தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வந்தால்…
தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வந்தால்…
இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் அவர்களால் மிகுந்த பிரபலமான காய் என்று சொன்னால் அது முருங்கைக் காய்தான். முந்தானை முடிச்சு திரைப்படத்தில் காட்சி ஒன்றில்
முருங்கைக்காயில் உள்ள பலான பலான சமாச்சாரங் களை சொல்லியிருப்பார். இதன்பின்புதான் முருங்கை க்காய்க்கு ஏக கிராக்கி ஆனது.
என்ன இவன், பலான விஷயத்துக்கு போய்ட்டானே நீங்க நினைக்கிறீங்க! நான் சொல்ல வந்தது முருங்கை க்காய் பற்றியல்ல, முருங்கைக்கீரையை பற்றியும் அதனை சூப்செய்து குடித்து வந்தால் நமக்கு குறிப்பாக பெண்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
தினமும் முருங்கைக்கீரையை சூப்செய்து குடித்து வந் தால் தலைமுடி அடர்த்தியாகவும், அழுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் கருமையாகவும் நீண்டு செழித்தும் வளரத் தொடங்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். தின மும் தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு இடைவிடாமல் இந்த முருங்கைக்கீரை சூப் செய்து குடித்து வந்தால் கூந்தலில் ஏற்படும் அதிரடியான நல்ல மாற்றத்தினை கண் கூடாக நீங்களே காணலாம். கண்டு மகிழலாம். பிறரை வசீகரிக்கலாம்.