமணத்திற்குபின் மருத்துவ ரிடம் அழைத்துச்செல்லவேண்டியதும் அவரது கடமையே . திருமணத்திற்கு பின் அனைத்து வேலைகளையும் பெண் களே செய்யப் போவதில்லை. கணவன், மனைவி இருவ ரும்தான் செய்யவேண்டும். எனவே சமையல் செய்யப் பழகுமாறு சொல்ல வேண்டும்.

பொதுவாக ஆண்கள் பெண்களைவிட சூப்பராக சமைப் பார்கள். எனவே உங்களுக்கு பிடித்த சமையல் எது என்று சொல்லி, அதை எப்படி செய்ய வேண்டுமென்றும் சொல்லிக்கொடுத்து, பழக்கவேண்டும். காதலிக்கும் போ து அடிக்கடி உங்களது பெற்றோரை சந்தித்து பேசுமாறு செய்யவும். அதுவும் இரவுநேர விருந்துசெய்து, அழைத்து பேசினால், நன்றாக இருக்கும். இவ்வாறு ஆரம்பத்திலேயே இந்த பழக்கத்தை மேற்கொள்ள வைத்தால், திருமணத்திற் குபின் உங்களது பெற்றோரை சந்திப்பதில் மறுப்பு ஏதும் கூறமாட்டார்கள்.

காதல் செய்த பின்னர், காதலனுடன் ஷாப்பிங் செல்ல ஆரம்பிக்க வேண்டும். இதனால் 2 நன்மைகள் உள்ள ன. ஒன்று ஷாப்பிங்பில்லை அவர்கள் கட் டுவார்கள் மற்றொன்று நீங்கள் ஷாப்பிங் எப்படி செய்வீர்கள் என்பதை புரிந்துகொ ண்டு பொறுமையுடன் இருப்பார்கள். காதலிக்கும்போதே கணக்கு வழக்கு பார்க்கவேண்டும். உதாரணமாக, வாடகைகொடுப்பது, சேமிப்புக்கு எவ் வளவு ஒதுக்குவது போன்றவற்றை இரு வரும் ஆலோசிக்க வேண்டும். மேலும் இருவரும், இருவரது வங்கி நிலவரத்தை ப் பற்றியும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எந்த மாதிரியான வீடு உங்களுக்குப் பிடி க்கும் என்று ஆரம்பத்திலேயே சொன்னா ல், திருமணத்தி ற்கு பின் இருவரும் அந்த மாதரியான வீட்டிற்கு சந்தோஷமாக குடிபுகலாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: